<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599</id><updated>2012-02-06T05:21:37.487-08:00</updated><category term='Prasad'/><category term='மாஜிகல் ரியலிசம்'/><category term='கோணல் புள்ளிகள்'/><category term='சிறுகதை'/><category term='ஒரு நொடிக்கதை'/><category term='Quantum physics'/><category term='ராம்ப்ரசாத்'/><category term='கோலம்'/><category term='aval'/><category term='ச‌ருகுக‌ள்'/><category term='Jerusalem College of Engineering  1998 - 2002'/><category term='JCE'/><category term='ராம்ப்ரசாத் கவிதைகள்'/><category term='விடியலின் வெளிச்சம்'/><category term='முத்தம்'/><category term='பி.எம்.டபிள்யு என்ஜின்'/><category term='ராம்'/><category term='kiS'/><category term='மழை'/><category term='Ramprasath'/><category term='Ram'/><category term='குறுங்கதை'/><category term='கவிதை'/><category term='அடை மழை'/><category term='அறிவியல் புனைவுச் சிறுகதை'/><category term='வண்டுகள் மொய்க்கும் பூ'/><category term='வெட்கம்'/><category term='போலீஸ் வந்துவிட்டால்'/><category term='பனி'/><category term='ராம்ப்ரசாத் சென்னை'/><category term='தமிழ் கவிதைகள்'/><category term='Computer Tamil kavithaikal'/><category term='இருத்தல் தொலைத்த‌ வார்த்தைகள்'/><category term='society'/><category term='பதட்டம்'/><category term='Prasath'/><category term='மெர்குரி கனவுகள்'/><category term='E=MC2 einstein&apos;s equation'/><category term='சைபர் க்ரைம்'/><category term='என்னவள் ஒரு தேவதை'/><category term='love'/><category term='Ramprasad'/><category term='சிறுகதைகள்'/><category term='Neutrinos'/><title type='text'>ராம்ப்ரசாத் கவிதைகள்</title><subtitle type='html'>நான் சாய்ந்து நீளும் நானலில், அழகாய் ஏமாற்றும் கானல் நீரில், தன்னைத்தானே முந்தும் அலைகளில், வீழ்ந்தாலும் அழகாய் வீழும் நீர்வீழ்ச்சிகளில், செங்கல் காடுகளில் கொட்டாத மழையில், வனங்களில் கருக்கும் மேகங்களில் பாடங்கள் கற்ப‌வன். இயற்கை என் முதல் ஆசான்.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>379</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-2075797107136087509</id><published>2012-02-06T05:21:00.000-08:00</published><updated>2012-02-06T05:21:37.499-08:00</updated><title type='text'>இருகப்பற்றியிருக்கிறேன்</title><content type='html'>&lt;b&gt;இருகப்பற்றியிருக்கிறேன்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-ZELLwcXDUJg/Ty_Tg44lN4I/AAAAAAAAAuk/kVT6Ad9CB10/s1600/po-ramprasath.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="306" width="400" src="http://2.bp.blogspot.com/-ZELLwcXDUJg/Ty_Tg44lN4I/AAAAAAAAAuk/kVT6Ad9CB10/s400/po-ramprasath.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கட்டாயங்கள் என்று &lt;br /&gt;ஏதுமில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;நிர்பந்தங்கள் என்று &lt;br /&gt;ஏதுமில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;சூழ்நிலைக‌ள் என்று கூட‌&lt;br /&gt;இல்லை...&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தும் இருகப்&lt;br /&gt;பற்றியிருக்கிறேன்...&lt;br /&gt;&lt;br /&gt;ராம்ப்ரசாத் சென்னை(ramprasath.ram@googlemail.com)&lt;br /&gt;&lt;br /&gt;#நன்றி&lt;br /&gt;உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5261)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-2075797107136087509?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/2075797107136087509/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2012/02/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/2075797107136087509'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/2075797107136087509'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2012/02/blog-post.html' title='இருகப்பற்றியிருக்கிறேன்'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-ZELLwcXDUJg/Ty_Tg44lN4I/AAAAAAAAAuk/kVT6Ad9CB10/s72-c/po-ramprasath.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-4917413868446019617</id><published>2012-01-23T08:48:00.000-08:00</published><updated>2012-01-23T08:48:06.408-08:00</updated><title type='text'>இதுவும் காதல் - சிறுகதை</title><content type='html'>&lt;b&gt;இதுவும் காதல் - சிறுகதை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-eC_04tZluoI/Tx2OvD5kFSI/AAAAAAAAAuY/PhxgQTZqNqg/s1600/story%2Bram.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="300" width="400" src="http://4.bp.blogspot.com/-eC_04tZluoI/Tx2OvD5kFSI/AAAAAAAAAuY/PhxgQTZqNqg/s400/story%2Bram.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் எதிரில் அவன் சற்றே தெனாவட்டாக அமர்ந்திருந்தது போலத்தான் தோன்றியது. சாதாரண பாண்டு, அரைக்கை சட்டைதான். அதையும் தாண்டித் தெரிந்தது அவனின் புஜங்களும், பச்சை நரம்புகளும், குறுகிய வயிற்றுப்பகுதியும். அளவுக்கு மிஞ்சி டெஸ்டோஸ்டீரான் சுரக்கிறது இவனுக்கு, சிக்ஸ் பேக், ஃபேமிலி பேக் என்று ஏதேதோ சொல்வார்களே, அதுவாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'உன்னால முடியுமா?' என்றேன் சந்தேகத்தை வெளிப்படுத்தும் தோரணையில்.&lt;br /&gt;&lt;br /&gt;'மேடம், அது வந்து... ஆங்.. அது பொது இடம்.. பக்கத்துலயே மார்க்கேட்... அதுனால... '&lt;br /&gt;&lt;br /&gt;'தலைவா.. அது பொது இடம்..பக்கத்துலயே மார்க்கேட்... அதுனாலதான் உன்னைக் கூப்பிட்டது... இல்லேன்னா இந்த வேலையை நானே பண்ணமாட்டேனா?'&lt;br /&gt;&lt;br /&gt;'அதுக்கில்லீங்க..அதாவது.. நான் என்ன சொல்ல வந்தேன்னா... '&lt;br /&gt;&lt;br /&gt;'இருப்பத்தி அஞ்சாயிரம் தரேன்...'&lt;br /&gt;&lt;br /&gt;'மேடம், 7 வருஷமா ஜிம் ட்ரெய்னரா இருக்கேன் மேட‌ம். பெருசா தேரல மேட‌ம். சில சினிமா ஹீரோஸ்க்கு கூட ஜிம் ட்ரெய்னரா வேல பாத்திருக்கேன். சான்ஸ் கேட்டேன். டூப் சான்ஸ் தான் குடுத்தாங்க. நாந்தாண்டா ஹீரோங்குற‌ படத்துல கூட‌......' சொல்லிக்கொண்டிருந்தவனின் கண்கள் அவ்வப்போது என் கழுத்தினின்றும் வழுக்கியது ஐயோ என்றிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'ம்ம்ம்.. சரி.. ஐம்பது' இடைமறித்தேன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;'மேடம், பொது இடம்ன்னா ரிஸ்க் ஜாஸ்தி மேடம். "இதெல்லாம் ஒரு படம்ங்குற‌" தமிழ்ப்படத்துல கூட இதே மாதிரி ஒரு பொது இடத்துல சொமர்சால்ட் அடிச்சு...'&lt;br /&gt;&lt;br /&gt;'ஓகே... ஒரு ல‌ட்ச‌ம். ஃபைன‌ல்' என்றபடி பேரத்தை அதோடு நிறுத்திவிட்டு, அந்த இழவெடுத்த ஃபோட்டோக்களையும், நூறு ரூபாய் நோட்டுக்களென ஒரு முப்ப‌தாயிரம் ரூபாய் அடங்கிய மூன்று நோட்டுக்கட்டுகளையும் எடுத்து டேபிளில் எறிந்தேன். அவ‌ன் பார்வை இப்போதும் மேலெழும்புவ‌தாக‌ தெரிய‌வில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'இதுதான் அந்த‌ப் பொண்ணோட‌ ஃபோட்டோ, உனக்கான அட்வான்ஸ். ந‌ல்லா பாத்துக்கோ. எப்ப‌டி என்னங்குற‌தெல்லாம் உன் வேலை.. இவள கடத்திக்கொண்டு வந்து என்னோட கூடுவாஞ்சேரி வீட்டுல அடைக்கனும். ஃபோட்டோ பின்னாடியே அவ அட்ரஸ், கூடுவாஞ்சேரி வீட்டு அட்ரஸ் இருக்கு. எந்தக் கேள்வியும் கேக்கக்கூடாது. நீ இப்போ கிளம்பலாம். உனக்கு ஆறு மணி நேரம் டைம். இன்னிக்கு சாயந்திரம் 7க்கு அந்தப் பொண்ணு என் வீட்ல இருக்கணும். வாசல்ல நம்பர் ப்ளேட் மாத்தி ஒரு ஆம்னி நிக்கிது. அத கடத்தலுக்கு யூஸ் பண்ணிக்கோ. இதுல ஏதாவது தப்பாச்சி இதை விட அதிகமா வேற ஒருத்தனுக்கு பணம் குடுத்து வீட்டுவேலை பாக்குற உன் அம்மா, நர்ஸ் வேல பாக்குற உன் தங்கச்சி இரண்டு பேரையும் போட்டு த‌ள்ளிடுவேன்'  என்றேன். க‌ல‌வ‌ரமாய் இல்லையென்ப‌தாய் தலையாட்டிவிட்டு எழுந்து ந‌ட‌ந்தான் அவ‌ன். நம்பியிருப்பானா? இவனே நம்பும் அளவுக்கு நான் உண்மையாகவே சினிமாக்களில் வரும் சொர்ணாக்கா மாதிரியா இருக்கிறேன் என்று எனக்கே சந்தேகம் வந்தது என் கவலைகளை இன்னும் அதிகப்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;மாலை 7 மணிக்கு என் கூடுவாஞ்சேரி வீட்டின் வாசலில் க்ரீச்சிட்டு நின்றது வெள்ளை மாருதி ஆம்னி. அவன் இறங்கி என்னை நோக்கி நடந்தான். வண்டிக்குள் அந்தப் பெண். மயங்கிக் மயங்கிக்கிடந்தாற்போல் இருந்தது. கைதேர்ந்தவன் போல கச்சிதமாக நேரத்துக்கு வேலையை முடித்திருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;'மேடம், நீங்க சொன்னா மாதிரி அந்தப் பொண்ண கொண்டுவந்துட்டேன் மேடம். பாருங்க' என்றுவிட்டு ஆம்னி கதவு திறந்து காட்டினான். அந்தப் பெண் இப்போதும் மயங்கி....&lt;br /&gt;&lt;br /&gt;'வழில பிரச்சனை ஏதும் இல்லையே?'&lt;br /&gt;&lt;br /&gt;'பிரச்சனை ஆச்சு மேடம். அந்தப் பொண்ணு கடைசி நிமிஷத்துல திமிறிச்சி. கழுத்துல ஒரு போடு போட்டேன். மல்லாக்க விழறப்போ ஜனங்க பாத்துட்டாங்க. போலீஸ்லாம் துரத்திச்சி. அவுங்க கிட்ட மாட்டாம வேகமா வர்றதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடிச்சு மேடம். அப்படியே அந்த நாந்தாண்டா ஹீரோ படத்துல க்ளைமாக்ஸ் ஸ்டண்ட்ல...'.&lt;br /&gt;&lt;br /&gt;'அப்போ, பிரச்சனை இல்ல??.'&lt;br /&gt;&lt;br /&gt;'ஆமா மேடம்'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'ஹ்ம்ம்.. பொண்ணு எப்படி?' என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சில நொடி தயக்கத்தில் என் கேள்வியின் உள்ளத்தர்த்தை மென்றுவிட்டு கல்மிஷமாய் சிரித்தான். எனக்கு வாந்தி வரும்போல இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'அப்புறம் மேடம்.. அந்த மீதி பேமென்ட்...' அவனே கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;'அத அவகிட்ட வாங்கிக்க' என்றேன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் துணுக்குற்றவனாய் நான் கண்களால் சுட்டிய திசையைப் பார்க்க அந்த அழகான பெண் இப்போது வண்டிக்குள்ளாக எழுந்து அமர்ந்தவளாய் அவனையே மெல்லிய புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;'என்ன, பேஜாராயிட்டியா... அவள் உன்னை காதலிக்கிறா. அவளுக்கு உன்னை புடிச்சிருக்கு. ஆனா இப்படித்தான் உன்னை கவுக்கணும்குறது அவளோட ஐடியா. அதான் இந்த ட்ராமா. நீ அவளைக் கடத்தினத ஊரே பாத்திருக்கு. அவ நினைச்சா உன்னை இப்போவே கடத்தல் கேஸுல உள்ள தள்ளலாம். நீ கடத்தின ஆம்னில நம்பர் ப்ளேட் மாத்தல. அது ஒரிஜினல். 5 வருஷம் களி திங்கனும். உள்ள போறியா இல்ல அவள கட்டிக்கிறியா?' என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அவர்களைப் பார்த்துக்கொண்டிருக்க, அவர்கள் இருவரும், இந்த ஊடல், கூடல் என்று சொல்வார்களே, அதைப்போல எதையோ செய்துகொண்டிருந்தனர். எனக்கு எழவு எப்படியோ ஒழியட்டும் என்று இருந்தது. உங்களுக்கு ஒன்றைப் பற்றிச்சொல்ல மறந்துவிட்டேன். என் வயது 24. எடை 110 கிலோ. அந்த அழகான பெண் பெயர் தமிழரசி. அவளும் நானும் ஒரே மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கிறோம். நான் சின்ன வயதிலேயே இப்படி குண்டாகிவிட்டேன். ஒரு பயல் பார்ப்பதில்லை. ஆனால், தமிழரசி என்றால் வழிவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு பற்றிக்கொண்டு வரும். அவளுக்கு குட்டிகுட்டி செராமிக் சிலைகள், புசுபுசு நாய்குட்டி பிடிக்கும். அவனுக்கு வெட்டு, குத்து. வயசுக்கோளாரில் ஹீரோயிஸத்திற்கு அலைகிறாள் அவள். அவன் பாடு சொல்லவே வேண்டாம். பஞ்சப்பரதேசி. என்னையே எத்தனைக்கு பார்த்தான்!!. இவ‌ள் அறிவுரை சொன்னால்மட்டும் கேட்டுவிடவா போகிறாள்? எப்படியும் 30 நாளில் தெளிந்துவிடும். அப்புறம் நாய் மாதிரி அடித்துக்கொள்ளப்போகிறார்கள். எப்படியோ கெட்டு ஒழியட்டும். அவள் நாசாய்ப்போனால் சரிதான். இது எல்லாம் எனக்குத் தெரியும் என்பது அவளுக்கு தெரியாமல் இருந்தால் ரொம்ப ரொம்ப சரிதான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; - ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;#நன்றி&lt;br /&gt;உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5216)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-4917413868446019617?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/4917413868446019617/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2012/01/blog-post_23.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/4917413868446019617'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/4917413868446019617'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2012/01/blog-post_23.html' title='இதுவும் காதல் - சிறுகதை'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-eC_04tZluoI/Tx2OvD5kFSI/AAAAAAAAAuY/PhxgQTZqNqg/s72-c/story%2Bram.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-8344568803465780708</id><published>2012-01-18T05:03:00.000-08:00</published><updated>2012-01-18T05:03:37.803-08:00</updated><title type='text'>இய‌ல்பு</title><content type='html'>&lt;b&gt;இய‌ல்பு&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-mImuLZnQz58/TxbCtp12qFI/AAAAAAAAAuM/90NIZBTekHw/s1600/ramprasath.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="295" width="400" src="http://1.bp.blogspot.com/-mImuLZnQz58/TxbCtp12qFI/AAAAAAAAAuM/90NIZBTekHw/s400/ramprasath.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;கொட்டும் மழையை&lt;br /&gt;தாங்கித் தேக்கத்&lt;br /&gt;துடிக்கின்றன இலைகள்...&lt;br /&gt;&lt;br /&gt;இலைகளுள் நிரம்பித்&lt;br /&gt;தளும்பி வழிகின்றன‌&lt;br /&gt;மழைத்துளிகள்...&lt;br /&gt;&lt;br /&gt;இந்த‌ இலைக‌ளே&lt;br /&gt;இப்ப‌டித்தான்...&lt;br /&gt;&lt;br /&gt;வெறும‌னே&lt;br /&gt;ம‌ழையை ர‌சிப்ப‌தில்லை...&lt;br /&gt;&lt;br /&gt; - ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)&lt;br /&gt;&lt;br /&gt;#நன்றி&lt;br /&gt;உயிர்மை கலை இலக்கிய இதழ்(http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5195)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-8344568803465780708?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/8344568803465780708/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2012/01/blog-post_18.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/8344568803465780708'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/8344568803465780708'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2012/01/blog-post_18.html' title='இய‌ல்பு'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-mImuLZnQz58/TxbCtp12qFI/AAAAAAAAAuM/90NIZBTekHw/s72-c/ramprasath.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-3354017169695901366</id><published>2012-01-14T19:50:00.000-08:00</published><updated>2012-01-14T19:50:24.147-08:00</updated><title type='text'>பிழைச்சமூகம்</title><content type='html'>&lt;b&gt;பிழைச்சமூகம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மண்ணைப் பிழிந்து&lt;br /&gt;நீரை உரிஞ்சுகின்றன&lt;br /&gt;ஆலமரத்தின் வேர்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;தனக்கான நீரின்றி&lt;br /&gt;துவள்கிறது அருகிலேயே&lt;br /&gt;செவ்வாழையொன்று...&lt;br /&gt;&lt;br /&gt;குடியோன் பசிக்கு&lt;br /&gt;நிழலை அள்ளியள்ளித்&lt;br /&gt;தந்துவிட்டு கைபிசைந்து&lt;br /&gt;நிற்கிறது ஆலமரம்...&lt;br /&gt;&lt;br /&gt; - ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)&lt;br /&gt;&lt;br /&gt;#நன்றி&lt;br /&gt;வடக்குவாசல் கலை இலக்கிய இதழ் (டிசம்பர் 2011)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-3354017169695901366?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/3354017169695901366/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2012/01/blog-post_14.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/3354017169695901366'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/3354017169695901366'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2012/01/blog-post_14.html' title='பிழைச்சமூகம்'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-2187922175394578492</id><published>2012-01-02T07:17:00.000-08:00</published><updated>2012-01-02T07:17:23.354-08:00</updated><title type='text'>சுவாரஸ்யங்கள்</title><content type='html'>&lt;b&gt;சுவாரஸ்யங்கள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-qmQJ9EsSlWA/TwHKPppEQCI/AAAAAAAAAuA/9hWeVYad4TA/s1600/ramprasath.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="269" width="400" src="http://2.bp.blogspot.com/-qmQJ9EsSlWA/TwHKPppEQCI/AAAAAAAAAuA/9hWeVYad4TA/s400/ramprasath.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ரயில் தண்டவாளங்களையொட்டி&lt;br /&gt;குவிந்துகிடக்கும் கற்கள்&lt;br /&gt;காந்தமென சொல்லக்&lt;br /&gt;கேட்டகாலங்களில்&lt;br /&gt;என் ப‌ய‌ண‌ங்க‌ளில்&lt;br /&gt;ஜன்னலோர சுவாரஸ்யங்களுக்கு&lt;br /&gt;பஞ்சமிருந்ததில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சுவாரஸ்யங்களே&lt;br /&gt;இப்படித்தான்...&lt;br /&gt;&lt;br /&gt;காந்தமெனப்படுவதில்&lt;br /&gt;அரண்மனை சிம்மாசனமென‌&lt;br /&gt;அறுதியிட்டு இருந்தது&lt;br /&gt;கல்லெனப்படுகையில்&lt;br /&gt;காணாமற் போய்விடுகிறது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)&lt;br /&gt;&lt;br /&gt;#நன்றி&lt;br /&gt;உயிர்மை கலை இலக்கிய இதழ்(http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5156)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-2187922175394578492?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/2187922175394578492/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2012/01/blog-post.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/2187922175394578492'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/2187922175394578492'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2012/01/blog-post.html' title='சுவாரஸ்யங்கள்'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-qmQJ9EsSlWA/TwHKPppEQCI/AAAAAAAAAuA/9hWeVYad4TA/s72-c/ramprasath.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-8649633799341978387</id><published>2011-12-29T20:21:00.001-08:00</published><updated>2011-12-29T20:21:39.242-08:00</updated><title type='text'>கனவுகளின் பாதைகள்</title><content type='html'>&lt;b&gt;கனவுகளின் பாதைகள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-y9xlgN_-AyQ/Tv08HzcVEBI/AAAAAAAAAt0/7TOQaH4OlwA/s1600/time-travel.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="282" width="400" src="http://4.bp.blogspot.com/-y9xlgN_-AyQ/Tv08HzcVEBI/AAAAAAAAAt0/7TOQaH4OlwA/s400/time-travel.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;மிதமிஞ்சி உண்டுவிட்டு&lt;br /&gt;அடங்காத பசியில்&lt;br /&gt;தன்னையும் சேர்த்தே&lt;br /&gt;உண்டுவிடுகிறது அந்தக்&lt;br /&gt;கரிய துளை…&lt;br /&gt;&lt;br /&gt;உண்ட மயக்கத்தில்&lt;br /&gt;கொண்ட உறக்கத்தில்&lt;br /&gt;காணும் கனவுகளிலெல்லாம்&lt;br /&gt;முக்காலமும் உணர்கிறது அது…&lt;br /&gt;&lt;br /&gt;அக்கனவுகளுக்குள் பாதையிட‌&lt;br /&gt;காத்திருக்கிறது சிலிக்கான்&lt;br /&gt;சமூகம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;#நன்றி&lt;br /&gt;திண்ணை இணைய இதழ்(http://puthu.thinnai.com/?p=6613)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-8649633799341978387?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/8649633799341978387/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/12/blog-post_29.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/8649633799341978387'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/8649633799341978387'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/12/blog-post_29.html' title='கனவுகளின் பாதைகள்'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-y9xlgN_-AyQ/Tv08HzcVEBI/AAAAAAAAAt0/7TOQaH4OlwA/s72-c/time-travel.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-4395190568353864195</id><published>2011-12-26T05:39:00.000-08:00</published><updated>2011-12-26T05:39:45.136-08:00</updated><title type='text'>நாஸ்ட்ர‌டாம‌ஸ்</title><content type='html'>&lt;b&gt;நாஸ்ட்ர‌டாம‌ஸ்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-GZQyzEBl-wU/Tvh4zqkiVLI/AAAAAAAAAto/-f22rm71Uls/s1600/ramprasd.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="182" width="277" src="http://3.bp.blogspot.com/-GZQyzEBl-wU/Tvh4zqkiVLI/AAAAAAAAAto/-f22rm71Uls/s400/ramprasd.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மார்கழிமாத‌ ஊத‌ற்காற்று,&lt;br /&gt;வேக‌ங்கூடிய‌ நான்கு ச‌க்க‌ர‌&lt;br /&gt;எந்திர‌க்குதிரையின்&lt;br /&gt;பின்னிருக்கையில் என்னை&lt;br /&gt;எழுப்பிவிட்ட‌ தாம‌த‌க்க‌ண‌ங்க‌ளில்&lt;br /&gt;ஒரு துரித உணவகம்,&lt;br /&gt;ஒரு துணிக்கடை,&lt;br /&gt;ஒரு அடகுக்கடை,&lt;br /&gt;ஒரு நகைக்கடை,&lt;br /&gt;ஒரு பெட்டிக்கடை,&lt;br /&gt;ஒரு மளிகைக்கடை&lt;br /&gt;இவற்றினூடே அவசரமாய்க்&lt;br /&gt;கடந்துபோய்விட்டிருந்தது அந்த‌ மருந்தகம்...&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த‌ நாளின் விடுமுறையில்&lt;br /&gt;மூடிய‌ ம‌ருந்த‌க‌த்தின் க‌த‌வுக‌ளில்&lt;br /&gt;வ‌லுத்துவிடக்கூடிய‌ ஜ‌ல‌தோஷ‌த்தின்&lt;br /&gt;சாத்திய‌ங்க‌ளை நான் முனுமுனுக்கையில்&lt;br /&gt;கேட்கிற‌து அந்த‌க் குர‌ல்&lt;br /&gt;'ஆமா, இவ‌ரு பெரிய‌&lt;br /&gt;நாஸ்ட்ர‌டாம‌ஸூ'....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; - ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)&lt;br /&gt;&lt;br /&gt;#நன்றி&lt;br /&gt;உயிர்மை கலை இலக்கிய இதழ்(http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5138)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-4395190568353864195?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/4395190568353864195/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/12/blog-post_26.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/4395190568353864195'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/4395190568353864195'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/12/blog-post_26.html' title='நாஸ்ட்ர‌டாம‌ஸ்'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-GZQyzEBl-wU/Tvh4zqkiVLI/AAAAAAAAAto/-f22rm71Uls/s72-c/ramprasd.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-5078198030196816885</id><published>2011-12-14T07:38:00.000-08:00</published><updated>2011-12-14T07:38:40.813-08:00</updated><title type='text'>காலி தேனீர் கோப்பை</title><content type='html'>&lt;b&gt;காலி தேனீர் கோப்பை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-Prz7z-1W598/TujC7w7J3MI/AAAAAAAAAtc/OOhQ9idP1eY/s1600/po-ramprasath1.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="135" width="170" src="http://3.bp.blogspot.com/-Prz7z-1W598/TujC7w7J3MI/AAAAAAAAAtc/OOhQ9idP1eY/s400/po-ramprasath1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேஜையிலிருக்கும் காலி&lt;br /&gt;தேனீர்க் கோப்பை&lt;br /&gt;புதிதாக ஒரு பானத்தை&lt;br /&gt;நிரப்ப மட்டும் நினைவூட்டவில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;காலத்தே பருகப்படாத,&lt;br /&gt;எஞ்சிய தேனீரை&lt;br /&gt;சுத்தம் செய்யவும்&lt;br /&gt;நினைவூட்டுகிறது...&lt;br /&gt;&lt;br /&gt;சில மனிதர்களைப் போல‌...&lt;br /&gt;&lt;br /&gt;- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)&lt;br /&gt;&lt;br /&gt;#ந‌ன்றி&lt;br /&gt;உயிர்மை க‌லை இல‌க்கிய‌ இத‌ழ்(http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5099)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-5078198030196816885?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/5078198030196816885/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/12/blog-post_14.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/5078198030196816885'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/5078198030196816885'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/12/blog-post_14.html' title='காலி தேனீர் கோப்பை'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-Prz7z-1W598/TujC7w7J3MI/AAAAAAAAAtc/OOhQ9idP1eY/s72-c/po-ramprasath1.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-3720344027776636990</id><published>2011-12-12T06:27:00.000-08:00</published><updated>2011-12-12T06:27:47.176-08:00</updated><title type='text'>எங்கென்றே தெரியாமல்</title><content type='html'>&lt;b&gt;எங்கென்றே தெரியாமல்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-nkgxZrKu3FI/TuYPJ6vpQvI/AAAAAAAAAtQ/b7EM0MHGwfo/s1600/po-ramprasath1.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="135" width="170" src="http://1.bp.blogspot.com/-nkgxZrKu3FI/TuYPJ6vpQvI/AAAAAAAAAtQ/b7EM0MHGwfo/s400/po-ramprasath1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முக்கோண உலோகச்சுவர்களுக்குள்&lt;br /&gt;சிறையிருக்கின்றன மணித்துளிகள்...&lt;br /&gt;&lt;br /&gt;அவைகளின் இதயத்துடிப்பு&lt;br /&gt;காற்றில் கரையும் எல்லைக்கப்பால்,&lt;br /&gt;என் செவிகள் ,&lt;br /&gt;ஒலிகளுக்காய் காத்திருக்கின்றன...&lt;br /&gt;&lt;br /&gt;கைக்கெட்டும் எனக்கான கனவோ,&lt;br /&gt;தேட விரும்பும் எனக்கான காதலோ,&lt;br /&gt;விரும்பித்துவங்கும் எனக்கான நட்போ,&lt;br /&gt;கடந்துபோகும் எனக்கான பிரயாணமோ,&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எத்தனையோ கூட&lt;br /&gt;கைக்கடிகாரத்தை நீட்டியெடுத்து&lt;br /&gt;காதோடு பொறுத்திக்கொள்ளும்&lt;br /&gt;ஒற்றை இயக்கத்திற்காய் காத்திருக்கும்&lt;br /&gt;கடிகார இதயத்துடிப்பொலிகளின்&lt;br /&gt;இருப்பைப்போல&lt;br /&gt;இன்னமும் எங்கென்றே தெரியாமல்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; - ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)&lt;br /&gt;&lt;br /&gt;#ந‌ன்றி&lt;br /&gt;உயிர்மை க‌லை இல‌க்கிய‌ இத‌ழ்(http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5099)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-3720344027776636990?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/3720344027776636990/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/12/blog-post_12.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/3720344027776636990'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/3720344027776636990'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/12/blog-post_12.html' title='எங்கென்றே தெரியாமல்'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-nkgxZrKu3FI/TuYPJ6vpQvI/AAAAAAAAAtQ/b7EM0MHGwfo/s72-c/po-ramprasath1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-3454846952526895371</id><published>2011-12-09T07:11:00.000-08:00</published><updated>2011-12-09T07:12:33.817-08:00</updated><title type='text'>பிழைகளின் முகம் - கவிதை</title><content type='html'>&lt;b&gt;'பிழைகளின் முகம்' என்ற தலைப்பிலான என் கவிதை, கணையாழி கலை இலக்கியத் திங்களிதழ் டிசம்பர் 2011 இதழில் 66ம் பக்கத்தில் வெளியாகியிருக்கிறது. &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-jIM4xEePfHE/TuIkuaXYcfI/AAAAAAAAAtE/RGqqEasYeKc/s1600/kanaiyazhi.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="400" width="300" src="http://2.bp.blogspot.com/-jIM4xEePfHE/TuIkuaXYcfI/AAAAAAAAAtE/RGqqEasYeKc/s400/kanaiyazhi.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பிழைகளின் முகம் - கவிதை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தூரத்துக் காட்டுக்குயிலின்&lt;br /&gt;மெல்லிசையில்&lt;br /&gt;மயங்கிக்கிடந்தது அந்த‌&lt;br /&gt;அடர்ந்த கானகமும்,&lt;br /&gt;கவிந்த இருளும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையின் மெல்லிசையில்&lt;br /&gt;பிழை சேர்க்கும்&lt;br /&gt;முயற்சிகளின்றிப்போதலில்&lt;br /&gt;எத்தனை யதார்த்தம்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கரிய பிசாசென ஆங்கொருவன்&lt;br /&gt;உள் நுழைந்து தன் போக்கில்&lt;br /&gt;மூங்கில் துளையிட்டூதி&lt;br /&gt;முறையாகச்சேர்ந்த பிழைகளை&lt;br /&gt;இசையென கூவிச்சென்றான்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கானகம் முழுமைக்கும்&lt;br /&gt;அதிர்ந்து ஒடுங்கியது&lt;br /&gt;இயற்கை...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இயற்கை எத்தனை&lt;br /&gt;மென்மையானது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-  ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)&lt;br /&gt;&lt;br /&gt;#நன்றி&lt;br /&gt;கணையாழி கலை இலக்கியத் திங்களிதழ் (டிசம்பர் 2011)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-3454846952526895371?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/3454846952526895371/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/12/blog-post_09.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/3454846952526895371'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/3454846952526895371'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/12/blog-post_09.html' title='பிழைகளின் முகம் - கவிதை'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-jIM4xEePfHE/TuIkuaXYcfI/AAAAAAAAAtE/RGqqEasYeKc/s72-c/kanaiyazhi.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-979944552180660140</id><published>2011-12-05T01:32:00.000-08:00</published><updated>2011-12-05T01:32:51.381-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Neutrinos'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Quantum physics'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='E=MC2 einstein&apos;s equation'/><title type='text'>க‌ரிகால‌ம்</title><content type='html'>&lt;b&gt;க‌ரிகால‌ம்&lt;/b&gt;&lt;br /&gt;(ராம்ப்ரசாத்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-R_rwLT6pWfw/TtyPaC-4ZzI/AAAAAAAAAs4/pAdWf6_EFZI/s1600/e-mc2181111.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="240" width="400" src="http://3.bp.blogspot.com/-R_rwLT6pWfw/TtyPaC-4ZzI/AAAAAAAAAs4/pAdWf6_EFZI/s400/e-mc2181111.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இனி வரப்போகும்&lt;br /&gt;பெயரறியா மின்னிக்கென‌&lt;br /&gt;காத்திருக்கின்றன சில கோட்பாடுகளும்,&lt;br /&gt;தத்துவங்களும்…&lt;br /&gt;&lt;br /&gt;பழையன தொலைத்துவிட்டு&lt;br /&gt;புதியன புகும் நாழிகைகள் காலத்தை&lt;br /&gt;மொழிபெயர்க்கத்துவங்கிவிட்டன…&lt;br /&gt;&lt;br /&gt;கவனங்களின்றி சில‌&lt;br /&gt;பிழைகளின் முகங்கள்&lt;br /&gt;பூசிக்கொண்ட அரிதார‌ங்க‌ள்&lt;br /&gt;உரிந்துவிட்ட‌து…&lt;br /&gt;&lt;br /&gt;இய‌ற்கை எக்காள‌மிட்டு&lt;br /&gt;சிரிக்கிற‌து உரிந்த‌ அரிதார‌ங்க‌ளின் மீது…&lt;br /&gt;&lt;br /&gt;– ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)&lt;br /&gt;&lt;br /&gt;#நன்றி&lt;br /&gt;திண்ணை இணைய இதழ்(http://puthu.thinnai.com/?p=6689)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-979944552180660140?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/979944552180660140/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/12/blog-post_05.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/979944552180660140'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/979944552180660140'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/12/blog-post_05.html' title='க‌ரிகால‌ம்'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-R_rwLT6pWfw/TtyPaC-4ZzI/AAAAAAAAAs4/pAdWf6_EFZI/s72-c/e-mc2181111.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-1463158511817930712</id><published>2011-11-28T05:18:00.000-08:00</published><updated>2011-11-28T05:23:15.631-08:00</updated><title type='text'>பிழைச்சமூக‌ம்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-8bpMCLWDCJw/TtOLNtN2KuI/AAAAAAAAAsg/Q_HUi0z9Mzw/s1600/big-tree-2.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="300" width="400" src="http://2.bp.blogspot.com/-8bpMCLWDCJw/TtOLNtN2KuI/AAAAAAAAAsg/Q_HUi0z9Mzw/s400/big-tree-2.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b&gt;பிழைச்சமூக‌ம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மண்ணைப் பிழிந்து&lt;br /&gt;நீரை உரிஞ்சுகின்றன&lt;br /&gt;ஆலமரத்தின் வேர்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தனக்கான நீரின்றி&lt;br /&gt;துவள்கிறது அருகிலேயே&lt;br /&gt;செவ்வாழையொன்று...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குடியோன் பசிக்கு&lt;br /&gt;நிழலை அள்ளியள்ளித்&lt;br /&gt;தந்துவிட்டு கைபிசைந்து&lt;br /&gt;நிற்கிறது ஆலமரம்...&lt;br /&gt;&lt;br /&gt;- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)&lt;br /&gt;&lt;br /&gt;#நன்றி&lt;br /&gt;திண்ணை இணைய இதழ் (http://puthu.thinnai.com/?p=6403)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-1463158511817930712?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/1463158511817930712/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/11/blog-post_28.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/1463158511817930712'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/1463158511817930712'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/11/blog-post_28.html' title='பிழைச்சமூக‌ம்'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-8bpMCLWDCJw/TtOLNtN2KuI/AAAAAAAAAsg/Q_HUi0z9Mzw/s72-c/big-tree-2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-5835844717428489002</id><published>2011-11-01T09:51:00.001-07:00</published><updated>2011-11-01T09:55:10.443-07:00</updated><title type='text'>ரூபாய் பத்தாயிரம் -  சிறுகதை</title><content type='html'>&lt;b&gt;ரூபாய் பத்தாயிரம் -  சிறுகதை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'ஆங்.. உங்க விலாசம் கிடைச்சது மேம். எங்க ஃபீஸ் ஐயாயிரம். உங்க அப்பாயின்ட்மென்ட் கன்ஃபர்ம்ட் மேம். சீக்கிரம் சந்திக்கலாம். நன்றி.' என்றுவிட்டு மொபைல் அழைப்பை துண்டித்தாள் மலர்.&lt;br /&gt;&lt;br /&gt;'ம்ம்.. யாரு க்ளையன்ட்? ஆள் எப்படி?' மலர் மொபைல் அழைப்பை துண்டித்துவிட்டதை ஓரக்க‌ண்களால் சரிபார்த்துவிட்டு கேட்டாள் கோகிலா.&lt;br /&gt;&lt;br /&gt;'ஒரு பொண்ணு கோகிலா. இங்கிலீஷ்லதான் பேசிச்சி. பேச்சு நல்லா போல்டா பேசுது. ரொம்பவே விவரம். ஸ்வீட் வாய்ஸ். ஏதோ சாஃப்ட்வேர் கம்பெனில வேலை பாக்குதாம். ஆனா, ஏதோ சொந்த விவகாரம் போல. அதான் நேரடியா போகாம, நம்மள மாதிரி வீட்டுக்கு போய் கவுன்சிலிங் பண்றவங்களா பாத்து கால் பண்ணியிருக்கு. கவுன்சிலிங் வேணுமாம்'&lt;br /&gt;&lt;br /&gt;'ம்ம்.. ஈவ்னிங் அஞ்சு மணிக்கு தானே அப்பாயின்ட்மென்ட் குடுத்திருக்க?'.&lt;br /&gt;&lt;br /&gt;'ஆமா கோகி'.&lt;br /&gt;&lt;br /&gt;'சரி.. இப்போ மணி 1. வா சங்கீதால சப்பிட்டுட்டு அப்டியே கோயிலுக்கு போயிட்டு அஞ்சு மணிக்கு அந்த பொண்ண பாக்க போகலாம்'.&lt;br /&gt;&lt;br /&gt;'சரி கோகி, ஆனா, ... மாட்டிக்கமாட்டோம்ல.. நாமளே அரைகுறை. இன்னும் கவுன்சிலிங் சைக்காலஜில‌ டிகிரி கூட வாங்கல.. இவ விவரமா இருக்கா. இவளுக்கு யாரையாச்சும் பெரியாளுங்கள தெரிஞ்சு நம்மள மாட்டிவிட்டுடப்போறா'.&lt;br /&gt;&lt;br /&gt;'ஹேய்... வாயை மூடுடி.. அபசகுனமா.. முடிஞ்ச அளவுக்கு சமாளிப்போம்'&lt;br /&gt;&lt;br /&gt;ஹோட்டல் சங்கீதாவும், அந்த கோயிலும் இவர்கள் பொருட்டும் ஒரு முறை நிரம்பி காலியானது. அந்த விலாசம் சற்றே அலைமோத விட்டே அகப்பட்டது அண்ணா நகரில்.&lt;br /&gt;&lt;br /&gt;'மலர், இதானே அந்த அட்ரஸ்? நல்லா பாத்தியா?'&lt;br /&gt;&lt;br /&gt;'கோகி, திஸ் இஸ் இட்' என்றுவிட்டு அந்த அண்ணா நகர் சாந்தி காலனி அப்பார்ட்மென்டின் தரைதளத்தில் சாலையை நோக்கிய வீட்டின் கதவருகே இருந்த காலிங் பெல்லை அழுத்திவிட்டு காத்திருந்த நொடிகளில் உதடுகளை ஒரு முறை ஈரமாக்கிக்கொண்டாள் கோகிலா.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஃப்ளாட்டுக்கு எதிர் ஃப்ளாட் கதவு ஒருக்களித்து திறந்திருந்தது. எதேச்சயாகத் திரும்பினாலும் நடு ஹாலில் வைக்கப்பட்டிருந்த நெப்போலியன் பாட்டில்கள் தெளிவாகத் தெரிந்தன. உள்ளிருந்து இரண்டு தலைகள் எட்டிப்பார்த்தன. ஆண்கள். அவர்கள் உதடுகள் கருப்பாய் தெரிந்தது. நிரம்பப் புகைப்பார்கள் போல. குளிக்காமல் தூக்கம் உதறி எழுந்தமேனிக்கு இருந்தார்ப்போல இருந்தது. கண்கள் ஒடுங்கி இருந்தது. முகசரும நிறம் சீராக இல்லை. கோகிலா, அவர்களைப் பார்த்துப் புன்னகைப்பதை தவிர்த்து சட்டென‌ திரும்பிக்கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெண் வந்து கதவைத் திறந்தது. அவளை முந்திக்கொண்டு அவளின் முன்னழகு வசீகரித்தது. வயது 25 இருக்கலாம். நல்ல நிறம். உயரம் ஐந்தரை அடி, வீட்டுக்குள்ளேயே அவள் அணிந்திருந்த அந்த துணியாலான அந்த செருப்பு நீங்கலாக. தலை போனி டெயில். மையிட்டு மெருகூட்டப்பட்ட அடர்ந்த புருவங்கள் அவள் முகத்தை திருத்தமென நினைக்கச்செய்தன. அழகான பெரிய கண்கள், வட்ட முகம். அவள் அணிந்திருந்த ஜீன்ஸ் டிசர்டில் ஒல்லியுமில்லாமல், குண்டுமில்லாமல் அளவான உடலை குறித்துக்கொண்டாள் கோகி. எதிர் ஃப்ளாட்டில் எட்டிப்பார்த்த இருவரில் ஒருவர் அவளை நோக்கி புன்னகைத்திருக்கவேண்டும். அவள் கோகிலாவையும் தாண்டி பார்வையைச் செலுத்தி நட்பாய் புன்னகைப்பதை யூகிக்க முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'ஹாய், ஐ அம் கோகிலா. திஸ் இஸ் மை அஸிஸ்டென்ட் மலர்'&lt;br /&gt;&lt;br /&gt;'ஹாய், ஐ அம் மாதங்கி. ப்ளீஸ் கம் இன்'&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பெண் கடனே என சொல்லிக்கொண்டே உள்ளே சென்றுவிட்டது சற்று வித்தியாசமாக இருந்தது. அவளிடம் உள்ளே செல்வதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பாக அதையே ஏற்றுக்கொண்டு கோகி பாதனிகளை குதிகாலால் நெம்பி கழற்றிவிட்டு முதலில் நுழைந்தாள். பின்னாலேயே மலர்.&lt;br /&gt;&lt;br /&gt;வாசலில் அடுக்கடுக்கான ஸ்டாண்டில் ஷூ, ஹீல்ஸ் செப்பல் என விதம்விதமான நிறங்களில் காலணிகள். உள்ளே நுழைந்ததும் 11க்கு 10ல் மார்பிள் பதிக்கப்பட்ட ஹால். அந்தப்பக்க கிட்சனாக இருக்கலாம். பக்கவாட்டில் இரண்டு அறைகள். கதவுகள் அனைத்தும் நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் தேக்கில் செய்திருந்தது. மேல்தட்டு வீடுகளில் மட்டுமே பயன்படுத்தப்படும் சில உயர்ரக பெரிய சைஸ் சோபாக்கள் போடப்பட்டிருந்தன. அதன் எதிரே சாம்சங் டிவி ம்யூட்டில் டெல்லி 6ன் மசக்களி ஹிந்தி பாட்டு ஓடிக்கொண்டிருந்தது. மேலே சில புகைப்படங்கள். அதில் இருந்தவர்களுக்கும் அந்தப் பெண் மாதங்கிக்கும் துளியும் சம்பந்தப் இருப்பதாகத் தோன்றவில்லை. பக்கவாட்டு அறைகள் திறந்தே இருந்தன. அறைக்குள்ளாகவே துணி காயப்போடப்படும்  ஸ்டான்டில் சில உள்ளாடைகளும், பாடட் ப்ராக்களும் காய்ந்துகொண்டிருந்தன. சட்டென கோகிலா மாதங்கியின் வசீகர முன்னழகை ஒரு முறை நினைத்துக்கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;'ப்ளீஸ் பீ சீட்டட்' என்றுவிட்டு மாதங்கி ஒருவர் மட்டும் அமரக்கூடிய ஒரு சோபாவில் நிரைந்துகொள்ள, 'தாங்க்ஸ்' என்றுவிட்டு கோகிலாவும் மலரும் அவள் எதிரே நீளமான சோபாவில் நிரைந்துகொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கிருந்தோ ஒரு அமைதி சட்டென வந்து ஒட்டிக்கொள்ள முயல, அதை உணர்ந்தவளாய் விரட்டும் தோரணையில் தொடர்ந்தாள் மலர்.&lt;br /&gt;&lt;br /&gt;'இந்த ஏரியாவுல நிறைய அப்பார்ட்மென்ட்ஸ். கண்டுபிடிக்க கொஞ்சம் சிரமப்பட்டுட்டோம்'.&lt;br /&gt;&lt;br /&gt;'ம்ம்.. போஷ் ஏரியா..' என்று சலனமே இன்றி போக்கு காட்டினாள் மாதங்கி. மலர் லேசாக உதடு சுழித்ததை கோகிலா மட்டும் கவனித்துக்கொண்டாள். இன்னும் கொஞ்ச நேரம் அமைதிக்கு பிறகு,&lt;br /&gt;&lt;br /&gt;'மாதங்கி, சும்மா நாங்க இங்க உக்காற்ரதுக்காக நீங்க அப்பாயின்ட்மென்ட் வாங்கலன்னு நினைக்கிறேன்?'&lt;br /&gt;&lt;br /&gt;'யெப், நான் நேரா விஷயத்துக்கு வந்துடறேன். ஒரு வருஷன் முன்னாடி, எனக்கு ஒரு லவ்வர் இருந்தான். நாங்க நாலு வருஷமா காலேஜ் லைஃப் முழுசும் காதலிச்சோம். பட், அவன் என்னை கல்யாணம் பண்ணிக்க லைக் பண்ணல. அப்புறம் நான் ஆஃபிஸ் ஜாயின் பண்ணினப்போ என் ஃப்லோர்ல ஒருத்தனோட லவ் வந்தது. பட் கல்யாணம் ம்ஹூம். இப்போ ஒரு பையனோட ப்ரேக் அப் ஆயிடிச்சு. காரணம் கேட்டா, என் ஜாதகம் சரியில்லன்னு அவன் அம்மா சொன்னாங்களாம். ரப்பிஷ். என் கூட சுத்தும்போது அது தெரியலயா அவனுக்கு.ஐ ஃபீல் சம்திங் ராங். நீங்க என் கேஸ ஸ்டடி பண்ணி சொல்லுங்க. வாட்ஸ் கோயிங் ஆன்?'.&lt;br /&gt;&lt;br /&gt;'ம்ம்ம்.. ஓகே.. புரியிது அதுக்கு நான் இன்னும் கொஞ்சம் டீடெயில்ஸ் தெரிஞ்சிக்கணும். அதாவது, உங்க கடந்த கால ஆண் நண்பர்கள் கூட உங்களுக்கான நெருக்கம் பத்தி?'&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரம் யோசித்துவிட்டு, ஒரு ஆழ்ந்த பெருமூச்சுடன் 'ஓ.. கிம்மி எ ஸெக்' என்றுவிட்டு எழுந்து உள்ளே சென்ற மாதங்கி, திரும்பி வந்தமர்கையில் அவள் மடியில் ஒரு லாப்டாப் இருந்தது. அதை அவள் கோகியிடம் நீட்ட, வாங்கி அதிலுள்ள படங்களைப் பார்த்துவிட்டு வாய் பிளந்தாள். சிறிது நேரம் ஆச்சர்யமாய் பார்த்துவிட்டு, மலரிடம் அந்த லாப்டாப்பை நீட்டினாள். அப்போது கோகி கண்ணடித்ததை மாதங்கி கவனிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;'ஆக்ச்சுவலி, உங்க கேஸ் ரொம்ப ஈசி. உங்க பிரச்சனை என்னன்னு புரியிது. அதுக்கு என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்?' என்றாள் கோகி மாதங்கியிடம் திரும்பி.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவரை, அசட்டையாய் இருந்த மாதங்கி முகம் சட்டென பிரகாசமானது.&lt;br /&gt;&lt;br /&gt;'அப்படியா!! உண்மையாவேவா?!!!'&lt;br /&gt;&lt;br /&gt;அவள் முகத்தில் சட்டென ஆயிரம் வாட்ஸ் பல்பின் பிரகாசத்தைப் பார்த்து மலர் உதடு இறுக்கி, லேசாக இடமும் வலமுமாய் ஆட்டியதை இந்த முறை மாதங்கி, கோகி இருவருமே கவனிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;'எஸ்... பட் அதுக்கு உங்க பெயர், ஜாதகம் மாதிரி விஷயங்களையும் நாங்க கன்சிடர் பண்ணனுங்குறதுனால இன்னும் கொஞ்சம் காஸ்ட் ஆகும். இன்னொரு 5000 பரவால்லயா?'.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது மலர் சடாரென திரும்பி கோகியை ஒருமுறை பார்த்துவிட்டு மீண்டும் மாதங்கியின் லாப்டாப்பினுள் முகம் புதைத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஓ.. பட்,  நீங்க ஒரு சைக்காலஜிஸ்ட் தானே. அதானே உங்க வேலை. எதுக்கு எக்ஸ்ட்ரா பேமென்ட்?'.&lt;br /&gt;&lt;br /&gt;'கரெக்ட். நாங்க சைக்காலஜிஸ்ட் தான்னாலும் ஜாதகம், நேமாலஜி பத்திலாம் சேத்துதானே உங்களுக்கு சொல்யூஷன் குடுக்கவேண்டியிருக்கு. அதுக்குத்தான்'.&lt;br /&gt;&lt;br /&gt;'ஓ, ஓகே' என்றுவிட்டு கொஞ்சம் முறுவளித்து கால் நீட்டி ஜீன்ஸ் பாண்ட் பாக்கேட்டிலிருந்து பத்து ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை உறுவி கோகியிடம் நீட்டினாள். &lt;br /&gt;&lt;br /&gt;அவற்றை வாங்கி கைப்பையில் பத்திரப்படுத்திவிட்டு மலரிடம் திரும்பினாள். மலர் தஞ்சாவூர் பொம்மை போல் வேலை முடிந்தது என்பதாய் தலையாட்ட, லாப்டாப்பை சோபாவின் ஓரத்தில் மூடி வைத்துவிட்டு இருவரும் எழுந்துகொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;'என்ன? என்னாச்சு, எழுந்துட்டீங்க?'.&lt;br /&gt;&lt;br /&gt;'ஆமா, வந்த வேலை முடிஞ்சது. கிளம்பறோம். பை.'&lt;br /&gt;&lt;br /&gt;'வாட், என்ன சொல்றீங்க நீங்க? நீங்க இன்னும் எனக்கு முடிவு செல்லல.? கவுன்சிலிங் இன்னும் முடியலன்னு நினைக்கிறேன்'&lt;br /&gt;&lt;br /&gt;'முடிவு குடுத்தாச்சு. உனக்கெல்லாம் பத்தாயிரம் பில் தான் முடிவு'&lt;br /&gt;&lt;br /&gt;'என்ன!! கிறுக்கு புடிச்சிருக்கா உங்களுக்கு?'.&lt;br /&gt;&lt;br /&gt;'எனக்கு இல்லை, உனக்குதான் கிறுக்கு புடிச்சிருக்கு. அஞ்சு வருஷத்துல மூணு லவ்வர்ஸ். தெரியாமத்தான் கேக்குறேன், உன் டிக்ஷனரில பெண் சுதந்திரமா இது? ஒரு காலத்துல கட்டிக்கபோறவனுக்காக வருஷக்கணக்கா கற்பையும், அழகையும் காப்பாத்தியிருந்தாங்க. ஆனா, நீ வெளிப்படையா கடை விரிக்கிற. இப்படி கடைவிரிச்சா கற்பையும் அழகையும் விலை குடுத்து வாங்க‌ பாக்குறவந்தான் வருவான். அவன் கிட்ட நேர்மையை எதிர்பார்க்குற நவீன‌ முட்டாள் நீ. திருடன் கிட்ட ராஜா முழியை எதிர்பாக்குற மாதிரி. எப்படி நடக்கும்?'&lt;br /&gt;&lt;br /&gt;'ஹேய் ச்சீட், உன்னை விடமாட்டேன். என் பத்தாயிரத்தை திருப்பிக் குடு, இல்லேன்னா....' என்றபடி மறித்தாள் மாதங்கி.&lt;br /&gt;&lt;br /&gt;'ஹெல்லோ மேடம், நீ போலீஸ கூட கூப்பிட்டுக்கோ. நீ அந்த மூணு பேரோட அடிச்ச கூத்தெல்லாம் ஃபோட்டோவா உன் லாப்டாப்லேர்ந்து ப்ளூடூத்ல எங்க மொபைல்ல டீடெயில்டா பதிவாகியிருக்கு. சத்தம் போட்டு ஊர கூட்டினா, மொத்தமும் நடுரோட்டுக்கும் வந்திடும். அப்புறம் உனக்கு ஜென்மத்துக்கும் கல்யாணம் நடக்காது.  தெரிஞ்சுக்க' சத்தமாய் ஆக்ரோஷமாய் உருமினாள் கோகிலா. கோகிலாவிடமிருந்து கடுமை கலந்த குரலை அந்தப் பெண் எதிர்பார்க்கவில்லை போலும். வெலவெலத்துப் போய் நின்றிருந்தாள் அந்தப் பெண் மாதங்கி.&lt;br /&gt;&lt;br /&gt;சொன்ன வேகத்தில் வேகமாய் கதவு திறந்து வெளியேற பின்னாலேயே நழுவினாள் மலர். இருவரும் ஃப்ளாட்டிலிருந்து வெளியேறி கடந்து போன ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏறிக்கொள்ள, ஆட்டோ அண்ணா நகர் பன்னிரண்டாவது மெயின் ரோடு அடைந்து சாலையில் விரையத் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;'ஹேய் கோகி, உனக்கு செம தில்லுதான். ஆனா இதெல்லாம் டூமச் டீ. நாமளே ஃப்ராடு. சைக்காலஜி முடிக்காமயே வயித்துப்பிழைப்புக்கு ரகசிய பிரச்சனைகளுக்கு அணுகவும்னு விளம்பரம் குடுத்து டோர் கவுன்சிலிங் பண்றோம். தப்பு தானே. பத்தாயிரம் ரொம்ப பெரிய அமெளன்ட். எனக்கு கில்டியா இருக்குடீ'&lt;br /&gt;&lt;br /&gt;'ஷட் அப். அந்தப் பொண்ணு மாதங்கி பண்ணினது நியாயமா? இது என்னன்னு தெரியுமா?. ஆம்பளைங்களோட புரிஞ்சுக்காத தனத்தை சாதகமா பயன்படுத்திக்கிறது. இவ மட்டும் என்ன யோக்கியமா? ஐ.டி ல இவுங்கலாம் எப்படி சம்பாதிக்கிறாங்கன்னு தெரியாதா. கிளையன்ட் ஒரு டெக்னாலஜி கேட்டா, அவனை ஏமாத்தி அதுக்கு சம்பந்தமே இல்லாத டெக்னாலஜி ஆளைப்போட்டு வேலையை  வாங்கிட்டு பில்லும் போட்டுக்குறாங்கதானே. கம்பெனியா பண்ணினா நியாயம் , நாம பண்ணா தப்பா? அடிப்போடீ, இவளையெல்லாம் இப்படித்தான் ஓட விடணும். தூங்குறவனை எழுப்பிடலாம். தூங்குறா மாதிரி நடிக்கிறவங்களை எழுப்பவே முடியாது. கல்யாணம் பண்ணிக்கத்தான் காதலிக்கிறோம்ங்குற போர்வைல அவசரப்பட்டு துணையை தேடிக்கிற, நினைச்ச நேரம் ஆளை மாத்திக்கிற இந்த மாதிரி ஆளுங்க திருந்தவே மாட்டாங்க. கல்யாணம் தான் நோக்கம்னா அதுவரைக்கும் நட்பே போதுமே. நல்லா இருக்குற பொண்ணுங்க பேரையும் இவ மாதிரி ஆளுங்க கெடுக்குறாங்க' என்றவளுக்கு ஆமோதிப்பாய் தலையசைத்தாள் மலர்.&lt;br /&gt;&lt;br /&gt;- ராம்ப்ரசாத் சென்னை ( ramprasath.ram@googlemail.com )&lt;br /&gt;&lt;br /&gt;#நன்றி&lt;br /&gt;கீற்று இணைய இதழ் (http://keetru.com/index.php?option=com_content&amp;view=article&amp;id=17227:2011-11-01-00-41-23&amp;catid=3:short-stories&amp;Itemid=266)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-5835844717428489002?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/5835844717428489002/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/11/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/5835844717428489002'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/5835844717428489002'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/11/blog-post.html' title='ரூபாய் பத்தாயிரம் -  சிறுகதை'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-4284568284856489244</id><published>2011-10-25T10:29:00.000-07:00</published><updated>2011-10-25T10:41:43.062-07:00</updated><title type='text'>Strangers on a Train ம் நானும்</title><content type='html'>&lt;b&gt;&lt;i&gt;Patricia Highsmith ம் நானும்&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதிசயங்களும், ஆச்சர்யங்களும், வினோதங்களும் நிறைந்ததான இந்த உலகம் இறைவனின் படைப்பு. ஒவ்வொரு அதிசயமும், ஆச்சரியமும், வினோதமும் இறைவனின் சிருஷ்டி. உயிர்களில் உயர்ந்தவனாகக் கருதப்படும் மனிதனால் மனிதனுக்காக உருவாக்கப்பட்ட விடயங்களில் கூட ஓரளவுக்குமேல் மனிதனால் கட்டுப்படுத்தமுடிவதில்லை. இயற்கையிலிருந்து உருவாகும் எதிலும் இயற்கையே ஆதிக்கம் செலுத்துகிறது. தெரிந்த விடயங்களும், தெரியாத விடயங்களும், காலத்தின் குறுக்கீடுகளில் ஆச்சர்யங்களையும், அதிசயங்களையும் புனையும் அழகே தனி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வருடம் 2009. ராம்ப்ரசாத் என்கிற நான் ஒரு கதை எழுதுகிறேன். பெயர் '&lt;b&gt;படுக்கையறைக்கொலை - 3&lt;/b&gt;'. படுக்கையறைக்கொலை - 1 தான் நான் எழுதிய முதல் சிறுகதை. படுக்கை என்கிற இடத்தை வைத்துக்கொண்டு எத்தனை விதங்களில் திகில் கதைகள் எழுதலாமென்று எனக்கு நானே வைத்துக்கொண்ட தேர்வில் மூன்றாவதாக நான் எழுதியது இந்தக் கதை. முதலிரண்டு கதைகளிலும், இதுவரை வெளியான எந்த சிறுகதையிலும் கையாளப்படாத ஒரு தந்திரமாக கதையின் உட்கரு இருக்கவேண்டும் என்று முடிவு செய்துகொண்டேன். இரு பொறியியல் கல்லூரி மாணவர்கள் தற்செயலாக இன்டர் &lt;br /&gt;காலேஜ் கல்ச்சுரல்ஸில் சந்தித்துக்கொள்கிறார்கள். ஒருவன், ரவி, இன்னொருவன் சுரேஷ். தன் தகப்பன் சாவுக்கு காரணமானவனைக் கொல்ல நினைக்கிறான் ரவி. தன் அக்காள் சாவிற்கு காரணமானவனைக் கொல்ல நினைக்கிறான் சுரேஷ். கொலை செய்யப்படுபவரின் எதிரிகள் பட்டியலில் கொலையாளி சந்தேகிக்கப்படுவது தான் பொதுவில் நடப்பது. வித்தியாசமாக, &lt;b&gt;&lt;i&gt;கொலை செய்யப்படுபவரின் எதிரிகள் பட்டியலில் தந்திரமாக கொலையாளியை தப்பவிட்டுவிட்டால்&lt;/i&gt;&lt;/b&gt; எப்படி இருக்குமென்று தோன்றியது. எனக்கு அது மிகச்சிறந்த தந்திரமாக தோன்றவே அதையே கொண்டு கதையாக எழுதினேன். &lt;br /&gt;&lt;br /&gt;ரவியின் எதிரியை சுரேஷ் கொல்கிறான். சுரேஷின் எதிரியை ரவி கொல்கிறான். கொலை நடக்கையில் ரவியும் சுரேஷும் பொது இடத்தில் நின்று வம்பு செய்து, சந்தேகத்திற்கு இடமில்லாதபடி செய்கிறார்கள். இதுதான் என் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமீபமாக வெளியான 'முரண்' திரைப்படம், Strangers on a Train திரைப்படத்தின் தழுவல் என்றெல்லாம் சற்று தூக்கலாக கேள்விப்படவே கொஞ்சம் தகவல் சேகரித்ததில் அதிர்ச்சியளிக்கும் &lt;br /&gt;&lt;br /&gt;ஆச்சர்யம் காத்திருந்தது. Alfred Hitchcock திரைப்படமாக்கிய Patricia Highsmith எழுதிய கதையின் கதைச்சுருக்கம் படித்த போது ஆச்சர்யத்தில் திக்குமுக்காடிப்போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-KceRAJf8TSo/TqbwKG__yUI/AAAAAAAAAsI/omT7HV-aEeI/s1600/Strangers_on_a_Train_-_In_the_dining_car.png" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="165" width="220" src="http://4.bp.blogspot.com/-KceRAJf8TSo/TqbwKG__yUI/AAAAAAAAAsI/omT7HV-aEeI/s400/Strangers_on_a_Train_-_In_the_dining_car.png" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வருடம் 1950. Patricia Highsmith என்ற அமேரிக்கர் ஒரு psychological thriller கதை எழுதுகிறார்.  பெயர் Strangers on a Train. இருவர் ரயிலில் பயணப்படுகிறார்கள். கய் மற்றும் புருனோ. கய்க்கு தன் மனைவியைக் கொல்ல வேண்டும். அதேபோல் புருனோவிற்கு தன் தகப்பனைக் கொல்ல வேண்டும். இருவரும் தங்கள் இரையை மாற்றிக்கொள்ளத் திட்டமிடுகிறார்கள். ஏனெனில் அப்போதுதான் போலீசுக்கு சந்தேகப்பட மோட்டிவ் இருக்காது. இதுவும் செய்யப்படுபவரின் எதிரிகள் பட்டியலில் தந்திரமாக கொலையாளியை தப்பவிட்டுவிடும் தந்திரமே. இதுதான் Strangers on a Train கதை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Strangers on a Train என்கிற கதைக்கும், 'படுக்கையறைக்கொலை -‍ 3' என்கிற என் கதைக்கும் சரியாக 59 வருடங்கள் கால இடைவெளி. நான் இக்கதை எழுதுகையில் இங்கிலாந்தின் ஸ்காட்லாண்டில் பணி நிமித்தம் தங்கி இருந்தேன். முரண் திரைப்படம் பற்றிக் கேள்விப்படும் ஒரு வாரம் முன் வரை எனக்கு Patricia வையோ அல்லது அவர் எழுதிய Strangers on a Train என்கிற நாவல் கதை பற்றியோ எனக்கு ஏதும் தெரியாது, நான் கேள்வியும் பட்டதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியிருக்க, இந்த இரண்டு வெவ்வேறு காலகட்டத்தில் எழுதப்பட்ட கதைகளிலும் கையாளப்பட்ட தந்திரம் ஒன்றே என்பது தான் என்னை வெகுவாக ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. ஆங்கிலத்தில் thought process என்பார்கள். Patricia Highsmith என்பவரை எனக்கும், 1995 லேயே மறைந்துவிட்ட‌ Patricia Highsmith க்கு என்னையும் தெரிந்திருக்க‌ நியாயமில்லை என்றபோதிலும் எங்கள் இருவரையும் இணைத்திருப்பது ஒரே thought process, காலத்தின் குறுக்கீட்டில் ஆச்சர்யத்தின் அழகான புனைவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதை தற்செயல் நிகழ்வு எனலாமா?  வளர்ந்து வரும் கணிப்பொறி யுகத்தில் எத்தனையோ விடயங்களை அலசி ஆராய்ந்து ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயர் தந்து ஆவணப்படுத்திவிட்டு &lt;br /&gt;போய்க்கொண்டே இருப்பதில், புதிதாக வரும் எவருக்கும் எல்லா துறைகளிலும், எல்லா தரவுகளிலும், எல்லா பெயர்களும், அதன் சரித்திரங்களும் தெரிந்திருக்க நியாயமில்லைதான் என்பதால், இதனை மீள் கண்டுபிடிப்பு எனலாமா? இதுபோன்ற மீள்‍‍கண்டுபிடிப்புகள் சாத்தியமாகின்றன எனலாமா? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முரண் திரைப்படத்தில் கூட அதே ஆச்சர்யங்களின் புனைவுகள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-gj-7jFX6t7A/TqbxCDQGPwI/AAAAAAAAAsU/vyUmDyjlYqQ/s1600/murandesktop.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="288" width="216" src="http://3.bp.blogspot.com/-gj-7jFX6t7A/TqbxCDQGPwI/AAAAAAAAAsU/vyUmDyjlYqQ/s400/murandesktop.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பங்களூரிலிருந்து சென்னைக்கு வருகையில் சேரனை சந்திக்கும் பிரசன்னா. சேரனுக்கு மனைவி சரியில்லை. பிரசன்னாவுக்கு தந்தை சரியில்லை. (இங்கே பங்களூரு - சென்னை என்பதையும், சேரன் - பிரசன்னா இருவருக்கும் கொல்லப்பட ஒரு எதிரி இருப்பதையும் குறித்துக்கொள்ளுங்கள்).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படத்தின் ஓரிடத்தில் 'Strangers-ஆன நமக்குள்ள Help பண்ணிக்கிட்டா Motive என்னானு தெரியாமலேயே போயிடும் ரெண்டு பேரும் Easy-ஆ தப்பிச்சுக்கலாம், அப்டியே பிடிக்கிறதா இருந்தாலும் இன்னொரு ஜென்மம் எடுத்துதான் வரணும்'னு பிரசன்னா சொல்வதாகவும், இன்னொரு இடத்தில் "உனக்குப்பிடிக்காத மனைவிய நான் கொல்றேன், எனக்குப்பிடிக்காத என் அப்பன நீ கொல்லு" என்பதாக பிரசன்னா சொல்வதாகவும் விமர்சனங்கள் படித்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'சேகரோ, சுப்புவோ செத்தா அவுங்கள கொலை பண்ற மோட்டிவ் இருக்குற ஆளுங்க லிஸ்ட்ல நம்ம பேர் வராது. சரியா?.............   ஆமா, சேகர கொல்லனும். ஆனா, பழி உன் மேல வரக்கூடாது. சுப்புவையும் கொல்லனும்.  ஆனா, பழி என் மேல வரக்கூடாது. அதனால, சேகர நான் கொல்லனும். நான் கொல்றப்போ நீ பக்கத்துல இருந்த கடையில தகராறு பண்ணின. நீ சேகர் கொலைக்கு துரும்பலவு கூட‌ காரணம் இல்லனு அந்த மத்தவங்களே எவிடன்ஸ் ஆயிட்டாங்க‌. சுப்புவ நீ கொல்லனும். நீ கொல்றப்போ நான் ஒரு கடையில தகராறு பண்ணினேன். அதனால சுப்பு கொலைக்கு நானும் காரணம் இல்லனு அந்த கடைக்காரன் எவிடன்ஸ் ஆயிட்டான்.'&lt;br /&gt;&lt;br /&gt;இது 2009ல் நான் எழுதிய‌ கதையிலிருந்து சில வரிகள். &lt;br /&gt;&lt;br /&gt;இதுவும் இன்னொரு ஆச்சர்யம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனி நான் எழுதிய அந்தக் கதை இங்கே:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;படுக்கையறைக்கொலை - 3&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பங்களூர் கோரமங்களாவில் அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பணக்கார முதலைகளுக்கான தடபுடல் விருந்து மெதுவாக முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. தென்னிந்தியாவைச் சேர்ந்த எல்லா தொழிலதிபர்களும் கலந்துகொண்டிருந்தனர். மூன்றே மூன்று பெண்களைத்தவிர மற்ற அனைவரும் ஆண்கள். முடியும் தருவாயில் அந்த மூன்று பெண் அங்கத்தினர் சென்ற பிறகு மேடையேரிய நவனாகரீக உடை அணிந்த ஒருவன் புதிதாக தொடங்கப்பட்ட ஒரு கலாச்சார மையத்தை பற்றி எடுத்துச் சொல்லத்தொடங்கியிருந்தான்.  அவன் சொல்லச் சொல்ல கேட்டுக்கொண்டிருந்த &lt;br /&gt;எல்லாரையும் போல் விழிகள் விரிந்தது சேகருக்கும், சுப்புவுக்கும். சேகருக்கு சென்னையில் ரியல் எஸ்டேட் பிஸினஸ். சுப்புவுக்கு கடலூரில் கோழிப்பண்ணை, சாராய பிசினஸ் மற்றும் டெக்ஸ்டைல் பிஸினஸ். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விருந்து முடிந்து அனைவரும் சென்னை திரும்பிக்கொண்டிருக்கையில், ஒரே ரூட் தான் என்பதால் தன் காரை பின்னே வரச் சொல்லிவிட்டு சுப்பு, சேகரின் காரில் ஏறிக்கொண்டார். காருக்குள்ளேயே தண்ணிப்பார்ட்டி தொடங்கி விட்டிருந்தது. பேச்சு முழுவதும் அந்த கலாச்சார மையத்தைப்பற்றியே இருந்தது. காலேஜ் அழகிகளுடன் வெளி நாட்டு சுற்றுலா, பணக்கார இளைஙிகளுடன் வீக்கென்ட் கெட்டுகெதர், அயல் நாட்டு சரக்கு, இறக்குமதி செய்யப்பட்ட மர்வானா, அபின், சமூகத்தின் பெரிய அந்தஸ்த்தில் இருக்கும் பணக்காரர்களின் நட்பு இப்படி நிறைய. இருவருக்கும் அப்போதிருந்த ஒரே கவலை, மையத்தில் சேர குறைந்தபட்சம் 50 லட்சம் கையிருப்பு காண்பிக்க வேண்டும், 5 லட்சம் பணம் கட்ட வேண்டும். அவர்களின் வசதிக்கு கொஞ்சம் அதிகம் தானென்றாலும், &lt;br /&gt;சொல்லப்பட்ட சொகுசு ஐட்டங்களும், காலேஜ் அழகிகளுடன் கொண்டாட்டமும் அதற்குள் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டுமென்ற முணைப்பை அதிகப்படுத்தியிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேரம் செல்லச் செல்ல விஸ்கியை முந்திக்கொண்டு வக்கிரம் குடியேறிக்கொண்டிருந்தது. சென்னையில் சுப்பு தன் கார் மாறுகையில் இருவரும் பரஸ்பரம் எப்படியாவது அந்த மையத்தில் கட்டாயம் செர்வதாக முடிவெடுத்துக்கொண்டு பிரிந்தனர். சேகர் முதல்வேலையாக புதிய‌ ரியல் எஸ்டேட் கான்ட்ராக்ட்டிற்கு என்ன வழியென்று யோசித்தான். ரெஸசனில் வீழ்ச்சி அடைந்த ரியல் எஸ்டேட் துறையில் இப்போது பழையபடி திள்ளுமுள்ளு செய்தால் தான் லாபம் பார்க்க முடியும். என்ன செய்யலாம் மென்று யோசனையில் இருந்தவன் கண்களில் மெயின் ரோடை ஒட்டி இருந்த அந்த 10 ஏக்கர் நிலம் பட்டது. வெகு நாட்களாக யாரும் வந்து பார்க்காமல் கிடந்தது நிலம். சேகரின் கார் அந்த இடத்திலேயே ஓர் ஓரமாக நின்றது. ஒரு சிகரெட் பற்றவைத்தபடியே அந்த நிலத்தைப் &lt;br /&gt;பார்த்தபடி தன் அலுவலகத்திற்கு ஃபோன் செய்யலானான் சேகர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரெண்டு நாளில் அந்த நிலத்தில் ரோடு போடும் இயந்திரங்கள் வந்து நின்றது. அரசாங்கத்து பட்டா கூட இல்லாத நிலத்தில் அவசரமாக தெரு விளக்குகள் பொருத்தப்பட்டன. அரசாங்கம் ரோடு போட்டதாய் செய்தி பரப்பப்பட்டது. சேகரின் ஆபீஸில் ஃப்ளாட் வாங்க கூட்டம் கூடியது. சேகரின் ரியல் எஸ்டேட் போர்ட் நடு நிலையாய் நிறுத்தப்பட்டு யாருடைய நிலமோ அநியாயமாய் கையகப்படுத்தப்பட்டது. சுப்புவிற்கு செய்தி போனது. தன்னுடன் இருந்தவன் தன்னை முந்திக்கொண்டு போய் விடுவானோ என்கிற பயம் வந்தது. சுப்பு அவசரப்பட்டான். ஆனாலும் அவனால் அத்தனை பணம் சட்டென உறுவாக்க முடியவில்லை. துணிமணி வியாபாரத்தில் பண்டிகை நாட்கள் போக, வெளி நாட்டு ஆர்டர் கிடைத்தாலே தவிர சட்டேன அத்தனை பணம் பார்க்க முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;கோழிப்பண்ணையிலும் அத்தனை லாபம் உடனே வராது. ஆனால் சேகரை முந்த வேண்டும். எப்படி? மனம் கணக்கு போட்டது. சுப்பு இடமும் வலமுமாய் தன் அலுவலக அறையில் நடந்துகொண்டிருந்த போது, கண்ணாடி சன்னல்களினூடே புதிதாய் வேலைக்குச் சேர்ந்த சங்கரியின் மேல் சுப்புவின் பார்வை நிலைகுத்தி நின்றது. அவளை விழுங்கி விடுவது போல் பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு மையத்தில் சேராமலேயே சேகரை முந்தும் எண்ணம் வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு மாதங்களுக்கு பிறகு, சென்னையை அடுத்த திண்டிவனத்தில், திண்டிவனம் டூ பாண்டிச்சேரி ரூட்டில் ஒரு பொட்டல் காட்டில் இரண்டு வாலிபர்கள் சந்தித்துக்கொள்கின்றனர். ஒருவன், ரவி, இன்னொருவன் சுரேஷ். இருவருக்கும் இடையே கண்ணீர் பொதுவாக இருந்தது.  ரவி உறுமிக்கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'அந்த சேகர போடனும் டா'.&lt;br /&gt;&lt;br /&gt;'அந்த சுப்புவ போட்டாத்தான் செத்துப்போன என் அக்கா மனசு சாந்தியாவும் டா'.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'எப்படி போடறது? நாமலாம் மிடில் க்ளாஸ். நாம இப்ப படிக்கிற இன்ஜினியரிங்க முடிச்சு வெலைக்கு போனா தான் நம்ம குடும்பம் தலைதூக்கும்.  அவனுங்கலாம் பணக்காரனுங்க. என்ன வேணாலும் பண்வானுங்க.என் அப்பாவோட நிலத்தை எப்படி அமுக்கினான்னு சொன்னென்ல. என் அப்பாவால ஹார்ட் அட்டாக்ல போய் சேரத்தான் முடிஞ்சது. உன் அக்காவ, கூட படுக்க சொல்லி நிர்பந்தப்படுத்தினானே அந்த சுப்பு. உன் அக்கா தூக்குல தொங்கி மான‌த்தை காப்பாத்திக்கிட்டா. என்ன பண்ண முடிஞ்சிது நம்மளால. அவனுங்களுக்கு போலீஸ், மந்திரினு ஆளுங்கட்சி செல்வாக்கு இருக்கு. நம்மாள என்ன பண்ணிட முடியும்.'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'முடியும். நம்மால முடியும்.'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'என்ன சொல்ற நீ. எப்படி முடியும்'.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'நாம இன்டர் காலேஜ் கல்ச்சுரல்சுல சந்திச்சோம். நீ சென்னைல படிக்கிற. நான் கடலூர்ல படிக்கிறேன். அதனால உன் அப்பா பத்தியும் என் அக்கா பத்தியும் தெரியவந்து நாம இங்க நிக்கிறோம். இல்லைனா உன்னையும் என்னையும் தொடர்புபடுத்தவேண்டிய கட்டாயம் இல்ல. உன் அப்பா செத்ததுக்கு நீயும் போலீஸ் வரை போகல. என் அக்கா செத்ததுக்கு நானும் போலீஸ்க்கு போகல. சமூகத்தை பொறுத்தவரை உன் அப்பா செத்ததும், என் அக்கா செத்ததும் தினம் பேப்பர்ல வர்ற ஒரு நியூஸ். சோ, சேகரோ, சுப்புவோ செத்தா அவுங்கள கொலை பண்ற மோட்டிவ் இருக்குற ஆளுங்க லிஸ்ட்ல நம்ம பேர் வராது. சரியா?'.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'ஆமா, அதனால?'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'இது ஒரு பெரிய பலம் நம்ம சைடுல'.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'என்னடா சொல்ற? எனக்கு ஒண்ணும் புரியல'.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'இப்போ புரியவேண்டியது இல்ல. நான் சென்னை போய் சில விஷயங்கள் கன்ஃபர்ம் பண்ணனும். பண்ணினதும் உனக்கு கால் பண்றேன். சாமான்யன்னா என்னனு காமிப்போம் அவனுங்களுக்கு'.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரவியும் சேகரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அந்த பார்வையில் ஒரு தீர்க்கம் இருந்தது. இருவரும் மீண்டும் இணைவதாக சொல்லிப்பிரிந்தனர். அடுத்து வந்த மாதத்தில் ஒரு சனிக்கிழமை மாலையில் ஊரை அடித்து உலையில் போட்டு தின்று கொழுத்த ஓநாய்கள் சேகரும், சுப்புவும் அவரவர் வீட்டின் படுக்கையறையில் கழுத்தறுத்த நிலையில் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தனர். வீட்டிலிருந்த நகை, லட்சக்கணக்கில் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. சேகர் வீட்டில் சென்னை போலீஸும், சுப்பு வீட்டில் கடலூர் போலீசும் சல்லடையாய் தேடியது. தப்புத்தப்பான ரேகைகளே கிடைத்தன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மாதத்தின் இறுதியில், சென்னை போலீஸ் தலைமை அலுவலகத்தில் சென்னை, கடலூர் உள்ளிட்ட ஏரியாக்களிலிருந்து போலீஸார் கூடி அந்த மாதத்தில் கண்டுபிடிக்கப்பட மாட்டாத கொலைக்கேஸ்களைப் பற்றி விவாதித்தனர். அப்போது, நகை மற்றும் பணத்திற்காக வெளிமாநிலக் கொள்ளையர்கள் சென்னையிலும் சுற்றுவட்டாரத்திலும் மேலும் நான்கைந்து இடங்களில் கொலை, மற்றும் கொள்ளை செய்த்தாக பேசப்பட்டது. சேகர் மற்றும் சுப்பு கொலைகளும் அப்படி நடத்தப்பட்டிருக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு அந்த ரீதியில் அந்த இரண்டு கேஸ்களின் மேல் விசாரணை தொடரப்பட்டது. ஆனால் அடுத்து வந்த ஆட்சி மாற்றத்தில்  கடைசியில் கேட்பார் யாருமின்றி கிடப்பில் போடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில மாதங்களுக்குப் பிறகு செளகார்ப்பேட்டையில் ஒரு சேட்டு நகை வியாபாரியிடத்தில் வழக்கமாய் கள்ள பிஸினஸ் செய்யும் இளைஞர்கள் நால்வர் திருட்டுத் தங்க நகைகள் கொடுத்து பணம் வாங்கிச்சென்றனர் சத்தமில்லாமல். அந்தப் பணத்தில் அந்த இளைஞர்களின் கமிஷன் போக மூன்றில் இரண்டு பங்கு ரவி மற்றும் சுரேஷிடம் வந்துசேர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு அடுத்த வாரத்தில் சென்னையில் ஈ.சீ.ஆர்  நெடுஞ்சாலையில் இருந்த ஒரு பொட்டல் காட்டில் தனிமையில் ஒரு நாள் ர‌வியும் சுரேஷும் ச‌ந்தித்துக்கொண்ட‌ன‌ர். ச‌ற்று நேர‌ மெள‌ன‌த்துக்குப்பிற‌கு ர‌வி ச‌ன்ன‌மாக‌ ஆர‌ம்பித்தான். 'சுரேஷ், உன் ஐடியா வொர்க் அவுட் ஆயிடிச்சு. நான் இப்போதான் விசாரிச்சுட்டு வ‌ரேன். சேக‌ர் சுப்பு கொலை கேஸ்ல‌ போலீஸ் பீகார்லேர்ந்து ந‌ம்ம‌ ஊருக்கு திருட‌ வ‌ர‌வ‌ங்க‌ள‌ தான் தேடிக்கிட்டிருந்துது. இப்போ ஆட்சி மாறின‌தும் கொஞ்ச‌ ந‌ஞ்ச‌ம் விசாரிச்ச‌தையும் தூக்கி போட்டுட்டாங்க‌. போன‌ ஆட்சிலையே அவ‌னுங்க‌ள‌ தீத்துக்க‌ட்ட‌னும்னு தான் நினைச்சிருக்கானுங்க‌. ஆனா நாம‌ முந்திக்கிட்டோம்.' என்ற‌வ‌னைத் ஆசுவாசப்படுத்திவிட்டு ர‌வி தொட‌ர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'ஆமா, சேகர கொல்லனும். ஆனா, பழி உன் மேல வரக்கூடாது. சுப்புவையும் கொல்லனும்.  ஆனா, பழி என் மேல வரக்கூடாது. அதனால, சேகர நான் கொல்லனும். நான் கொல்றப்போ நீ பக்கத்துல இருந்த கடையில தகராறு பண்ணின. நீ சேகர் கொலைக்கு துரும்பலவு கூட‌ காரணம் இல்லனு அந்த மத்தவங்களே எவிடன்ஸ் ஆயிட்டாங்க‌. சுப்புவ நீ கொல்லனும். நீ கொல்றப்போ நான் ஒரு கடையில தகராறு பண்ணினேன். அதனால சுப்பு கொலைக்கு நானும் காரணம் இல்லனு அந்த கடைக்காரன் எவிடன்ஸ் ஆயிட்டான். சேகர் இருக்குறது சென்னைல. சுப்பு இருக்குறது கடலூர்ல. ரெண்டு இடத்துக்கும் 3 மணி நேரம் ஆகும் பஸ்ல வந்தா. நாம செஞ்சது, ஒரே நாள்ல ரெண்டு பேரும் அவுஙகவுங்க வீட்ல தனியா இருக்குற நேரம் பாத்து கொன்னோம்.  அவ்ளோதான். நல்லவேளை என் ஃப்ரண்ட் ஒருத்தன் கைரேகைகள வச்சி ப்ராஜக்ட் பண்ணினான். அவன்கிட்ட ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ் தெரியாம இருக்க எண்ண பண்ணலாம்னு கேட்டுக்கிட்டோம். அவன் ஹெல்ப் பண்ணினான். ஃபாரென்ஸிக்ல நாம மாட்டிக்கல‌. ஆனா அடுத்து ந‌ட‌ந்த‌து எல்லாம் க‌ட‌வுள் சித்த‌ம் தான். பாரேன். பெரிய‌ த‌லைங்க‌ சாவு. பெரிய‌ விஷ‌யாமாயிருக்கும். அந்த டைம்ல பீகார் &lt;br /&gt;கொள்ளைகாரனுங்க சென்னைல ஆட்டம் போட்ருக்கானுங்க. நாமளும் சேகர், சுப்பு வீட்ல கொள்ளையடிச்சது நாம எதிர்பாத்தாமாதிரி அவங்க பேர்ல விழுந்திடிச்சி.  தொட‌ர்ச்சியா ஆட்சி மாறின‌து ந‌ம‌க்கு சாத‌க‌மா போச்சு. இதான் தெய்வ‌ம் நின்னு கொல்லும்னு சொல்ற‌து. ' என்ற சுரேஷ், சற்றே ஆழமாய் மூச்சுவிட்டுப்பின் தொடர்ந்தான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'எனிவே, நம்ம அக்கா, அப்பா சாவுக்கு காரணமானவங்கள பழி தீத்தாச்சு. இந்த விஷயத்தை இதோட விட்டுடலாம். இனிமே நாம சந்திக்க வேணாம். நாம செஞ்சது சரியா தப்பாங்குற தர்க்கத்துக்கு நாம போக வேணாம். எனக்கு வட நாட்டுல வேலை கிடைச்சிறுக்குடா. நான் நாளைக்கு குடும்பத்தோட கிளம்பறேன். நீயும் யு.எஸ் போறப்போ குடும்பத்தோட போயிடு. நாம மறுபடி சந்திக்கணும்னு இருந்தா காலம் நம்மள சந்திக்க வைக்கட்டும். நாம சந்திக்கிறதுக்கான காரணத்தை விதி தீர்மானிக்கட்டும்'. மனதில் உள்ளவற்றை முழுக்க கொட்டிவிட்டு நிறுத்தினான் சுரேஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆமோதிப்பாய் தலையசைத்து சுரேஷையே பார்த்து நின்றான் ரவி. இருவரும் பிரியும்முன் கடைசியாக ஒரு முறை கைகுலுக்கிகொண்டார்கள். அந்த கைக்குலுக்கலில் ஒரு கனிவான இறுக்கம் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- ராம்ப்ரசாத், ஸ்காட்லாண்ட்.(ramprasath.ram@googlemail.com)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-4284568284856489244?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/4284568284856489244/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/10/strangers-on-train.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/4284568284856489244'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/4284568284856489244'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/10/strangers-on-train.html' title='Strangers on a Train ம் நானும்'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-KceRAJf8TSo/TqbwKG__yUI/AAAAAAAAAsI/omT7HV-aEeI/s72-c/Strangers_on_a_Train_-_In_the_dining_car.png' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-7204284236664769163</id><published>2011-10-24T08:34:00.000-07:00</published><updated>2011-10-24T08:34:00.634-07:00</updated><title type='text'>பிம்பங்களை மொழிபெயர்க்கும் வார்த்தைகள்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-Ni3Ktwmju6w/TqWE_gtsWDI/AAAAAAAAAr8/fkccOljlm7I/s1600/ramprasath.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="300" width="400" src="http://2.bp.blogspot.com/-Ni3Ktwmju6w/TqWE_gtsWDI/AAAAAAAAAr8/fkccOljlm7I/s400/ramprasath.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;பிம்பங்களை மொழிபெயர்க்கும் வார்த்தைகள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிம்பங்களை மொழிபெயர்க்கும்&lt;br /&gt;அசாத்திய வார்த்தைகளைத்&lt;br /&gt;தேடிக்கொண்டிருக்கிறேன்...&lt;br /&gt;&lt;br /&gt;பாதைகளில் இடரும் கற்களையொத்து&lt;br /&gt;வார்த்தைக‌ளுக்க‌மையும்&lt;br /&gt;க‌டிவாள‌ங்க‌ள் பிம்ப‌ங்க‌ளுக்கின்றிப்&lt;br /&gt;போத‌லில் மீந்துவிடும் அந்த‌&lt;br /&gt;ஏதோவொன்றை என்ன‌வென்று சொல்ல‌...&lt;br /&gt;&lt;br /&gt;வார்த்தைக‌ளைப் பிசைந்து,&lt;br /&gt;ஓர‌மாய் ந‌றுக்கி,&lt;br /&gt;ந‌டுவே குழைத்து,&lt;br /&gt;முதுகில் த‌ட்டி,&lt;br /&gt;க‌ன்ன‌த்தில் கிள்ளி,&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவ‌ழியாய் மொழிபெய‌ர்த்துவிட்டேன்&lt;br /&gt;ஒரு பிம்ப‌த்தை...&lt;br /&gt;&lt;br /&gt;சிந்திச்சித‌றி சேதாரமான&lt;br /&gt;வார்த்தைகள் ஒவ்வொன்றிலும்&lt;br /&gt;ஏதேதோ பிம்ப‌ங்க‌ள்&lt;br /&gt;எட்டிப்பார்க்கின்ற‌ன‌....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;#நன்றி&lt;br /&gt;உயிர்மை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=4917)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-7204284236664769163?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/7204284236664769163/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/10/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/7204284236664769163'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/7204284236664769163'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/10/blog-post.html' title='பிம்பங்களை மொழிபெயர்க்கும் வார்த்தைகள்'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-Ni3Ktwmju6w/TqWE_gtsWDI/AAAAAAAAAr8/fkccOljlm7I/s72-c/ramprasath.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-4099515716765813981</id><published>2011-09-19T21:15:00.000-07:00</published><updated>2011-09-19T21:15:15.166-07:00</updated><title type='text'>மழைக் குறிப்புகள்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-YaR6RAwvaPg/TngS1wov45I/AAAAAAAAAr0/tTZTnMACR0E/s1600/raingirl1.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="288" width="400" src="http://1.bp.blogspot.com/-YaR6RAwvaPg/TngS1wov45I/AAAAAAAAAr0/tTZTnMACR0E/s400/raingirl1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b&gt;மழைக் குறிப்புகள்&lt;/b&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;மழைக்குக் குடை பிடித்தால்&lt;br /&gt;குடைக்கு மழை பிடித்துவிடுகிறது...&lt;br /&gt;விரிந்த குடை மடங்க மறுக்கையில்...&lt;br /&gt;&lt;br /&gt;காத‌ல‌ர்க‌ள் குடை பிடித்துக்கொண்டாலும்&lt;br /&gt;காத‌ல்க‌ள் ம‌ட்டும் எப்போதும் ந‌னைந்த‌ப‌டியே...&lt;br /&gt;&lt;br /&gt;நடக்கச்சொல்லி காலைப் பிடித்தாலும்&lt;br /&gt;இடுப்பில் தூக்கிப்போகச் சொல்லி&lt;br /&gt;வாசலில் நின்றழும்&lt;br /&gt;இளைய‌ பிள்ளை குடை...&lt;br /&gt;&lt;br /&gt;ம‌ல‌ட்டு வானம் மேக‌மாய் பூக்கையில்&lt;br /&gt;பூப்புநீராட்டுவிழா ம‌ழை...&lt;br /&gt;&lt;br /&gt;மண்வாசத்தின் நெடு நாள் உறக்கத்தை&lt;br /&gt;நீரூற்றிக் கலைக்கிறது மேகம்&lt;br /&gt;மின்னல் கண்சிமிட்டலுடனும்,&lt;br /&gt;கேலியிடிச்சிரிப்புடனும்...&lt;br /&gt;&lt;br /&gt; - ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)&lt;br /&gt;&lt;br /&gt;#நன்றி&lt;br /&gt;கீற்று இணைய இதழ்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-4099515716765813981?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/4099515716765813981/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/09/blog-post_855.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/4099515716765813981'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/4099515716765813981'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/09/blog-post_855.html' title='மழைக் குறிப்புகள்'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-YaR6RAwvaPg/TngS1wov45I/AAAAAAAAAr0/tTZTnMACR0E/s72-c/raingirl1.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-929134102677515970</id><published>2011-09-19T09:20:00.000-07:00</published><updated>2011-09-19T09:21:44.422-07:00</updated><title type='text'>பிழைகளின் முகம்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-5BPo-j8xihg/Tndrcw5qQNI/AAAAAAAAArs/NLW44xqBIuI/s1600/po-ramprasath.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="400" width="266" src="http://3.bp.blogspot.com/-5BPo-j8xihg/Tndrcw5qQNI/AAAAAAAAArs/NLW44xqBIuI/s400/po-ramprasath.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b&gt;பிழைகளின் முகம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தூரத்துக் காட்டுக்குயிலின்&lt;br /&gt;மெல்லிசையில்&lt;br /&gt;மயங்கிக்கிடந்தது அந்த‌&lt;br /&gt;அடர்ந்த கானகமும்,&lt;br /&gt;கவிந்த இருளும்...&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையின் மெல்லிசையில்&lt;br /&gt;பிழை சேர்க்கும்&lt;br /&gt;முயற்சிகளின்றிப்போதலில்&lt;br /&gt;எத்தனை யதார்த்தம்...&lt;br /&gt;&lt;br /&gt;கரிய பிசாசென ஆங்கொருவன்&lt;br /&gt;உள் நுழைந்து தன் போக்கில்&lt;br /&gt;மூங்கில் துளையிட்டூதி&lt;br /&gt;முறையாகச்சேர்ந்த பிழைகளை&lt;br /&gt;இசையென கூவிச்சென்றான்...&lt;br /&gt;&lt;br /&gt;கானகம் முழுமைக்கும்&lt;br /&gt;அதிர்ந்து ஒடுங்கியது&lt;br /&gt;இயற்கை...&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இயற்கை எத்தனை&lt;br /&gt;மென்மையானது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-  ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)&lt;br /&gt;&lt;br /&gt;#நன்றி&lt;br /&gt;உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=4799)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-929134102677515970?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/929134102677515970/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/09/blog-post_19.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/929134102677515970'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/929134102677515970'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/09/blog-post_19.html' title='பிழைகளின் முகம்'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-5BPo-j8xihg/Tndrcw5qQNI/AAAAAAAAArs/NLW44xqBIuI/s72-c/po-ramprasath.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-3893523457853711591</id><published>2011-09-17T07:02:00.000-07:00</published><updated>2011-09-17T07:02:02.010-07:00</updated><title type='text'>மின்வெட்டு</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-uG8fmJ3LWYc/TnSoQkTV99I/AAAAAAAAArk/Z6JlxC64hlU/s1600/trainstation_watercolour.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="264" width="400" src="http://2.bp.blogspot.com/-uG8fmJ3LWYc/TnSoQkTV99I/AAAAAAAAArk/Z6JlxC64hlU/s400/trainstation_watercolour.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b&gt;மின்வெட்டு&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆலமரத்தினடியில்&lt;br /&gt;மழைக்கு ஒதுங்கியிருந்தது&lt;br /&gt;அந்த ரயில் நிலையம்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வலுத்த மழையில் நனைந்தவைகளனைத்தும்&lt;br /&gt;இப்போதும் வெலுக்கத்துவங்கியிருந்தது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேகங்கள் ஏதும் &lt;br /&gt;முட்டிக்கொள்ளவில்லையென்றாலும்&lt;br /&gt;மின்னல் வெட்டியது &lt;br /&gt;ஆலமரத்தடியில் மட்டும்...&lt;br /&gt;&lt;br /&gt;கருகிய ரயில் நிலையத்தினின்று&lt;br /&gt;வெளிப்பட்டது சிம்னி விளக்கினூடே&lt;br /&gt;ஒரு மெல்லிய மின்னல்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; - ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-3893523457853711591?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/3893523457853711591/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/09/blog-post_17.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/3893523457853711591'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/3893523457853711591'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/09/blog-post_17.html' title='மின்வெட்டு'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-uG8fmJ3LWYc/TnSoQkTV99I/AAAAAAAAArk/Z6JlxC64hlU/s72-c/trainstation_watercolour.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-2364874856357533964</id><published>2011-09-14T19:43:00.000-07:00</published><updated>2011-09-14T19:43:26.660-07:00</updated><title type='text'>செத்துமடியும் ஒளி</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-Th7L-QonAlo/TnFmLmixoVI/AAAAAAAAArc/o4CVKIeRKF8/s1600/nightstreetlight.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="180" width="180" src="http://3.bp.blogspot.com/-Th7L-QonAlo/TnFmLmixoVI/AAAAAAAAArc/o4CVKIeRKF8/s400/nightstreetlight.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;செத்துமடியும் ஒளி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்னியப்பட்டிருக்கும் வராந்தையின்&lt;br /&gt;அத்துவானப்பக்கமிருந்து குரூரக்கோபத்துடன்&lt;br /&gt;எட்டிப்பார்க்கிறது விளக்கொளி...&lt;br /&gt;&lt;br /&gt;இருளுக்கும் விளக்கொளிக்குமான&lt;br /&gt;மெளனப்போரின் உச்சத்தில்&lt;br /&gt;செத்துமடியும் விளக்கொளிப்பிண்டங்களை&lt;br /&gt;கொத்தித்தின்ன வட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன&lt;br /&gt;கழுகாய் சில விட்டில்பூச்சிகள்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; - ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-2364874856357533964?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/2364874856357533964/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/09/blog-post_14.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/2364874856357533964'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/2364874856357533964'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/09/blog-post_14.html' title='செத்துமடியும் ஒளி'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-Th7L-QonAlo/TnFmLmixoVI/AAAAAAAAArc/o4CVKIeRKF8/s72-c/nightstreetlight.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-2721480475259333778</id><published>2011-09-13T19:32:00.001-07:00</published><updated>2011-09-13T19:32:52.205-07:00</updated><title type='text'>உதிரும் மின்மினிகள்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-F3P4baSd72I/TnASPo2sd2I/AAAAAAAAArU/wjUsLp7X8ew/s1600/traininrain.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="300" width="400" src="http://1.bp.blogspot.com/-F3P4baSd72I/TnASPo2sd2I/AAAAAAAAArU/wjUsLp7X8ew/s400/traininrain.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b&gt;உதிரும் மின்மினிகள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆலமரத்தினடியில்&lt;br /&gt;மழைக்குச் சில &lt;br /&gt;ரயில் நிலையங்களும்&lt;br /&gt;ஒதுங்கிவிடுகின்றன...&lt;br /&gt;&lt;br /&gt;இரவு வானத்தைத் துளைத்துப் &lt;br /&gt;புகும் பால்வெளிகளை&lt;br /&gt;மின்மினியென‌ நினைத்து&lt;br /&gt;கவர்ந்துவிடுகின்றன &lt;br /&gt;ஆலம் இலைகள்...&lt;br /&gt;&lt;br /&gt;இலைகளினின்றும் சொட்டுசொட்டாய்&lt;br /&gt;உதிரும் மின்மினிகளை&lt;br /&gt;கவனமாய்ச்சேகரிக்கிறது&lt;br /&gt;தெளிந்த குட்டையொன்று...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; -  ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-2721480475259333778?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/2721480475259333778/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/09/blog-post_6310.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/2721480475259333778'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/2721480475259333778'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/09/blog-post_6310.html' title='உதிரும் மின்மினிகள்'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-F3P4baSd72I/TnASPo2sd2I/AAAAAAAAArU/wjUsLp7X8ew/s72-c/traininrain.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-4548291818443995351</id><published>2011-09-13T10:12:00.001-07:00</published><updated>2011-09-13T19:30:38.838-07:00</updated><title type='text'>யாருமற்ற தண்டவாளம்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-XGYolgODRDs/TnARvLHVH5I/AAAAAAAAArM/YAAv2DVAdaI/s1600/traintrack1.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="112" width="168" src="http://4.bp.blogspot.com/-XGYolgODRDs/TnARvLHVH5I/AAAAAAAAArM/YAAv2DVAdaI/s400/traintrack1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b&gt;யாருமற்ற தண்டவாளம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கவனிப்பார் யாருமின்றி &lt;br /&gt;தனித்திருந்தது தண்டவாளம்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இர‌வு வான‌த்தை துளையிட்டு&lt;br /&gt;பால் வெள்ளை வ‌ண்ண‌த்தில்&lt;br /&gt;திருட்டுத்த‌ன‌மாய் நுழைந்த‌ ஒளி&lt;br /&gt;த‌ண்ட‌வாள‌த்தின் குறுக்கே விழுந்துகிட‌ந்தது &lt;br /&gt;தற்கொலை செய்ய‌ இருக்கலாம்...&lt;br /&gt;&lt;br /&gt;அதன் காரணங்களைப் பற்றி&lt;br /&gt;யாதொரு அசூயையுமின்றி&lt;br /&gt;மெளனித்திருந்தது இரவு... &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-4548291818443995351?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/4548291818443995351/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/09/blog-post_13.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/4548291818443995351'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/4548291818443995351'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/09/blog-post_13.html' title='யாருமற்ற தண்டவாளம்'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-XGYolgODRDs/TnARvLHVH5I/AAAAAAAAArM/YAAv2DVAdaI/s72-c/traintrack1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-5964821342881654532</id><published>2011-09-13T10:09:00.001-07:00</published><updated>2011-09-13T10:09:22.601-07:00</updated><title type='text'>கவனிப்பாரின்றி</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-TYB-_lG0vhc/Tm-OJ9FDpMI/AAAAAAAAArE/6b8PMZUC7uk/s1600/Railwaystation.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="266" width="400" src="http://4.bp.blogspot.com/-TYB-_lG0vhc/Tm-OJ9FDpMI/AAAAAAAAArE/6b8PMZUC7uk/s400/Railwaystation.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கவனிப்பாரின்றி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுற்றிலும் இருளாய்&lt;br /&gt;மத்தியில் வட்டவொளியென‌&lt;br /&gt;இரவைப் போலவே&lt;br /&gt;அரிதாரம் பூசியிருந்தது&lt;br /&gt;அந்த ரயில் நிலையம்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அனாதையாய் ரயில் நிலையத்திற்கு&lt;br /&gt;காவலாய் நிற்கின்றன சில‌&lt;br /&gt;மின் கம்பங்கள் அருகருகே...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மின் கம்பங்களின் தலையில்&lt;br /&gt;வட்ட ஒளியைச்சுற்றிச்சுற்றி&lt;br /&gt;விட்டில் பூச்சிகள் ரீங்கரிக்க‌&lt;br /&gt;கீழே குட்டைத்தண்ணீரில்&lt;br /&gt;குவிந்துகிடக்கிறது பாலொளி&lt;br /&gt;கவனிப்பாரின்றி...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; - ‍ ராம்ப்ரசாத் சென்னை(ramprasath.ram@googlemail.com)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-5964821342881654532?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/5964821342881654532/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/09/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/5964821342881654532'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/5964821342881654532'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/09/blog-post.html' title='கவனிப்பாரின்றி'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-TYB-_lG0vhc/Tm-OJ9FDpMI/AAAAAAAAArE/6b8PMZUC7uk/s72-c/Railwaystation.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-6825982998778546600</id><published>2011-07-18T19:12:00.000-07:00</published><updated>2011-07-18T19:12:24.542-07:00</updated><title type='text'>பச்சை ரிப்பன் - சிறுகதை</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-mbAzWLlg52U/TiTncMYF0MI/AAAAAAAAAq8/pnNd7s7P-Oo/s1600/pachchairippon.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="364" width="283" src="http://4.bp.blogspot.com/-mbAzWLlg52U/TiTncMYF0MI/AAAAAAAAAq8/pnNd7s7P-Oo/s400/pachchairippon.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;பச்சை ரிப்பன் - சிறுகதை&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ம‌ர‌த்தாலான‌ சிறிய‌ டீபாயில், ஒரு சிறிய கோப்பையில் இருந்த தேனீரை யாருடைய முன் அனுமதியுமின்றி ஆற்றிக்கொண்டிருந்தது, மாலை நேரத் தென்றல் காற்று. அந்த ஆறிக்கிட‌ந்த‌ டீக்கோப்பையில் தொடர்ந்திருந்தது  60 வ‌ய‌து ராம‌ச்ச‌ந்திரனின் த‌ளர்ந்த மன நிலையையும், அவரது சிந்தனையை வேறெதோ ஆக்கிரமித்திருந்ததையும். ராமச்சந்திரன் மங்களம் தம்பதிக்கு மூன்று பெண்கள். மூத்தவள் பிரியா அழகானவள், 30 வயதுக்காரி. திருமணமாகி 5 வயது மகளுடன் இருக்கிறாள். பி.காம் படித்தவளானாலும் புகுந்த வீட்டில் வேலை செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டபடியால் வேலைக்குச்செல்லவில்லை. முதல் பெண் திருமணம் என்பதால், ராமச்சந்திரன் செலவு பற்றிப் பார்க்காமல் தடபுடலாய் செய்தார். அதனால் நிறைய பாடங்கள் கற்க நேர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த திருமணங்கள், ஒவ்வொரு முறையும் புதிதாக பாடங்கள் கற்றுக்கொடுக்கத் தவறுவதே இல்லை. யாரொருவர் அனேக திருமணங்களை நடத்தியிருக்கிறாரோ, அவரிடமிருந்து கற்றுக்கொள்ள அந்த பாடங்கள் இருக்கும். அடுத்தவர் திருமணங்களில் இம்மாதிரியான பாடங்கள் ஒரு வகையில் லாபம், கூடமாட ஒத்தாசை செய்பவருக்கு.  &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாமவள் சந்திரிகா, மூத்தவள் அளவுக்கு அழகில்லை என்றாலும் அடுத்த நிலை அழகு. அவளும் பி.காம் படித்திருந்தாள். வயிற்றுப்பிள்ளைக்காரி. பிரசவம் இப்போதோ அப்போதோ என்றிருக்கிறது. சென்ற வருடம் தான் திருமணம் செய்துவைத்தார். மூத்தவளின் திருமணத்தில் கற்ற பாடங்களில் சற்றே சுதாரிப்புடன் தான் செய்தார் சந்திரிகாவின் திருமணத்தை. &lt;br /&gt;&lt;br /&gt;கடைக்குட்டி மஞ்சுளா, சற்றே சுமாரானவள். படிப்பிலும் அத்தனை சுட்டி இல்லை. இருந்தாலும் பெயருக்கு பி.ஏ. படிக்க வைத்தார். அவளுக்கும் மாப்பிள்ளை பார்த்துவிட்டார். மாப்பிள்ளை ஒரு அரசுப்பள்ளியில் ஆசிரியராக வேலையில் இருக்கிறார். திரும‌ண‌ம் அடுத்த‌ மூன்றாவ‌து மாத‌த்தில் ஒரு நாள் ந‌ட‌த்த‌லாம் என்று நிச்ச‌யிக்க‌ப்ப‌ட்ட‌து. ம‌ஞ்சுளா மாப்பிள்ளைப்பைய‌னுட‌ன் தொலைப்பேசி உரையாட‌லில் தொலைந்து போய்விட‌, ம‌ற்ற‌ இர‌ண்டு பெண்க‌ள் அவ‌ர‌வ‌ர் புகுந்த‌ வீட்டிற்கு சென்றுவிட‌, ம‌ங்க‌ள‌மும் ராம‌ச்ச‌ந்திர‌னும் வ‌ழ‌க்க‌ம்போல் க‌டைக்குட்டியின் திரும‌ண‌த்தைத் திட்ட‌மிட‌லில் ஆகும் செலவைக் க‌ண‌க்குப்போட்ட‌தில் வ‌ந்த‌ ஒரு வித‌ ம‌லைப்புதான் அவ‌ரின் த‌ற்போதைய‌ த‌ள‌ர்ந்த‌ ம‌ன‌ நிலைக்குக் கார‌ண‌ம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்க‌ன‌வே ரிடைய‌ர்டு ஆகிவிட்ட‌வ‌ர். வ‌ரும் பென்ஷ‌ன் ப‌ண‌த்தில் தான் வீட்டு வாட‌கையும், ஜீவ‌ன‌மும். சொந்த‌மாக‌ இருந்த‌ நில‌ம் நீச்சைக‌ளை விற்றுத்தான் ம‌ற்ற‌ இர‌ண்டு பெண்க‌ளின் திரும‌ண‌த்தை முடித்தார். க‌டைக்குட்டி ம‌ஞ்சுளாவின் திரும‌ண‌த்தையும் முடித்துவிட்டால் போதும். மீதிக்கால‌த்தை வ‌ரும் பென்ஷ‌னில் ச‌மாளித்துவிட‌லாம். ஆனால், மஞ்சுளா திரும‌ண‌த்திற்குக் குறைந்த‌து மூன்று ல‌ட்சாமாவ‌து தேவைப்ப‌டும். கையில் ஒரு லட்சம் தான் இருக்கிறது. ச‌ந்திரிகாவின் திரும‌ண‌த்தில் மாப்பிள்ளை வீட்டார் பாதித் திரும‌ண‌ செல‌வை ஏற்றுக்கொண்டாலும், வ‌ர‌த‌ட்ச‌ணையாக 4 ல‌ட்சம் பெறுமானமுள்ள நகை கேட்ட‌ன‌ர் என்றுதான் ஊரிலிருந்த‌ சொந்த‌ நில‌த்தை விற்று நகையாக 35 சவரன் போட்டு திரும‌ண‌ம் முடித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது  ம‌ஞ்சுளாவிற்கும் அதே நிலைதான். ப‌ண‌த்திற்கு என்ன‌ செய்வ‌து என்று 2 நாட்க‌ளாக‌ யோசித்து யோசித்து கிறுகிறுத்து போனது ராமச்சந்திரனுக்கும், மங்கல‌த்திற்கும். ஒரு மாற்றம் தேவை என்கிற காரணத்தாலும், பிள்ளைதாய்ச்சிக்காரி சந்திரிகாவைப் பார்த்தும் சில நாட்களாகிப்போய்விட்டதாலும், அவளைப் பார்க்க தம்பதிகள் இருவரும் புறப்பட்டனர். சந்திரிகாவின் வீடு அடுத்த 15வது கிலோமீட்டரில் தான் உள்ளது. பஸ் ஸ்டாண்டிலிருந்து ஆட்டோ பிடித்து அவள் வீடு சென்றனர் தம்பதிகள். வழக்கமான உபசரிப்புகளுடன் தொடங்கியது விருந்தோம்பல், பின் அதைத் தொடர்ந்த உரையாடல் பேச்சுக்களில் மஞ்சுளாவின் திருமணம் தொடர்பான பேச்சுக்கள் மீதான ஆர்வம் சந்திரிகாவின் மாமியார், மாமனார், மாப்பிள்ளை தரப்பிலிருந்து வராதது கண்டு எதையோ உணர்ந்தவராய், பெட்ரூமில் மகளுடன் பேசிக்கொண்டிருந்த மங்கலத்தைக் கிளம்பும்படி சமிஞ்கை செய்தார் ராமச்சந்திரன். சந்திரிகாவின் புகுந்த வீட்டினர், மஞ்சுளாவின் திருமணத்திற்கு எங்கே தங்களிடம் பணம் கேட்டுவிடுவாரோ என்று நினைத்திருக்கலாம் என்றே நினைத்திருந்தார் ராமச்சந்திரன். &lt;br /&gt;&lt;br /&gt;புறப்படும் முன் குங்குமம் எடுக்க பீரோவை சந்திரிகா திறந்து மூடியதில், சந்திரிகாவின் பள்ளிப்பருவ பச்சை ரிப்பனில் சந்திரிகாவிற்கு போட்ட 35 சவரன் நகைகள் ஒன்றாக முடிந்து கிடந்தது தெரிந்தது. மஞ்சுளாவிற்கும் அதே போன்று செய்து போட வேண்டும். விந்தை உலகம். யாருக்கும் பயணில்லாமல் 35 சவரன் தங்கம் பீரோவில் உறங்குகிறது. ஆனாலும் இதற்குத்தான் மீண்டும் ஓட வேண்டியிருக்கிறது இந்த வயதான காலத்தில். ராமச்சந்திரன் நினைத்துக்கொண்டார். அலுத்துக்கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். தம்பதிகள் தங்கள் வீடு திரும்பினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாளை மீதான பயம், என்ன நடக்குமோ என்பதில் இருக்கும் ஒரு தெரியாத தன்மை, எக்குதப்பாக ஏதாவது நடந்துவிட்டால் தன்மானத்தையும், சுயகவுரவத்தையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிர்பந்தம், அதற்குத் தேவை செல்வம், இந்த எண்ணமே செல்வத்தைப் பதுக்குவதில் முடிகிறது. மனிதன் எப்போது மனிதத்தின் மேல் நம்பிக்கை வைக்க மறந்தானோ, மனிதத்தை புரிந்து கொள்ள மறந்தானோ, இயற்கை இதுதான் என்றும், இயற்கையை இப்படித்தான் கையாளவேண்டும் என்று தான் நினைத்த தவறான ஒன்றை ஆணித்தரமாக நம்பத்தொடங்கினானோ அப்போதுதான் தொடங்கியிருக்க வேண்டும் இது போன்ற முகமூடித்தனங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;மறு நாள், வரவு செலவுக் கணக்குத்தீர்க்க தன் முந்தை வருட கையேட்டை புரட்டிக்கொண்டிருந்த போது ராமச்சந்திரனின் கண்ணில் பட்டது அந்த விசிட்டிங் கார்டு. அது 5 வருடம் முன்பு தான் வேலையில் இருந்த போது, ஒரு நாள், விப‌த்தில் சிக்கிக்கொண்ட‌ ஒருவ‌ரை ம‌ருத்துவ‌ம‌னைக்கு கொண்டு சென்று காப்பாற்றிய‌த‌ற்காக‌, அந்த‌ ந‌ப‌ர் 'என்ன‌ உத‌வியானாலும் தொட‌ர்பு கொள்ளுங்க‌ள்' என்று த‌ந்த‌ அவ‌ரின் கார்டு. அவர் பெயர் கூட உசைன். ராம‌ச்ச‌ந்திர‌ன் கிட்ட‌த்த‌ட்ட‌ அதை ம‌ற‌ந்தே போயிருந்தார். இப்போது நினைவுக்கு வ‌ந்த‌து. அவ‌ர் சொந்த‌மாக ஏதோ வைத்திருந்து வாட‌கைக்கு விடுவ‌தாக‌ சொன்ன‌து நினைவுக்கு வ‌ந்த‌து. என்ன‌ வைத்திருந்தார் என்று நினைவில் இல்லை. ஒரு வேளை அது திரும‌ண‌ ம‌ண்ட‌ப‌மாக‌ இருந்தால் ம‌ண்ட‌ப‌ செல‌வு குறையுமே என்று தோன்றிய‌து ராம‌ச்ச‌ந்திர‌னுக்கு. ஏன் குழ‌ப்ப‌ம். ஒரு எட்டு போய் பார்த்துவிட்டுத்தான் வ‌ருவோமே என்று கிள‌ம்பினார் அந்த‌ முக‌வ‌ரிக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த‌ முக‌வ‌ரி உசைனின் வீடு. உசைனுக்கு ந‌ன்றாக‌ நினைவில் இருந்த‌து. ராம‌ச்சந்திர‌னைப் பார்த்த‌தும் க‌ண்டுகொண்டார். கைப்ப‌ற்றி வ‌ர‌வேற்று அம‌ர‌வைத்து, குடுப்ப‌த்தினர் அனைவ‌ரையும் அறிமுக‌ப்ப‌டுத்தினார். மிக‌வும் நெகிழ்ந்தார். ராம‌ச்ச‌ந்திர‌ன் த‌ன்னை காப்பாற்றியிராவிட்டால் தானே இல்லை என்ப‌துபோல் பேசினார். பேச்சுக்க‌ள் வெகு நேர‌ம் தொட‌ர்ந்த‌து. ம‌ஞ்சுளாவின் திரும‌ண‌ம் ப‌ற்றி பேசினார். பேச்சு வாக்கில், உசைன் வைத்திருப்ப‌து ஒரு ஷாப்பிங் காம்பிள‌க்ஸ் என்ற‌றிந்த‌து ச‌ற்றே ஏமாற்ற‌ம‌ளித்த‌து. ம‌ஞ்சுளாவின் திரும‌ண‌ம் ப‌ற்றி அறிந்த‌ உசைன் தானே உத‌வுவ‌தாக‌வும், த‌ன்னைக்காப்பாற்றிய‌த‌ற்கு கைமாறாக‌ செய்ய‌ நினைப்ப‌தாக‌வும் சொன்னார். ஒரு வார‌த்தில் 35 ச‌வ‌ர‌னுக்கான‌ ப‌ண‌த்தை த‌ருவ‌தாக‌ வாக்க‌ளித்தார் உசைன். ராம‌ச்ச‌ந்திர‌ன் நெகிழ்ந்தே போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வார‌ம் க‌ட‌ந்த‌து. தன் வீட்டில் வைத்து 4 ல‌ட்ச‌ம் ரூபாயை ராமச்சந்திரனுக்கு அளித்தார் உசைன். திருப்பித்த‌ர‌ வேண்டிய‌தில்லை என‌வும், ம‌ஞ்சுளா த‌ன‌க்கும் ம‌க‌ள் தானென்றும் ம‌ஞ்சுளா திருமணத்தில் குடும்ப சகிதம் சந்திப்பதாகவும், திருமணத்திற்கான வேலைகளை மேற்கொண்டு கவனிக்கும்படியும் சொல்லிய‌னுப்பினார். ராம‌ச்ச‌ந்திர‌ன் ப‌ஸ்ஸில் வீடு திரும்புகையில் ம‌ழை ச்சோவென‌ பெய்ய‌த்தொட‌ங்கியிருந்த‌து. ராம‌ச்ச‌ந்திர‌னுக்கு ஏனோ அன்றைய‌ ம‌ழை உசைனின் நிமித்த‌ம் பெய்கிற‌தோ என்று ப‌ட்ட‌து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீடு நுழைந்த‌தும் ச‌ந்திரிகாவின் அழும் குர‌ல் ச‌ன்ன‌மாக‌ கேட்டுக்கொண்டிருந்த‌து. ச‌ந்திரிகாவின் வீட்டுல் எல்லோரும் ஒரு திரும‌ண‌த்திற்கு சென்றிருந்த‌ போது பீரோ புல்லிங் கும்ப‌லால் அவ‌ள் பீரோவில் இருந்த‌ 35 ச‌வ‌ர‌ன் ந‌கை திருடு போயிருந்த‌தை அழுகையுட‌ன் ச‌ந்திரிகா விள‌க்கிக்கொண்டிருக்க‌ ம‌ங்க‌ள‌மும், ம‌ஞ்சுளாவும் தேற்றிக்கொண்டிருந்த‌ன‌ர். அங்கே உசைன் த‌ன் ரூமில் தொலைப்பேசியில் க‌ட்ட‌ளையிட்டுக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஃப‌ர்ஹான், கோட‌ப்பாக்க‌த்துல‌ ஒரு வீடு ஒரு 10 நாளா பூட்டியே கிட‌க்கு. நான் விசாரிச்சிட்டேன். பெரிய பணக்காரன் வீடுதான் அது. நீ கை வ‌ச்சிடு. எல்லா ப‌ண‌மும் ஒரே இட‌த்துல‌ குவிஞ்சிட்டா அப்புற‌ம் ம‌த்த‌வ‌ங்க‌ எப்ப‌டி வாழ‌ற‌து. நீ கை வ‌ச்சிடு. எவ்ளோ ந‌கைன்னு சொல்லு. நான் சேட்கிட்ட‌ பேச‌னும்'.&lt;br /&gt;&lt;br /&gt;அவ‌ருக்குப் பின்னால், திற‌ந்திருந்த‌ பீரோவில், ஒரு ப‌ச்சை ரிப்ப‌ன் காற்றில் தொங்கவிடப்பட்டு ஆடிக்கொண்டிருந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-  ‍ ராம்ப்ரசாத், சென்னை (ramprasath.ram@googlemail.com)&lt;br /&gt;&lt;br /&gt;#நன்றி&lt;br /&gt;உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=4575)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-6825982998778546600?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/6825982998778546600/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/07/blog-post_18.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/6825982998778546600'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/6825982998778546600'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/07/blog-post_18.html' title='பச்சை ரிப்பன் - சிறுகதை'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-mbAzWLlg52U/TiTncMYF0MI/AAAAAAAAAq8/pnNd7s7P-Oo/s72-c/pachchairippon.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-7998701804904252571</id><published>2011-07-04T09:51:00.000-07:00</published><updated>2011-07-04T09:51:36.911-07:00</updated><title type='text'>ஒரே ஒரு துளி - துப்பறியும் சிறுகதை</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-iF4eOR_yqvM/ThHvDgxZEXI/AAAAAAAAAq0/bu-O-T-GqW4/s1600/detective.jpg" imageanchor="1" style=""&gt;&lt;img border="0" height="287" width="372" src="http://3.bp.blogspot.com/-iF4eOR_yqvM/ThHvDgxZEXI/AAAAAAAAAq0/bu-O-T-GqW4/s400/detective.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;ஒரே ஒரு துளி - துப்பறியும் சிறுகதை&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'சார், வேதம் பேசறேன் சார். ஆமா சார். ஸ்பாட்க்கு இப்பதான் சார் வந்தேன். அந்த லேடியோட &lt;br /&gt;ஹஸ்பெண்ட் தான் கால் பண்ணினாரு. அவர்ட்ட நான் இன்னும் நேர்ல பேசல‌ சார். அவரு ரொம்ப நேரமா கால் பண்ணினாராம். அந்தம்மா எடுக்கலன்னு வந்திருக்காரு. ஒரு மூணு மணி நேரமா வீடு உள்பக்கமா பூட்டியே இருக்காம் சார். நான் ஃபர்ஸ்ட் அவர்கிட்ட டீடெய்ல்ட் ஃபர்ஸ்ட் இன்ஃபர்மேஷன் ரிப்போர்ட் வாங்கிடறேன் சார். ஐ வில் அப்டேட் யூ சார். ஓகே சார்' &lt;br /&gt;&lt;br /&gt;காதிலிருந்து ஃபோனை எடுத்து பாண்ட் பாக்கேட்டில் நுழைத்தார் இன்ஸ்பெக்டர் வேதம். இடது கை மணிக்கட்டைத் திருப்பி மணி பார்த்துக்கொண்டார். இரவு பத்து மணி. நேரமாகிவிட்டது. ஞாயிற்றுக்கிழமை வேறு. அடாப்ஸிக்கு விடிந்ததும் தான் தகவல் சொல்ல முடியுமென்று தோன்றியது. &lt;br /&gt;வேதம் ஆறடி உயரம். வயது நாற்பது இருக்கும். நல்ல கருப்பு நிறம். ஆனாலும் உடல் முழுவதும் பரவிய சீரான கறுப்பு. ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நிறம். அவருக்கு எந்த கேஸையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பார்க்க வராது. சரியான கோணத்தை முதலில் அடையாளம் கண்டுவிடுவார். நூல் பிடித்தார்ப் போல் விசாரணை செய்வார். சில கேஸ்கள் உடனடியாக முடிந்துவிடும். சில கேஸ்கள் இழுத்தடிக்கும். ஆனால், வேதம் கைவைத்தால் நிச்சயம் முடிந்துவிடும். முடித்துவிடுவார். அதுவும் கனகச்சிதமாக. அந்த இரவிலும் காக்கிச்சட்டையில் விரைப்பாகத்தான் இருந்தார். அவரின் இடுப்பில் ஒரு லட்டி தடிமனான கயிற்றால் கட்டப்பட்டு தொங்கிக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'பாரு, எப்போ போனான்டி அவன்? இல்ல இல்ல. நான் இங்க ஒரு கேஸ்க்கு வந்திருக்கேன். சரி சரி. நான் பிஸியா இருக்கேன். அப்புறம் கால் பண்றேன். ஓ அதுவா.... ' சப்‍இன்ஸ்பெக்டர் கந்தசாமி அவர் மனைவி பார்வதியுடன் பேசிக்கொண்டிருந்தது வேதத்தின் காதில் விழுந்தது. அதைக் கவனிக்க தன் ஆர்வத்தை செலவிட விரும்பாதவராய் வேதம் திரும்பி அந்த ஏரியாவை கவனமாக அவதானிக்கத்துவங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;நுங்கம்பாக்கத்தில் எப்போதும் அமைதியாக இருக்கும் அந்தத் தெரு அன்று, அந்த இரவில் தன் அமைதியை தொலைத்துவிட்டு அழுதுகொண்டிருந்த‌து. தெரு முழுவதும் ஆடம்பரமாய் வீடுகள். ஒன்று அபார்ட்மென்டுகளாக இருந்தன அல்லது ஆடம்பர வீடுகளாக இருந்தன. பல வீடுகளில் ஒன்றிரண்டு பேர்தான் இருப்பார்கள் போலத் தோன்றியது. ஆங்காங்கே மாடிகளிலும், பால்கனிகளிலும் யாரெனும் நின்று எட்டியெட்டிப் பார்த்தபடி நின்றிருந்தனர். விஷயம் தெரிந்துவிட்டது போலும் என்று நினைத்துக்கொண்டார். வேடிக்கை பார்ப்பதில் தான் எத்தனை ஆர்வம். கிட்டே போய், சாட்சி சொல்லக்கூப்பிட்டால் வீட்டுக்குள் அடைந்து கதவு சாத்திக்கொள்ளும் சாமான்யத்தனம் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வேதம் வந்த ஜீப் சற்றுத் தள்ளி நிறுத்தியிருக்க, வேதத்தின் அஸிஸ்டென்ட்  கந்தசாமி தன்னை நோக்கி வருவதை கவனித்துவிட்டு அபார்ட்மென்ட் வாசலை நெருங்க, வேதத்தை வாசலில் பார்த்துவிட்டு ஒருவர் நடையில் வேகங்கூட்டியவராய் நெருங்கினார். அவருக்கு வயது அறுபதைக் கடந்திருக்கலாமென்று தோன்றியது. அந்த இரவு நேரத்திலும் அவர் பாண்டும், சட்டையும் அணிந்திருந்தது அவர் தன்னை எதிர்பார்த்திருப்பாரோ என்று நினைக்கத்தோன்றியது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'சார், நான் சம்பந்தம் சார். சம்பந்தமூர்த்தி. அபார்ட்மென்ட் செக்ரட்டெரி சார்' அவர் தன்னைத் தானே அறிமுகப்படுத்திக்கொண்டதை அவதானித்துக்கொண்டிருந்தார் வேதம். அவர் அறிமுகப்படுத்திக்கொண்ட தோரணையை பார்த்தபோது, "இந்த அபார்ட்மென்ட் பற்றி எதுவானாலும் நாந்தான்" என்று அவர் தன் அதிகாரத்தை நிலைநாட்ட வந்தது போலவே இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;'ஹ்ம் ஐ ஆம் இன்சார்ஜ் ஆஃப் திஸ் கேஸ். ஸ்பாட் எங்க? மேல தானே' என்று கேட்டுக்கொண்டே அபார்ட்மென்டுக்கு மத்தியில் அமைந்த மாடிப்படியில் ஏற, 'ஆமா சார், ஃபர்ஸ்ட் ஃப்லோர்' என்றபடியே பின் தொடர்ந்தார் சம்பந்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் தளம் சற்று குறுகலாகவே இருந்தது. இடது மற்றும் வலது புறத்தில் என இரண்டே இரண்டு ஃப்ளாட்கள். இரண்டும் எதிரெதிரே. இடது பக்க ஃப்ளாட் கதவு மூடியே இருக்க, வலது பக்க ஃப்ளாட் கதவு ஒருக்கலித்துத் திறந்திருந்தது. வேதம் அவதானித்துக்கொண்டிருக்கையிலேயே சம்பந்தம் வேதத்துக்கு வலது பக்கவாட்டில் வந்து நின்று கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;'இந்த ஃப்ளாட்தான் சார்' என்று இடதுபக்க ஃப்ளாட்டை கைகாட்டினார் சம்பந்தம். சந்தன மரத்தாலான கதவு என்பது பார்த்தவுடனேயே தெரிந்தது. மரச்சட்டத்தில் நேர்த்தியாக பொருந்தியிருந்தது. ஐந்தடி உயரத்தில் ஒரு ஃபிஷ் ஐ துவாரம் தெரிந்தது. வேதம் அந்தக் கதவுக்கறுகில் சென்று அந்தத் துவாரம் வழியே பார்த்தார். ஒரு பெண், கத்தியால் குத்தப்பட்டு மல்லாந்துகிடந்தாள். சரியாக கூர்ந்து கவனித்ததில் அவளின் இடது கை வயிற்றின்மேலும் வலது கை அந்தக் கத்தியின் கைப்பிடியின் மேலும் இருந்தது. அந்தக் கோணத்தில் பார்க்கையில் யாருக்கும் அவள் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு செத்துப்போயிருக்கிறாள் என்று தோன்றும் வகைக்கு தெளிவாகத் தெரிந்தது. வேதம் அந்தக் கதவின் கைப்பிடியில் கைவைத்துத் தள்ளிப்பார்த்தார். உள்பக்கம் தாளிடப்பட்டிருப்பதைத் தெளிவாக உணர முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தனக்குப் பின்னால் யாரோ நகரும் அரவம் கேட்டு அவர் திரும்ப, எதிர்பட்டான் ஒருவன் ஜீன்ஸ் பாண்டும், டி சர்டும் அணிந்திருந்தான். வயது 33 இருக்கலாம். அவன் அருகே வந்து நின்ற தோரணையையும், உள்ளே மல்லாந்து கிடந்த அந்தப் பெண்ணின் வயதையும் அனுமானித்ததில் இவந்தான் அவளின் கணவனாக  இருக்குமென்று தோன்றியது. அவனுக்குப் பின்னால் அரைவழுக்கையாய் அந்த வீட்டின் கதவருகே ஒருவர் லுங்கியும் சட்டையும் அணிந்து நின்றிருந்தார்.  அவர்தான் எதிர்வீட்டுக்காரராக இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டார் வேதம்.&lt;br /&gt;&lt;br /&gt;'நீங்க...'&lt;br /&gt;&lt;br /&gt;'சார் நான் ராகவன். நாந்தான் உங்க கிட்ட ஃபோன்ல...'&lt;br /&gt;&lt;br /&gt;'ஓ நீங்கதானா அது. சோ, அந்தப் பொண்ணொட ஹஸ்பென்ட் நீங்கதான் இல்லயா?.. ஓகே.. இப்படி வாங்க' என்றுவிட்டு மாடிப்படியை நோக்கி இரண்டடி முன்னேற பிந்தொடர்ந்தான் ராகவன். அந்த லுங்கிக்காரரும், சம்பந்தமும் இப்போது ஒன்றாய் நின்றுகொண்டே தங்களுக்குள் ஏதோ கிசுகிசுத்துக்கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;'ம்ம்.. சொல்லுங்க ..என்னதான் நடந்தது?' வேதம் பணிக்க, கந்தசாமி கையிலிருந்த ஃபைலைத் திறந்து, பாக்கேட்டிலிருந்த பேனாவை உருவிக் குறிப்பெடுக்க ஆயத்தமானார். &lt;br /&gt;&lt;br /&gt;'சார், ஸ்வேதா என் வைஃப் சார். அரேன்ஜ்ட் மேரேஜ் சார். இந்த மாசத்தோட இரண்டு வருஷம் ஆகுது சார். நான் எப்பவுமே ஞாயித்துக்கிழமை 6 மணிக்கு பக்கத்துல இருக்குற மாலதி தியேட்டர்ல 7 மணி ஷோவுக்கு படம் பாக்க போவேன் சார். என் வைஃப் ஸ்வேதா சில நேரம் வருவா. சில நேரம் வரமாட்டா. இன்னிக்கு நான் போலாம்னு சொன்னப்போ, தூங்கறேன்னு சொன்னா. சரின்னு நானும் அவள வீட்டுலயே விட்டுட்டு போயிட்டேன் சார். இப்படி பண்ணிக்குவான்னு நினைக்கல சார்' என்றுவிட்டு குலுங்கிகுலுங்கி அழத்துவங்கினார் ராகவன்.&lt;br /&gt;&lt;br /&gt;'ராகவன், ப்ளீஸ் கம்போஸ் யுவர்செல்ஃப்' ராகவனின் தோளில் கைவைத்து அழுத்தியபடி ஆற்றினார் வேதம். இதைப் போல் அனேகம் தரம் நடந்திருக்கிறது எத்தனையோ கேஸ்களில். ஆதலால் அவருக்கு இது அந்தத் தருணத்தில் சற்று நேரவிரயமாக ஆயாசமாகப் பட்டது. இன்னும் பாடியைப் பார்க்கவில்லை. அதற்கு நேரமாகும்போல் தோன்றியது. அதன் பிறகோ, அல்லது அதற்குள்ளோ விஷயம் தெரிந்து ராகவனின் உறவினர்களோ, நண்பர்களோ வந்துவிட்டால் ராகவனை அண்டி விசாரணைகள் மேற்கொள்வது கடினமென்று தோன்றியது. கேட்க வேண்டிய கேள்விகளை இப்போதே கேட்டுவிட்டால் உத்தமம் என்று தோன்றியது. ராகவன் தன் அழுகையை துடைத்துக்கொள்ள அவகாசம் தந்துவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'ராகவன், நீங்க தப்பா நினைக்கலன்னா உங்ககிட்ட ஒண்ணு கேக்கலாமா?'.&lt;br /&gt;&lt;br /&gt;'ம்ம்ம்ம்'.&lt;br /&gt;&lt;br /&gt;'கல்யாணத்துக்கு முன்னாடி உங்க வைஃபுக்கு ஏதாவது காதல் கீதல்ன்னு...'&lt;br /&gt;&lt;br /&gt;'இ..இல்ல சார். நான் கேட்டப்போ அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லன்னுதான் சார் சொல்லியிருக்கா'.&lt;br /&gt;&lt;br /&gt;'ம்ம்... சினிமாவுக்கு போனேன்னு சொன்னீங்களே. டிக்கட் வச்சிருக்கீங்களா?'.&lt;br /&gt;&lt;br /&gt;'இருக்கு சார், இதோ' என்றுவிட்டு பாண்டு பாக்கேட்டில் கைவிட்டு டிக்கேட்டை உருவி வேதத்திடம் தந்தார் ராகவன். வேதம் வாங்கிப் பார்த்துவிட்டு தன்னுடைய பாக்கேட்டில் வைத்துக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;'சரி ராகவன். நீங்க இங்கயே இருங்க' என்றுவிட்டுத் திரும்பி 'கந்தசாமி, சம்பந்தம் நீங்க ரெண்டு பேரும் என் கூட வாங்க'  குறிப்பெடுத்துக்கொண்டிருந்த கந்தசாமியையும், லுங்கிக்காரருடன் கிசுகிசுத்துக்கொண்டிருந்த சம்பந்தத்தையும் பணித்துவிட்டு படியிறங்கி வேதம் நடக்க, கந்தசாமியும், சம்பந்தமும் வேதத்தை தொடர்ந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இறங்கி வருகையிலேயே, மீண்டும் கந்தசாமியின் செல்ஃபோன் சிணுங்க, உடனே எடுத்தார் கந்தசாமி.&lt;br /&gt;&lt;br /&gt;'ஹலோ... ஆங் பாரு, வந்துட்டானா? இன்னிக்கே பாத்தாகனுமாமா? ஹ்ம்ம்.. நான் ஒண்ணும் சொல்றதுக்கில்ல. இதுல காமிக்கிற ஆர்வத்தை கொஞ்சம் படிப்பிலயும் காமிக்க சொல்லு. சரி சரி. நான் வேலையா இருக்கேன். அப்புறம் பேசுறேன். வை' என்றுவிட்டு ஃபோனை அணைத்தார். வழக்கமான குடும்ப சச்சரவுகள் இத்தியாதி என்று நினைத்துக்கொண்டார் வேதம். கந்தசாமிக்கு கல்லூரி செல்லும் வயதில் ஒரு பையன் இருப்பதாகத் தெரியும் அவருக்கு. வரட்டுப் பிடிவாதக்காரனாம். கந்தசாமி சொல்லக் கேட்டிருக்கிறார். இந்த காலத்துப் பையன்கள் யாரைத்தான் மதித்தார்கள் என்று தோன்றியது அவருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;வேதம் அபார்ட்மென்ட் வாசலை அடைந்து காம்பவுண்ட் சுவருக்குள்ளாக வலதுபக்கம் திரும்பி, ராகவனின் ஃபளாட்டை அண்ணாந்து பார்த்தபடியே நடக்க, கந்தசாமியும் பின்னாலேயே தொடர்ந்தார். பின்னாலேயே வால் போல சம்பந்தமும். ராகவன் வீட்டின் எல்லா ஜன்னல்களும் மூடியே இருந்தன. கண்ணாடி ஜன்னல்கள் மரச்சட்டத்தில் பொறுத்தப்பட்டதான கதவுகளைக் கொண்டிருந்தன‌. பின்பக்கமாய் இருந்த பால்கனிக் கதவும் அதை ஒட்டிய ஜன்னலும் கூட இறுக்கமாய் மூடப்பட்டிருந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;'சம்பந்தம், உங்கள ஒண்ணு கேக்கலாமா?'&lt;br /&gt;&lt;br /&gt;'கேளுங்க சார்'.&lt;br /&gt;&lt;br /&gt;'ராகவனும் அவர் மனைவி ஸ்வேதாவும் இங்க எத்தனை வருஷமா இருக்காங்க?'.&lt;br /&gt;&lt;br /&gt;'சார் கல்யாணமான புதுசுலேர்ந்தே இங்கதான் சார் இருக்காங்க'.&lt;br /&gt;&lt;br /&gt;'ம்ம்.. அவுங்களுக்குள்ள உறவு எப்படி? அடிக்கடி சண்ட போட்டுப்பாங்களா?'.&lt;br /&gt;&lt;br /&gt;'சண்டை... , அது யார் வீட்ல தான் சார் இல்ல? அவுங்களுக்குள்ள அப்பப்ப வாக்குவாதம் வரும் சார். அப்புறம் சேர்ந்துக்குவாங்க சார். பெரிசா வேற எந்த பிரச்சனையும் வந்ததில்லை சார்'.&lt;br /&gt;&lt;br /&gt;'ராகவன் வீட்டுக்கு வேற யாராவது வந்துட்டு போவாங்களா?'.&lt;br /&gt;&lt;br /&gt;'அதிகமா யாரும் வரமாட்டாங்க சார். வந்தா, அவுங்கள பெத்தவங்க, தம்பி, தங்கச்சி இப்படித்தான் சார் வருவாங்க'.&lt;br /&gt;&lt;br /&gt;'ஹ்ம்ம் சரி ..சம்பந்தம், மேல இருக்குற ராகவன் வீடும் உங்களுடைய வீடும் ஓரே மாதிரி தானே?'.&lt;br /&gt;&lt;br /&gt;'ஆமா, சார்'.&lt;br /&gt;&lt;br /&gt;'சரி, ராகவன் வீட்ல அவர் வைஃபோட பாடி கிடந்தத பாத்தீங்கல. சொல்லுங்க. இந்த பால்கனி ஜன்னல் எந்தப் பக்கம் வரும்?'.&lt;br /&gt;&lt;br /&gt;'சார், இந்த பால்கனி, வீட்டுக்கு பின்னால சார். முதல்ல ஹால், பக்கவாட்டுல ஒரு ரூம், ஹால் கதவுக்கு நேரெதிரே பால்கனியும், பால்கனி ஜன்னலும் சார்'.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'ஓ.. சரி ஒரு ஏணியும், கண்ணாடியும் கொண்டுவாங்க. அப்படியே அந்த ஃபோட்டோக்ராஃபரையும் வரச்சொல்லுங்க‌' என்றுவிட்டு வேதம் அந்த பால்கனி ஜன்னலையே பார்த்துக்கொண்டிருந்தார். சம்பந்தம் ஏணி  எடுக்க விரைய, கந்தசாமி வேதத்தை நெருங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;'சார், இது கொலையா இருக்குமா சார்?'.&lt;br /&gt;&lt;br /&gt;'ஹ்ம்ம்.. உங்களுக்கு என்ன தோணுது?'.&lt;br /&gt;&lt;br /&gt;'வீடு உள்பக்கமா பூட்டியிருக்கு. கொலையா இருந்திருந்தா கொலைகாரன், கொலை பண்ணதுக்கப்புறம் வீட்டை விட்டு வெளியே போயிருக்கணுமே சார். எல்லா கதவையும் உள்பக்கமா பூட்டிட்டு ஒருத்தன் எப்படி சார் வெளில போயிருக்கமுடியும். சூசைடா இருக்கும்னு தோணுது சார்'.&lt;br /&gt;&lt;br /&gt;வேதம் 'ஹ்ம்ம்ம்... ' எனவும், சம்பந்தமும்  ஒரு டீனேஜ் பையனுமாக ஒரு ஏணியைக் கொண்டுவரவும் சரியாக இருந்தது. பின்னாடியே அந்த ஃபோட்டோக்ராஃபர் முத்து, தன் கையிலிருந்த காமிராவை நோண்டியபடியே வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;'தம்பி யாரு?'.&lt;br /&gt;&lt;br /&gt;'சார் என் பையன் தான் சார். ரஞ்சித். என்ஜினியரிங் படிக்கிறான் சார்' என்று சம்பந்தம் சொல்ல, பயமா அல்லது ஆச்சர்யமா என்று குழப்பும் வகைக்கு ஒரு முகபாவனையுடன் அந்தப்பையன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான். அவன் ஸ்னேகமாய்ச் சிரிக்காதது அவருக்கு வித்தியாசமாகப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;'கந்தசாமி, ஏணிய அந்த பால்கனிக்கு புடிங்க. நான் முதல்ல ஏறிபோய் அந்த கண்ணாடிய உடைச்சி உள்ள போயிட்டு ஹால் கதவ திறக்கறேன். நீங்கள்லாம் முன்வாசல் வழியா வாங்க. முத்து, நீங்க மட்டும் என்ன ஃபாலோ பண்ணிக்கிட்டே கூட வாங்க‌ ' என்றுவிட்டு கந்தசாமியும் அந்தப் பையனும் அந்த ஏணியை ராகவனின் வீட்டு பால்கனிக்கு சாய்த்துவிட்டு நிற்க வேதம் சம்பந்ததிடம் கண்ணாடியை வாங்கிக்கொண்டு ஏணியின் மீது ஏறத்துவங்கினார். பால்கனியை அடைந்து இடுப்பில் இணைந்திருந்த துப்பாக்கியை உருவி ஓங்கி அந்த ஜன்னலில் அடிக்க தெரிந்து உடைந்து நொருங்கி விழுந்து சிதறியது அந்தக் கண்ணாடி. உருவிய துப்பாக்கியை மீண்டும் உரையில் போட்டு மூடிவிட்டு இடதுகையில் சம்பந்தத்திடம் வாங்கிய கண்ணாடியை பிடித்தபடி அதில் தெரிந்த பால்கனிக் கதவின் உள்பக்கத்தை பார்த்தபடி இடுப்பிலிருந்த லட்டியால் பால்கனிக்கதவின் தாழ்ப்பாளை நெம்ப கதவு திறந்துகொண்டது. அவரைத் தொடர்ந்து முத்துவும் அதே பாணியில் மேலே ஏறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;வேத‌ம் பால்க‌னிக்கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைந்தார். அந்த‌ப் பெண் ஸ்வேதா, ஹாலில் குறுக்காக‌ வ‌யிற்றில் க‌த்தி பாய்ந்த‌வாக்கில் ம‌ல்லாந்து கிடந்திருந்தாள். அந்த உடலை நெருங்க நெருங்க‌ லேசாக‌ ர‌த்த‌ வாடை அடிப்ப‌தை அவ‌ரால் உண‌ர முடிந்த‌து. ஹாலில் இருந்த‌ அத்த‌னை ஜ‌ன்ன‌ல்க‌ளும் நிதானமாய் ஆர அமர உள்ப‌க்க‌மாய் மூடப்பட்டதாகத் தோற்றமளித்தது‌. ஒரு ம‌னித‌ன் த‌ற்கொலை செய்யும் நோக்க‌த்துட‌ன், மிக‌ மிக‌ நிதான‌மாக‌ ஒரு வீட்டை த‌யார் செய்தால் இப்ப‌டித்தான் இருக்குமென்று தெளிவாக‌த் தெரியும்ப‌டி இருந்த‌து. ஃபோடோக்ராஃப‌ர் முத்து வீட்டின் ஒவ்வொரு இன்ச்சையும் புகைப்ப‌ட‌மெடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வேத‌ம் வாச‌ற்க‌த‌வை நெருங்கினார். க‌த‌வு தாழ்ப்பாள் போட‌ப்ப‌ட்டிருந்த‌து. சாதார‌ண‌மான‌ தாழ்ப்பாள். குறுக‌லான‌ இரும்பு உருளையில் இரும்பாலான‌ முனையில் வ‌ளைந்த‌ தாழ்ப்பாள். ப‌க்க‌த்திலேயே இக்கால‌க்க‌த‌வுக‌ளில் போட‌ப்ப‌டும் ந‌வீன‌ ஈரோப்பா வ‌கை லாக். ஆனால், அது ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட‌வில்லை. அந்த ஃபோட்டோக்ராஃபர் அந்தக் கதவையும், அதனை ஒட்டிய சுவர், டிவி, சோபா, டீபாய் முதலானவற்றை ஃபோட்டோ எடுத்துக்கொள்ளும்வரை நிதானித்துவிட்டு வேத‌ம் அந்த‌த் தாழ்பாளை இட‌து புற‌ம் இழுத்து, கைப்பிடியைப் ப‌ற்றி இழுத்தார். திற‌ந்துகொண்ட‌து.&lt;br /&gt;&lt;br /&gt;கந்தசாமி, சம்பந்தம் மற்றும் ராகவன் கதவருகே நின்று எட்டிப்பார்க்க, ராகவன் இப்போது ஸ்வேதாவின் உடலைப் பார்த்துவிட்டு மீண்டும் அழத்துவங்க, சம்பந்தம் ஆறுதலாய் ராகவனை அணைத்துக்கொண்டு தள்ளிப்போனார்.அவ்வப்போது சில பேர் வந்து எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தார்கள். கந்தசாமி இப்போது ஹாலிற்குள் சில கைரேகை நிபுணர்களுடன் நுழைந்தார்.  ஃபோடோக்ராபரை அந்த வீட்டின் ஒவ்வொரு மூலையையும் படம் பிடிக்க பணித்துக்கொண்டிருந்தார். கைரேகை நிபுணர்கள் ஹாலின் ஒவ்வொரு மூலையிலும் இருக்கும் கைரேகைகளை பதிவு செய்துகொண்டிருந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாமே தெளிவாகவே இருந்தது. ஒரே ஒரு விஷயத்தைத் தவிர. அந்தப் பெண்ணுக்கு முன் வாழ்க்கையில் காதல்கள் இல்லையென ராகவன் சொல்கிறான். கல்யாணத்திற்குப் பிறகு இவர்களுக்குள் வாக்குவாதங்களோ, மனஸ்தாபங்களோ பெரிய அளவில் இருக்கவில்லை. ஆனால் அவள் இறந்திருக்கிறாள். அதுவும் கத்தியால் குத்தப்பட்டு. அவளே குத்திக்கொண்டாளா? அனைத்துக் கதவுகளும், ஜன்னல்களும் உட்புறமாக தாழிடப்பட்டிருக்கிறது. நிச்சயமாக வேறொருவன் உள்ளே வந்து கொலை செய்திருக்க முடியாது. செய்திருந்தால் உட்புறமாக எப்படி தாழிட்டிருக்கமுடியும்? அப்படியானால், ஒரு திருமணமான இளம்பெண் தற்கொலை செய்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன?  உயிரிழப்புக்கான மோட்டிவ் என்னாவாக இருக்கும்? இந்தக் கேஸை எப்படி முடிப்பது அல்லது முடிந்திருக்கும்? வேதத்துக்கு யோஜனையாகவே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கைரேகை நிபுணர்கள் ஹாலில் ஒரு இன்ச் விடாமல் எல்லா இடங்களிலிருந்து கைரேகைகளை சேகரித்துவிட்டு உள் ரூம்களுக்குள் நுழைய, வேதம் தன் கைகளில் க்ளவுஸ் மாட்டிக்கொண்டார். சோபாவில் தொடங்கி, அலமாறி, சோபாவுக்குக் கீழே, டீபாய், டெலிஃபோன், புத்தக அலமாறி, டிவி, பவர் ஹவுஸ் என ஒன்றுவிடாமல் அவரின் கவனத்தில் பதிந்துகொண்டிருந்தன. டீவியின் மேல் சில ஃபாஷன் புத்தகங்கள் இருந்தது வித்தியாசமாக இருந்தது. முகப்பு அட்டைக்கு அடுத்த அட்டையில் ரஞ்சித் என்று எழுதியிருந்தது. ரஞ்சித், இது அந்த சம்பத்தின் மகன் பெயர் என்பது நினைவுக்கு வந்தது. அந்தப் புத்தகத்தை எடுத்து மடித்து கையில் வைத்துக்கொண்டு தொடர்ந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கதவு சீராக இருந்தது. அழகாகவும் கூட. எந்தவிதக் கீரலும் எங்கும் இல்லை. வேதம் அங்குளம் அங்குளமாக கீழிறுந்து மேலாக பார்த்துக்கொண்டே வந்தார். தேக்கு மரத்தினாலான கதவு. கதவின் சட்டத்தை தொட்டபடியான மேலிருந்து கீழாக நடுப்பகுதியில் ஈரோப்பா லாக்கர் போட்டிருந்தது. ஆனால் அது பயன்படுத்தப்படவில்லை என்பதை முதலிலேயே கவனித்தாகிவிட்டது. அதற்கு மேல் ஒரு சிறிய தாழ்ப்பாள் இருந்தது. அது அவரது கவனத்தை ஈர்த்தது. சாதாரண நடுத்தர வர்க்கத்து வீடுகளில் இந்தத் தாழ்ப்பாள் அனேகம். சட்டத்திலும், கதவிலுமாக உருளை வடிவிலான இரும்பாலான தாழ்ப்பாள். அதனுள் இரும்பாலான முனையில் வளைந்த உருண்ட ராட் ஒன்றைச் செருகினால் அந்த பக்கமிருந்து தள்ளித் திறக்க முடியாது. கதவை திறந்தமேனிக்கு வைத்துவிட்டு அந்தத் தாழ்ப்பாளைக் கூர்ந்து கவனித்ததில் அந்த இரும்பாலான ராடில் சட்டத்தை நோக்கிய முனையில் குறுக்கால் கோடு கிழித்தது போலிருந்தது அவருக்கு வித்தியாசமாய் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கணம் அவர் சிந்தனையில் ஆழ்ந்தார். கதவு உள்பக்கமாய்ப் பூட்டியிருந்ததே அது தற்கொலை என்ற யூகத்துக்கு காரணமாகியிருக்கிறது. இந்தத் தாழ்ப்பாளில் ஒரு தவறான கணிப்பு இருந்திருந்தால், அது கொலையாகவும் இருக்கலாம். வேதம் உடனடியாக கந்தசாமியை பணித்து ஒரு கார்ப்பென்டரை வரவழைக்கச் சொல்ல, கந்தசாமி சம்பந்தத்தைப் பணிக்க, இருபது நிமிட காத்திருப்பிற்கு பிறகு ஒரு கார்பென்டரை அழைத்து வந்தார் சம்பந்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;'சார், இவன் கதிரு சார். இந்த ஏரியால எல்லா கார்பென்டிங் வேலையும் இவந்தான் சார் பண்றான்' என்றுவிட்டு சம்பந்தம் பின்னால் நின்று கொண்டார். கதிர், இளந்தாரியாக இருந்தான். கருப்பான, ஒல்லியான தேகம். உயரம் ஐந்தடிதான். வெடவெடவென இருந்தான்.அவன் போட்டிருந்த பாண்டும் சட்டையும் ஒரே அளவில் கசங்கியிருந்தது. கையில் ஒரு ப்ளாஸ்டிக் கூடை வைத்திருந்தான். அதில் ஸ்க்ரூ டிரைவர், ஆணிகள், ஸ்பானர்கள் இன்னும் என்னென்னவெல்லாமோ இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;'தம்பி, இங்க வாப்பா, இந்த தாப்பாளை கழட்டி எடு. கவனமா எடு. ஸ்க்ரூ தவிர வேற எங்கயும் ஒரு கீரல் கூட இருக்கக்கூடாது' வார்த்தைகளில் சற்று கடினம் கூட்டிச் சொன்னார் வேதம். கதிர் பயபக்தியாய் தலையசைத்துவிட்டு பையிலிருந்து லாவகமாக ஒரு ஸ்க்ரூ டிரைவரை உருவி, பையை காலடியில் வைத்துவிட்டு, அந்தத் தாழ்ப்பாளை கழட்டலானான். கைதேர்ந்தவன் போல‌. பத்தே நொடிகளில் கழட்டிக் கையில் கொடுத்துவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;வேதம், கையில் வாங்கிக் கூர்ந்து பார்த்தார். அந்த உருளைவடிவ தடிமனான முனையில் வளைந்த கம்பியின் இன்னொரு முனையில் அரை அங்குளம் முன்பாக அது குறுக்காக வெட்டப்பட்டிருந்தது தெளிவாகத் தெரிந்தது. வெட்டியபிறகு ஆனாபாண்ட் எனப்படும் இரும்புகளை ஒட்டும் கோந்து போட்டு ஒட்டியது போலிருந்தது. கோந்து சிந்தவுமில்லை. பிதுங்கியும் இருக்கவில்லை. ஒரே ஒரு துளி கோந்து, அளவாக, ஆனால் மிகமிகக் கவனமாக தடவப்பட்டது போலிருந்தது. சுவற்றின் மீது வைத்து இடதுகையால் இறுக்கமாய்ப் பற்றிக்கொண்டு, முத்துவிடம் ஸ்க்ரூ டிரைவர் வாங்கி, அதை அந்த அரை அங்குளப்பகுதியின் மேல் பலமாய்த் தட்ட, தெரித்துக் கீழே விழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வேதம் அவதானித்துக்கொண்டிருக்கையிலேயே செல்ஃபோன் சிணுங்கும் ஒலி கேட்டது. அந்த சப்தம் அவரின் சிந்தையைக் கலைத்தது. இந்தமுறையும் அதே கந்தசாமியினுடையதே தான்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஹலோ... ஆங்.. ம்ம்.. நல்ல வேணும். அவன யாரு அங்கெல்லாம் போகச் சொன்னா?.. ரூம்ல மேல் ஷெல்ஃப்ல வச்சிறுக்கேன் பாரு. ம்ம். தொந்தரவு பண்ணாதம்மா. வேலையா இருக்கேன்.ம்ம். வை' என்றுவிட்டு அனைக்கவும், தொடர்ச்சியாக கந்தசாமிக்கு ஃபோன் வருவதும், அவர் எரிச்சலாகி பதிலளிப்பதும், தன் விசாரணையை தொந்தரவு செய்வதும் வேதத்திற்கு எரிச்சலைத் தந்திருக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;'என்ன கந்தசாமி, என்ன ப்ராப்ளம்'.&lt;br /&gt;&lt;br /&gt;'ஒண்ணுமில்ல சார். என் பையன் தான். பக்கத்துல இருக்குற தியேட்டர்ல படம் பாத்திருக்கான். அவன் உக்காந்திருந்த சீட்ல‌ மூட்டைப்பூச்சி கடிச்சிடிச்சாம். ஆயின்மென்ட் எங்க இருக்குன்னு கேக்குறா என் வைஃப்'.&lt;br /&gt;&lt;br /&gt;'எங்க? காசி தியேட்டர்லயா? அங்க என் ஃபேமிலிக்கு கூட ட்ரை பண்ணினேனே. டிக்கட் கிடைக்கலயே. உங்க பையனுக்கு எப்படி கிடைச்சிதாம்?'.&lt;br /&gt;&lt;br /&gt;'சார், அந்த தியேட்டர் மானேஜர் என் பையனுக்கு தெரிஞ்சவர் சார். அதனால, இவன் டிக்கட்டே இல்லாம பாத்திருக்கான். யாரோ படம் பாக்க வேண்டியவர் வரல போல. அந்த சீட்ல உக்காந்து பாத்திருக்கான் சார்'.&lt;br /&gt;&lt;br /&gt;வேதத்துக்கு சட்டென பொறி தட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;'அப்படியா? ஹ்ம்ம்.. உங்க பையன் எந்த சீட்ல உக்காந்து பாத்தாராம்?'.&lt;br /&gt;&lt;br /&gt;'இ14 சார்'.&lt;br /&gt;&lt;br /&gt;'கந்தசாமி, கொஞ்சம் என் கூட வாங்க' என்றுவிட்டு வேதம் கந்தசாமியின் தோள்மீது கைப்போட்டவாறே ராகவனின் ஃப்ளாட்டை விட்டு வெளியேறி எதிர் ஃப்ளாட்டில் நுழைந்தனர். அங்கே ஒரு சோபாவில் அருகருகே அமர்ந்திருந்த ராகவனும், அவனுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த அந்த எதிர்வீட்டுக்காரரும் வேதத்தையும் கந்தசாமியையும் பார்த்துவிட்டு எழுந்துகொண்டனர். வேதம் நேராக ராகவனின் முன் சென்று நின்றுகொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;'ராகவன், நீங்க ஏன் உங்க மனைவியை கொன்னீங்கன்னு கொஞ்சம் சொல்லமுடியுமா?'.&lt;br /&gt;&lt;br /&gt;'என்ன!! நான் கொன்னேனா? என்ன சார் உளருறீங்க. நான் ஏன் என் அன்பு மனைவியக் கொல்லனும். கதவு உள்பக்கமா தாழ்ப்பாள் போட்டிருக்கு. நான் எப்படி கொன்னிருக்க முடியும்? அவ தற்கொலை பண்ணிக்கிட்டா சார்'.&lt;br /&gt;&lt;br /&gt;'கரெக்ட். அவ தற்கொலை பண்ணிக்கிட்டதா தான் நீங்க சீன் க்ரியேட் பண்ணியிருக்கீங்க. ஆனா, ஏன் அவுங்கள கொன்னீங்க?'.&lt;br /&gt;&lt;br /&gt;'சார், திரும்ப திரும்ப ஆதாரம் இல்லாம அதையே சொல்லாதீங்க சார். எப்படி சார்? எப்படி நான் தான் கொன்னேன்னு அவ்ளோ ஆணித்தரமா சொல்றீங்க?'.&lt;br /&gt;&lt;br /&gt;'எப்படியா? சொல்றேன் கேளுங்க. ஆறு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பியிருக்கீங்க. காசி தியேட்டர். உங்க சீட் இ14. 7 மணிக்கு ஷோ ஓட ஆரம்பிச்சதும் வீட்டுக்கு வந்திருக்கீங்க.  சத்தமில்லாம உங்க ஃப்ளாட்டுக்கு போயிருக்கீங்க. அங்க உங்க மனைவிய கத்தியால குத்தி கொன்னிருக்கீங்க. தாழ்ப்பாள அரை அங்குளம் அறுத்து, அந்த அரை அங்குளத்துல ஆனாபாண்ட் ஒரு துளி, ஒரே ஒரு துளி போட்டு வச்சிட்டு, வெளிய வந்து திரும்ப கதவ சாத்தியிருக்கீங்க. ஆனாபாண்ட் போட்டிருந்ததுனால அது திடமா ஒட்டியிருக்கு. இது எல்லாத்துக்கும் இரண்டு மணி நேரம் ஆயிருக்கு. உங்க அதிர்ஷ்டம் அன்னிக்கு யாரும் உங்கள பாக்கல. திரும்பி தியேட்டருக்கு போயிருக்கீங்க. அங்க படம் ஏற்கனவே முடிஞ்சிறுக்கு. படம் முடிஞ்சி திரும்ப வராமாதிரி வீட்டுக்கு வந்துட்டு எனக்கு ஃபோன் பண்ணியிருக்கீங்க. இதான் நடந்தது. இப்போ சொல்லுங்க. ஏன் உங்க மனைவிய கொலை பண்ணினீங்க?'.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேட்டுக்கொண்டிருந்த ராகவன் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத்துவங்கியிருந்தது. எதிர்வீட்டுக்காரர் அதிர்ச்சியாய் ராகவனையும் வேதத்தையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தார். இந்நேரத்திற்கு வேதத்துக்கு பின்பக்கமாய் வந்து ஒண்டிவிட்டிருந்த சம்பந்தம் நடந்ததையெல்லாம் பார்த்துவிட்டு வெலவெலத்துப் போய்விட்டிருந்தார். ஆனால் ராகவன் முகத்தில் ஆட்டைத் திருட வந்து அகப்பட்டுக்கொண்ட நரியின் முகபாவனை. கரிசனமும், அனுதாபத்தையும் எதிர்னோக்கும் முகத்தை எதிர்பார்த்தவர்களுக்கு அவன் முகம் அகோரமாயிருந்தது. வேதத்தின் முகத்தில் தெளிவு பிரகாசமாயிருந்தது. அவரின் அனுபவம் தந்த அறிவு அவரை நிதானத்தில் ஆழ்த்தியிருந்தது. அவருக்குத் தெரியும். இன்னும் சற்று நேரத்தில் ராகவன் வெடித்தழுவான் அல்லது குமுறித்தீர்ப்பான், இரண்டில் ஏதோ ஒன்று நிச்சயம் நடக்குமென்று.&lt;br /&gt;&lt;br /&gt;வேதம் ராகவனை நெருங்கினார். அவனின் கைபிடித்து ஒரு தகப்பனைப் போல் பரிவு காட்டி அவனை அங்கிருந்த சோபாவில் அமர் வைத்தார். எதிர்வீட்டுக்காரன் வழிவிட்டு இரண்டடி தள்ளிப்போனார். நிதானம் மிக்க தாய் அடிபட்டுக்கொண்ட குட்டியை தடவித்தருவது போல் வேதம் ராகவனை வருடித்தர, நெடு நேர அமைதிக்குப்பின் மெல்ல வாய்திறந்தான் ராகவன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'ஆமா சார். நாந்தான் கொன்னேன் அவள. பாதகத்தி சார் அவ. பசப்பி. என் வாழ்க்கையை, எதிர்பார்ப்ப, ஆசையை எல்லாத்தையும் குழி தோண்டிப் பொதைச்சிட்டா சார் அவ. இருபத்தையஞ்சு வயசு வரைக்கும் ஆம்பளைக்கு சொந்தக் கால்ல நிக்கறதுதான் சார் குறிக்கோள். மத்தவனுக்கு எப்படியோ சார். ஆனா நான் அப்படிதான் இருந்தேன் சார். விடிகாலைல எழுந்து படிப்பு, டேர்ம் எக்ஸாம், மாத்ஸ், கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ், பயாலஜி, ட்யூஷன் க்ளாஸ், ஒரு வாரத்துல ஒரு நாளைக்கு 4 பேப்பர்னு 28 எக்ஸாம், எல்லாத்துக்கும் ப்ரிபாரேஷன், மார்க்ஸ், 10த் 12த், மெரிட் ஸ்காலர்ஷிப், அப்புறம் காலேஜ், செமஸ்டர் எக்ஸாம், லேப், பர்சென்டேஜ், காம்பஸ், வேலை அது இதுன்னு திரும்பிக்கூட பாக்கமுடியாம ஒரு வாழ்க்கை. எல்லாம் எதுக்கு சார். எனக்குன்னு ஒரு நல்ல எதிர்காலம், குடும்பம், மனைவி, குழந்தைங்கன்னு சந்தோஷமான வாழ்க்கைக்குதானே சார். ஆம்பளைக்கு நூறு பொண்ணுகிட்ட பேசினாலும் எவளும் கிடைக்காம போகலாம். பொட்டச்சி லேசா கண்ணசைச்சா போதும் சார். நூறு பேர் வருவாங்க சார். அழக ஆண்டவன் பொம்பளைக்கு தான் வச்சிருக்கான். உத்தியோகம் புருஷலட்சனம். அவ அழகு சார். அழகான பொண்ண எல்லாரும் விரும்புவாங்கதான் சார். அவளையும் ஒருத்தன் விரும்பியிருக்கலாம். விரும்பியிருக்கான் சார். இது நடக்கறது தானே. என்கிட்ட சொல்லியிருக்கலாம் சார். என்கிட்ட முன்னமே சொல்லியிருந்தா, மன்னிப்போம் மறப்போம்ன்னு விட்டிருப்பேன் சார். அவளே திகட்ட திகட்ட அவளை லவ் பண்ணியிருப்பேன் சார். ஃபர்ஸ்ட் நைட்லயே கேட்டேன் சார். இல்லன்னு சொன்னா சார். பொய் சார். பசப்பி. பொய் சொல்லிருக்கா சார். அவனோட ஊர சுத்தியிருக்கா. தியேட்டர்ல..... சொல்ல வாய் கூசுது சார். எல்லாத்தையும் பண்ணிட்டு நானா அவளோட பழைய வாழ்க்கைய அந்தப் பையன் மூலமா தெரிஞ்சதுக்கப்புறம், அவன் வேற ஜாதி அதனால் கல்யாணம் பண்ணிக்க முடியலன்னு சொல்றா சார். சேர்ந்து சுத்தும்போது தெரியாதா சார் வேற ஜாதின்னு. அதெல்லாம் இல்ல சார். கொழுப்பெடுத்த‌ கழுத. என்ன ஏமாத்த நினைச்சால்ல.அதான் சார் கொன்னேன். ஆத்திரம் தீருர வரை கொன்னேன் சார். திருப்தியா இருக்கு சார். நல்லவேளை எனக்கு குழந்தைன்னு ஒண்ணும் இல்ல. எப்படியெப்படியோ இருக்கணும்னு நினைச்சேன் சார்.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தரையையே வெறித்துப்பார்த்துக்கொண்டே உறுமியபடி அமர்ந்திருந்தான் ராகவன். அங்கு மயான அமைதி நிலவியது. வேதம் நீண்டதொரு பெருமூச்சி விட்டார்.   எதிர்வீட்டுக்காரர் அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்தார். வாசலில் நின்றிருந்த சம்பந்தம் கண்களில் பரிதாபம் தெரிந்தது. வேதம் கந்தசாமியிடம் திரும்பி, கண்ணசைக்க, கந்தசாமி பாண்ட் பாக்கேட்டில் கைவிட்டு கைவிலங்கை எடுத்துக்கொண்டு, முன்னே நடந்து லேசாக குனிந்துவிட்டு ராகவனைப் பார்க்க, ராகவன் கந்தசாமியை பார்த்துவிட்டு கைகளை முன்னே நீட்டினான். அவன் கண்கள் பனித்திருந்ததை பார்க்க இயலாமல் குனிந்துகொண்டார் கந்தசாமி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முற்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; - ராம்ப்ரசாத் சென்னை(ramprasath.ram@googlemail.com) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;#நன்றி&lt;br /&gt;உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=4542)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-7998701804904252571?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/7998701804904252571/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/07/blog-post_04.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/7998701804904252571'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/7998701804904252571'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/07/blog-post_04.html' title='ஒரே ஒரு துளி - துப்பறியும் சிறுகதை'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-iF4eOR_yqvM/ThHvDgxZEXI/AAAAAAAAAq0/bu-O-T-GqW4/s72-c/detective.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-3519695824784045826</id><published>2011-07-01T21:06:00.000-07:00</published><updated>2011-07-01T21:07:31.681-07:00</updated><title type='text'>நிராகரிப்பின் மூர்க்கம்</title><content type='html'>&lt;b&gt;'நிராகரிப்பின் மூர்க்கம்' என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதை காற்றுவெளி இலக்கிய இதழில் (ஜூன் 2011) வெளியாகியுள்ளது. இதழின் முதல் பக்கம், கவிதை வெளியான இதழின் 73வது பக்கங்களின் பிரதிகள் இங்கே.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-6_RWjysMaMU/Tg6ZRqqKfWI/AAAAAAAAAqs/73YGWJ8tdHI/s1600/kaatruveli_june.jpg" imageanchor="1" style=""&gt;&lt;img border="0" height="192" width="400" src="http://1.bp.blogspot.com/-6_RWjysMaMU/Tg6ZRqqKfWI/AAAAAAAAAqs/73YGWJ8tdHI/s400/kaatruveli_june.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;நிராகரிப்பின் மூர்க்கம்&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவள் தன்னிடத்தே &lt;br /&gt;இருக்கிறாள்...&lt;br /&gt;&lt;br /&gt;சிந்தை உயர்வுற்றிருப்பதாய்&lt;br /&gt;தன் தனிமைக்கு அவள்&lt;br /&gt;விளக்கம் சொல்கிறாள்...&lt;br /&gt;&lt;br /&gt;உயர் வைரமொன்றிற்காய் &lt;br /&gt;அவளது காத்திருப்பின் &lt;br /&gt;வழித்தடங்களில் யார்யாருடைய கால்தடங்களோ&lt;br /&gt;எப்போதும் நிறைந்துகிடக்கின்றன...&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கால்தடங்களின் மீதான‌&lt;br /&gt;அவளின் கவனங்கள்&lt;br /&gt;என‌து க‌வ‌ன‌ங்களில் ப‌திவ‌தேயில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;அவள் செல்லவேண்டிய திசையை&lt;br /&gt;நான் அறிந்திருப்பதை அவள்&lt;br /&gt;அறியாமையுடன் மூர்க்கமாய் &lt;br /&gt;நிராக‌ரித்துவிடுகிறாள்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)&lt;br /&gt;&lt;br /&gt;#நன்றி&lt;br /&gt;காற்றுவெளி இலக்கிய இதழ் (ஜூன் 2011)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-3519695824784045826?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/3519695824784045826/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/07/blog-post_01.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/3519695824784045826'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/3519695824784045826'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/07/blog-post_01.html' title='நிராகரிப்பின் மூர்க்கம்'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-6_RWjysMaMU/Tg6ZRqqKfWI/AAAAAAAAAqs/73YGWJ8tdHI/s72-c/kaatruveli_june.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-3527599298663217077</id><published>2011-07-01T21:02:00.000-07:00</published><updated>2011-07-01T21:04:16.355-07:00</updated><title type='text'>ப‌ட்டாம்பூச்சிக்கூடுக‌ள்</title><content type='html'>&lt;b&gt;'பட்டாம்பூச்சிக்கூடுகள்' என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதை காற்றுவெளி இலக்கிய இதழில் (ஜூன் 2011) வெளியாகியுள்ளது. இதழின் முதல் பக்கம், கவிதை வெளியான இதழின் 72வது பக்கங்களின் பிரதிகள் இங்கே.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-fckxAD5HJhE/Tg6Yp_IZG0I/AAAAAAAAAqk/qL0kRM9deFQ/s1600/kaatruveli_june.jpg" imageanchor="1" style=""&gt;&lt;img border="0" height="192" width="400" src="http://1.bp.blogspot.com/-fckxAD5HJhE/Tg6Yp_IZG0I/AAAAAAAAAqk/qL0kRM9deFQ/s400/kaatruveli_june.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;ப‌ட்டாம்பூச்சிக்கூடுக‌ள்&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ப‌ட்டாம்பூச்சியாய் ப‌ருவ‌மெய்தும்&lt;br /&gt;புழுவான‌து வ‌ண்ண‌வ‌ண்ண‌ நிற‌ங்க‌ளால்&lt;br /&gt;ஈர்க்கிற‌து க‌வ‌ன‌ங்க‌ளை...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈர்த்த‌லில் தொலைந்து வ‌ண்ண‌ங்க‌ளில்&lt;br /&gt;முதிர்வ‌தை விரும்பி ஏற்கிற‌து&lt;br /&gt;ப‌ட்டாம்பூச்சி...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வ‌ண்ண‌ங்க‌ளுக்காய் தொட‌ரும்&lt;br /&gt;விர‌ல்க‌ளில் எது என் விர‌ல்&lt;br /&gt;என்ப‌தை அறியும் தந்திர‌ம்&lt;br /&gt;அறிந்திருக்க‌வில்லை அவைக‌ள்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னிட‌மிருக்கும் பாதுகாவ‌ல் மிக்க‌&lt;br /&gt;ப‌ட்டாம்பூச்சிக்கூடுக‌ள்&lt;br /&gt;இன்ன‌மும் காலியாக‌வே &lt;br /&gt;கிட‌க்கின்ற‌ன‌...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)&lt;br /&gt;&lt;br /&gt;#நன்றி&lt;br /&gt;காற்றுவெளி இலக்கிய இதழ் (ஜூன் 2011)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-3527599298663217077?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/3527599298663217077/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/07/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/3527599298663217077'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/3527599298663217077'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/07/blog-post.html' title='ப‌ட்டாம்பூச்சிக்கூடுக‌ள்'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-fckxAD5HJhE/Tg6Yp_IZG0I/AAAAAAAAAqk/qL0kRM9deFQ/s72-c/kaatruveli_june.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-8378663268142672151</id><published>2011-06-29T10:32:00.000-07:00</published><updated>2011-06-29T10:32:07.583-07:00</updated><title type='text'>தண்டனை - சிறுகதை</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-lB82XffQngA/Tgtg9b0BNMI/AAAAAAAAAqU/_l8_wI1wXqE/s1600/story21.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="400" width="300" src="http://4.bp.blogspot.com/-lB82XffQngA/Tgtg9b0BNMI/AAAAAAAAAqU/_l8_wI1wXqE/s400/story21.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;தண்டனை - சிறுகதை&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கைதேர்ந்த கொலைகாரன், நாடி, நரம்பு, பேச்சு, மூச்சு, சுவாசம் என சகலமும் கொலை வெறியால் நிறைந்து, அடங்காத கொலைப்பசியில் எதிரியைக் கைக்கெட்டும் தூரத்தில் கண்டம் துண்டமாய்க் கிழித்துப்போடும் வன்மத்தில் அவன் மீது அரிவாளுடன் பாய‌ அவதானிக்கும் நிலையில் அவனின் மனநிலை எப்படி இருக்குமென்று தெரியுமா உங்களுக்கு? எதிரியை மூர்க்கமாய்த் தாக்க வேண்டி, உள்ளங்கைகள் இறுக்கிப் பிடித்த உருட்டுக்கட்டையைச் சுற்றி தசை நார்கள் இருகி கட்டையின் தின்மையை எதிர்க்கும் நிலையில் அவன் எண்ண ஓட்டங்கள் எப்படி இருக்குமென்று தெரியுமா உங்களுக்கு? சட்டென ஒரு மூர்க்கம் உடலெங்கும் இறங்கி திக்குத் தெரியாமல் அங்குமிங்கும் ஓடி, ஒரு வன்மம் இன்னும் இன்னும் அதிகரிக்கும் நிலையில் அவன் மன நிலை எப்படி இருக்குமென்று தெரியுமா உங்களுக்கு? &lt;br /&gt;&lt;br /&gt;தெரியாதா! எனக்கும் இதற்கு முன் தெரியாது தான். ஆனால் இப்போது நானிருக்கும் நிலை அப்படி ஒன்றாக இருக்கலாமென்று தோன்றியது. என் ஒரு கஸ்டமரின் காரை சர்வீஸ் செய்ய பழுதுபட்ட ரேடியேட்டருக்கான ஸ்பேர் பார்ட் வாங்கலாமென்று போட்டிருந்த சட்டை பாண்டுடன் பைக்கில் வந்தவன் நான். ஆனால் இப்போது என் கையில் ஒரு உருட்டுக்கட்டை. இதோ இந்த ஒதுக்குப்புறமாக உள்ளடங்கி வேலை பாதியில் நின்று போன ஒரு கட்டடத்தில் மறைவாய் நின்றபடி காத்துக்கொண்டிருக்கிறேன் நான். இந்த இடத்தை தேர்ந்தெடுத்ததற்கு ஒரு காரணம் உண்டு. இங்கு இருளாய் இருந்தது. யாருமில்லை. இன்று சனிக்கிழமை. என் கணிப்பு சரியாக இருந்தால் நாளையும் யாரும் வேலைக்கு வரமாட்டர். இன்றே ரத்தம் வர அடித்துப்போட்டு, சத்தம் போடாமலிருக்க வாயை உடைத்து, ரணமான இடங்களில் மண்ணடித்து, நகராமல் இருக்க கை கால்களை உடைத்துப்போட்டால், இரண்டு நாட்களுக்கு யாரும் வரமாட்டர். கிருமி அண்டி ரணப்பட்ட இடங்களில் நோய் பீடிக்கும். சீழ் பிடிக்கும். கொலையாக இல்லாவிட்டாலும் ஆறாத காயங்கள் பல உண்டாகக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாகும். அதற்கு இந்த இடம் தான் சரி.&lt;br /&gt;&lt;br /&gt;என் பைக் பக்கத்து தெருவில் ஒரு மர நிழலில் நிறுத்தப்பட்டிருக்கிறது. நான் அவனுக்காக காத்திருக்கிறேன். இந்த வழியாகத்தான் ஒரு டிவிஎஸ் ஃபிஃப்டியில் போனான். அவன் போய் ஒரு மணி நேரம் இருக்கும். இதே வழியில்தான் வந்தாக வேண்டும். ஒரு மணி நேரம் முன் போனதால், இன்னேரம் திரும்பி வரலாமென்று எனக்கு தோன்றுகையிலேயே தூரத்தில் யாரோ ஒரு டிவிஎஸ் ஃபிஃப்டியில் வருவது தெரிந்தது. அவனா என்று கண்களைச் சுருக்கிப் பார்த்தேன் நான். அவனேதான். அதே அரக்கு நிற கட்டம்போட்ட சட்டை. பச்சை நிறத்தில் லுங்கி. &lt;br /&gt;&lt;br /&gt;சுதாரித்துக்கொண்டேன். என் வ‌ல‌துகையில் அந்த‌ உருட்டுக்க‌ட்டை இறுக்கிப் பிடித்தேன். என் கையில் அது திட‌மாக‌ பொறுந்திற்று. சரியான உருட்டுக்கட்டை இந்தத் தாக்குதலுக்காகத் தானாகவே அமைந்துவிட்டதாய்த் தோன்றியது. சுற்றிலும் யாரும் இல்லை. நான் ம‌றைந்திருக்கும் இட‌த்திலிருந்து அவ‌ன் வ‌ந்துகொண்டிருந்த‌  ம‌ண் சாலை அருகாமைதான். அத‌னால் க‌ண்ணிமைக்கும் நேர‌த்தில் அவ‌ன் அருகே வ‌ருகையில் அவ‌ன் முன்னே பாய்ந்து, அவ‌ன் முக‌த்தை நோக்கி வேக‌மாக‌ க‌ட்டையை வீசினால், முக‌ம் குலைந்து போகும். மூக்கு சில்லு உடைந்து ர‌த்த‌ம் கொட்டும். தாக்க‌ம் அதிக‌மாக‌ இருந்தால் க‌ழுத்தெலும்பு உடைந்து மூச்சுக்குழ‌ல் அடைத்து உயிர் போகும். அத‌னால் அத்த‌னை வேக‌ம் வேண்டாம். அவ‌ன் உயிரோடு இருக்க‌வேண்டும். ஆனால் ந‌டைப்பிண‌மாக‌ இருக்க‌ வேண்டும். அதனால் வேகம் குறைத்து வீச வேண்டும். மூர்ச்சையாகும் அளவு வீசினால் போதும். நிலைகுலைந்து விழும் அவனை உடனே அந்தக் கட்டிடத்தில் இருட்டான பகுதிக்கு இழுத்து வந்தவிட வேண்டும். அவனின் மொபெட் சாலையில் கிடக்குமே. யாராவது பார்த்துவிட்டால்?&lt;br /&gt;&lt;br /&gt;மணி மதியம் 2. கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாருமில்லை. அதனால் அவன் சுயநினைவிழக்கும்வரை அவனை அடிக்கும் வரைக்கும் சற்று நேரம் அது ரோட்டில் கிடந்தாலும் பெரிதாக பிரச்சனை வராது என்றே தோன்றியது. அவன் நெருங்கிக்கொண்டிருந்தான். அந்த உருட்டுக்கட்டையை நான் இறுக்கியபடி அவன் மேல் பாய ஆயத்தமானேன். &lt;br /&gt;&lt;br /&gt;அவனின் மொபெட் மிக அருகில் நெருங்க, உருட்டுக்கட்டையை ஓங்கியபடி மறைவிலிருந்து திடீரென்று அவன் மேல் பாய்ந்து உருட்டுக்கட்டை வேகமாய் பக்கவாட்டிலிருந்து அவன் முகத்தை நோக்கி இறக்கினேன். அது அவன் மூக்கையும் வாயையும் அதகமாக தாக்கியிருக்கவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;'அ ஆஆஆஆ ம்மா' என்றபடி அவன் கீழே விழுந்தான். நிலைகுலைந்த மொபெட்டின் பின் சக்கரம் சறுக்கியபடி என் கால்களில் இடித்ததில் நானும் அவன் மேல் விழுந்தேன். என் கையிலிருந்த உருட்டுக்கட்டை சற்று தொலைவில் போய் விழுந்தது. நான் சுதாரித்துக்கொண்டு உருட்டுக்கட்டையை நோக்கி ஓட அவன் திடீரென்று நடந்த தாக்குதலில் சுதாரித்து வலியில் முனகிக்கொண்டே மூக்கிலிருந்து ரத்தம் சொட்ட சொட்ட எழ முயற்சிசெய்வது தெரிந்தது. அப்போது தான் கவனித்தேன். அவனின் இடது கால், முட்டிக்கு கீழே இருக்கும் பகுதி அவனுக்கு இல்லை. ஊனமுற்றவனா இவன்!! என் கோபம் அப்போதுதான் தலைக்கேறியிருக்கவேண்டும். வேகமாக அந்த உருட்டுக்கட்டையை எடுத்துக்கொண்டு மீண்டும் அவன் தலையில் அடித்தேன். எழ முயற்சித்து என் இரண்டாவது தாக்குதலில் அவன் மீண்டும் விழுந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதுதான் அவனுக்கு மயக்கம் வந்திருக்க வேண்டும். தள்ளாடி விழுந்தான் அவன். இப்போது ரத்தம் மண்ணில் ஆங்காங்கே திட்டுதிட்டாய் விழுந்தது. யாரெனும் பார்த்துவிடுவார்களோ என்று தோன்றியது. அவனின் அரக்கு நிற சட்டையுடன் அவனை அந்தக் கட்டிடத்தின் இருட்டான பகுதிக்கு இழுத்துச்சென்றேன். அங்கே நெடுஞ்சாலையில் வாகனத்தில் சிக்கி காலுடைந்த நாயைப் போலக் கிடந்தான் அவன். என் ஆத்திரம் தீரும் வரை அவனை அடித்தேன். அவனை குப்புறப் படுக்க வைத்து கைகளை நீட்டி, கட்டையால் அடித்து உடைத்தேன். பக்கவாட்டில் சரிந்து கிடந்த ரத்தம் தோய்ந்த அவன் முகத்தில் ஓங்கி ஓங்கி தாடை உடையும் வரை அடித்தேன். அத்தனை தடவை அடித்தது என் பயிற்சியின்மையைக் காட்டியது. அவன் இப்போது அடங்கியிருந்தான். உயிர் இருந்தது. ஆனால் நினைவு இல்லை. அவன் கால்களை உடைக்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். ஆனால் ஏற்கனவே அது உடைந்து இருந்ததால் அதை உடைப்பது இந்த ஒட்டுமொத்த தாக்குதலுக்கே இழுக்கு என்று தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;அவனை அப்படியே போட்டுவிட்டு வாசலுக்கு விரைந்து சுற்றும்முற்றும் பார்த்தேன். சாலையில் யாருமில்லை. அவசர அவசரமாக அவனின் மொபெட்டை இழுத்து கட்டிடத்தின் ஓரத்தில் ஒதுங்கப் போட்டேன். அதன் மீது அங்கு கிடந்த பெயிண்ட் கொட்டிக்கிடந்த சாக்கை போட்டு மூடினேன். முழுவதும் மறையவில்லை. எனக்கு அதைப் பற்றி கவலையில்லை. சாலையிலிருந்து மண்ணை வாரி அவன் உடலில் ரத்தம் வரும் இடங்களிலெல்லாம் கொட்டினேன். கைகளைத் தட்டிவிட்டு விறுவிறுவென வெளியில் வந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஏதும் நடவாதது போல் சாலையில் இறங்கி என் பைக் நிறுத்தியிருந்த அடுத்த தெருவை நோக்கி நடக்கத்தொடங்கினேன். நாளை ஞாயிற்றுக்கிழமை. யாரும் வேலைக்கு வரமாட்டர். நடு நிசியில் இவனுக்கு நினைவு திரும்பினாலும் இவனால் கத்தவோ, நகர்ந்து மற்றவர் பார்வையில் விழும் வகைக்கு அசையவோ முடியாது. அசைக்க உதவக்கூடிய எல்லா உறுப்புக்களையும் அடித்து உடைத்தாயிற்று. நாளை ஒரு நாள் முழுவதிலும் காயங்கள் ரணப்பட்டு, வலி கொடுத்து, சீழ் பிடித்து உடல் கெடும். அவனுக்கு கெட்ட நேரமானால், நாளடைவில் அதுவே அவனை இறக்கவும் செய்யும். &lt;br /&gt;&lt;br /&gt;அவன் மேல் ஏன் இவனுக்கு இத்தனை வன்மம் என்றுதானே யோசிக்கிறீர்கள்? இவன் என்ன செய்தான் தெரியுமா? கல்பனாவிடம் தவறாக நடக்க முயற்சித்திருக்கிறான். அவளின் கைப் பிடித்து இழுத்திருக்கிறான். தன்னுடன் படுக்கச்சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கிறான். இப்படி ஒரு விதவையை பலவந்தப்படுத்துகையில்  இவன் ஊனமுற்றவனாக இருந்திருக்கிறான். எத்தனை கொடூரம் நிறைந்தவனாயிருந்திருக்கிறான் பார்த்தீர்களா? கல்பனா யார் தெரியுமா? அவள் ஒரு இளம் விதவை. வயது 25 தான். அவள் கதையை கேட்கும் யாருக்கும் பரிதாபம் வரும். அவளுடையது காதல் திருமணம். ஆசை ஆசையாய் காதலித்தவனை திருமணமான மூன்றே வருடத்தில் ஒரு விபத்தில் பரிகொடுத்துவிட்டு மூலியானவள் அவள். அவளுக்கு ஒரு வயதில் ஒரு மகள் இருக்கிறாள். காதல் திருமணத்தால் பெற்றவர்களின் துணையில்லை. தனியொருத்தியாய் அந்த இளம் வயதில் தன் பெண் பிள்ளைக்காக வாழத்தலைபட்டிருக்கிறாள். அவளிடம் இப்படி நடந்திருக்கிறான் இந்த மனசாட்சியில்லாதவன். &lt;br /&gt;&lt;br /&gt;சரி, உனக்கேன் இத்தனை அக்கறை என்று தானே கேட்கிறீர்கள்? என்னைப்போல் நீங்களும் அக்கறைப்படாததால் தான் ஒரு மாதம் முன்பு சீரழிக்கப்பட்டாள் அந்தப் பேதை. அப்போதுதான் அவள் விதவை ஆகியிருந்தாள். இருந்த வீட்டில் இறந்துபோன கணவனின் நினைவுகள் அதிகம் வந்ததால், வேறு வீட்டிற்கு மாறச்சொல்லி சுற்றுப்பட்டவர்களால் அறிவுறுத்தப்பட்டிருககிறாள். அவள் வீடு மாற்றிச் சென்ற புதிய வாடகை வீட்டில்தான் அந்தக் கொடுமை நடந்தது. சில அப்பாக்களின் கடின உழைப்பு அவர்தம் மகன்களிடம் விரயமாகும். அப்படித்தான் விரயமானது என் அப்பா சம்பாதித்து கட்டிய வீடு. என் சோம்பேரித்தனத்துக்கும், முட்டாள்தனத்துக்கும், கையாளாகாத தனத்துக்கும் அந்த ஒரு வீட்டை வாடகைக்கு விடுவதன் மூலம் கிடைத்த பணம் என் வயிற்றை வளர்த்தது. அதே வீடுதான் அவளை கெடவும் வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சிற்றின்பங்களையே சுவைத்து பழக்கப்பட்ட என் சிற்றறிவுக்கு அவளின் வனப்பான உடலையும், எடுப்பான முலைகளையும் பிருஷ்டங்களையும் அன்றி வேறெதுவும் தெரியவில்லை. புதிதாக வந்த வீட்டில் அவளுக்கு தொலைபேசி வசதி இருக்கவில்லை. அவளின் கையிலிருந்த மொபைலை அவளின் குழந்தை தண்ணீரில் போட்டு பாழடித்திருந்தது. அதனால் தகவல் தொடர்புக்கு அடுத்தவர்களை அண்டியிருக்க வேண்டிய சூழ் நிலை. என் மனைவி ஊருக்குச் சென்றிருந்த ஒரு கரிய நாளில், அவளுக்கு ஒரு அழைப்பு வந்தது என் வீட்டு தொலைப்பேசியில். நான் துள்ளிக் குதித்தேன், பின்னாளில் நானே அதற்கு வருத்தப்பட்டு வேறொருவனைக் கொலை கூட செய்யத் துணிவேன் என்றறியாமல். விரைந்தவளை வரவழைத்தேன். ஓநாயையும் நம்பி வந்தது அந்தப் புள்ளிமான். அன்று அந்த வீட்டில் அது நடந்தது. முதலில் திமிறினாள். ஆனால் சத்தம் போடவில்லை.  நேரம் செல்லச்செல்ல அடங்கிப் போனாள். அவளுக்கும் அதில் விருப்பமோ!!!  நான் குதூகளித்தேன். எனக்கொரு இரை சிக்கிவிட்ட மகிழ்வு. பலவீனமாக அவள், என் படுக்கையில் , அவள் மேல் நான் பலவந்தமாய் முயங்கிக்கொண்டிருந்தபோது அவள் கண்கள் கரைந்து கண்ணீரானது ஏனென்று அப்போது புரியவில்லை. அன்றிரவு நான் ஆனந்தமாய் உறங்கினேன், அதுதான் என் நிம்மதியான இரவுகளில் எஞ்சிப்போன கடைசி இரவு என்று விளங்காமல். மறுநாள் அவள் என் வீட்டில் இல்லை. எங்கு தேடியும் அவள் இல்லை. அக்கம்பக்கத்தில் யாரிடமும் அவள் ஏதும் சொல்லவில்லை. என் நெஞ்சை ஈட்டியால் நிதமும் கிழித்தெடுக்க‌ அவளின் மெளனத்தை மட்டும் விட்டுச் சென்றிருந்தாள், யாரோ ஒரு பண்பட்ட தாயால் வளர்க்கப்பட்டவள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவளின் மானம் கப்பலேறிவிடக்கூடாதென்றுதான் அவள் சத்தம் போடாமலிருந்திருக்கிறாள். அவளுக்கு அதில் துளியும் விருப்பமில்லையென்றுதான் திமிறியிருக்கிறாள். இழப்புகளால் சிதிலமடைந்து உடலாலும் உள்ளத்தாலும் பலவீனமாய்த்தான் எதிர்க்க சக்தியின்றி அடங்கிப் போயிருக்கிறாள். அவளின் இருத்தல் தொலைந்து போன அந்த நொடிகள், சம்மட்டியால் என் புத்தியை அறைந்து சொல்லிக்கொண்டிருந்தன அவள் இல்லாத அந்த வீட்டில். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நினைவு தெரிந்து அன்று தான் நான் அத்தனை அதிகமாய் பலவீனமாய் உணர்ந்தேன். என்னை நானே வெறுத்தேன். ஊருக்கு முன் என் முகத்திரை கிழித்திருக்கலாம். யாருமில்லாத அந்த இரவில் கத்தியால் என் அந்தரங்கம் கிழித்து என்னைக் கொன்றிருக்கலாம். என் முகத்தில் ஆசிட் வீசியிருக்கலாம். போதையில் மயங்கி கிடந்த நேரத்தில் ஆள் வைத்து என்னை அடித்துப் போட்டிருக்கலாம் அல்லது கொன்றே இருக்கலாம். அப்படி ஏதேனும் நடந்திருந்தால் நான் திமிருடன் எதிர்த்திருக்கலாம், என்னை படுக்கக் கூப்பிட்டதாக அவள் மேல் சேற்றை வாரி இரைத்திக்கலாம், அவளின் ஃபோன் நம்பரை எல்லா தியேட்டர் பாத்ரூமிலும் விபசாரியென பெயரிட்டு கிறுக்கியிருக்கலாம், நடு இரவில் அவள் வீட்டு முன் அசிங்கம் செய்துவிட்டு கதவு தட்டிவிட்டு ஓடிப்போயிருக்கலாம், அவள் கையால் கொல்லப்பட்டிருந்தால் ஆவியாகி, அவள் மகளை கெடுத்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அவ‌ள் ஒரேயொரு மெளனத்தால் என்னை நடைப்பிணமாக்கியிருந்தாள். அதை மெளனம் என்று சொல்லிட முடியாதுதான். இயலாமை. ஆணாதிக்க உலகில் ஒரு கைம்பெண்ணாய் என்ன செய்துவிட முடியும் என்று அவள் நினைத்திருக்கலாம். பாலின சமத்துவத்தில் காணாமல் போய்விட்ட  பெண்மையின் வெளிகளை தன்னால் மட்டும் தேடிட இயலுமாவென நம்பிக்கை இழந்திருக்கலாம். அத்தனை வருடங்களில் என்னைப் பெற்ற தாயால் கூட கழுவ முடியாத என் ரத்தத்தை பரிசுத்தமாக்கியிருந்தாள். ஒரே நொடியில் என் ஆண்மையின்மேல் நரகலை ஊற்றியிருந்தாள். இனி உயிர் உள்ளமட்டும் என் முகத்தை என்னாலேயே பார்க்க முடியாமல் செய்துவிட்டிருந்தாள்.  அன்று தொடங்கியது இந்த தண்டனை. இனி அவளுக்கு நான் காவல். எதுவரை காவல்? உங்களில் யாரோ என்னை அடையாளம் கண்டு, இதே போல் ஒரு பாதி கட்டப்பட்ட கட்டிடத்திலோ அல்லது நாற்றமடிக்கும் சாக்கடையிலோ என்னை அடித்து போடும்வரை காவல். &lt;br /&gt;&lt;br /&gt;அவளுக்கே தெரியாமல் அவளைத் தேடினேன். கண்டுபிடித்தேன். எனக்குப் பயந்து நான்கு ஊர் தள்ளிப் போயிருந்தாள் அவ‌ள்.  அவளுக்கே தெரியாமல் தினமும் அவளை பின்தொடர்கிறேன். அவளிடம் யாராவது தவறாக நடப்பதாக கேள்வியும் பட்டாலே போதும், அவனை இது போல் யாருமில்லாத சமயம் பார்த்து கையை காலை உடைத்து போடுவதென முடிவு செய்தேன். இந்தத் தண்டனைதான் எனக்குத் தரப்பட்டிருக்க வேண்டும். ஆறடி, தொண்ணூறு கிலோ எடை, பருத்த தொப்பை, உடல் முழுவதும் கருப்பாய் அடர்த்தியாய் ரோமம், அதிகமாய் குடித்ததால் வீங்கிப்போன தாடை, மிதமிஞ்சிய மைதுனங்களால் விழுந்துவிட்ட முன் தலை வழுக்கை என‌ காட்டுமிராண்டி போல் வளர்ந்திருந்ததால் எனக்கு அந்த தண்டனை தரப் பயந்து சிலர் கண்டும் காணாமல் போயிருக்கலாம். உண்மையில், அப்படி யாராவது என்னை அடித்திருந்தால், எலும்பு நொறுக்கியிருந்தால், குடல் கிழித்திருந்தால், மண்டை உடைத்திருந்தால், அந்தரங்கத்தை சிதைத்திருந்தால் கூட இத்தனை பலவீனப்பட்டிருக்க மாட்டேன். நான் அவளுக்கிழைத்தது என்னை பலவீனப்படுத்தியது. ஆறடிக்கு நின்றபடி, யாரும் பார்க்காத வகைக்கு மறைவாக நின்று அழவைத்தது. தினம் தினம் உள்ளுக்குள்ளேயே புழுங்கி சாக வைத்தது. என்னை ஊனமாக்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;காலத்தை பின்னோக்கிப் பயணிக்க எல்லோருக்கும் ஆசை. எல்லோருக்கும் திருத்திக்கொள்ள கடந்த காலத்தில் ஒரு பிழை நிச்சயம் இருக்கிறது. ஆனால், காலம் பின்னோக்கி நகராது. நடந்தது நடந்ததுதான். அதை மாற்ற முடியாது. ஆனால், இனி நடவாமல் பார்த்துக்கொள்ளலாம். அதைத்தான் செய்ய நினைக்கிறேன். செய்துகொண்டும் இருக்கிறேன். இக்கதையிலும் காலத்தை பின்னோக்கி செல்லக்கூடிய வகையில் ஒன்று நிகழ்ந்திருக்கலாம். ஆனால் இதை நான் எழுதும் இக்கணம் வரை அது நிகழவில்லை. அது, காலம் கடந்த பின்னும் நீங்கள் இன்னும் என்னை கண்டுகொள்ளவில்லை. தண்டனைக்கு இன்னும் ஏங்குகிறேன் நான். யாராவது என் கையை காலை அடித்து உடையுங்களேன். என் முகத்தில் அப்பிக்கிடக்கும் நரகலைத் துடைக்க ஒரு காயம் தாருங்களேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; - ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;#நன்றி&lt;br /&gt;உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=4513)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-8378663268142672151?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/8378663268142672151/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/06/blog-post_29.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/8378663268142672151'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/8378663268142672151'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/06/blog-post_29.html' title='தண்டனை - சிறுகதை'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-lB82XffQngA/Tgtg9b0BNMI/AAAAAAAAAqU/_l8_wI1wXqE/s72-c/story21.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-895436054192638155</id><published>2011-06-10T20:10:00.000-07:00</published><updated>2011-06-21T18:45:32.277-07:00</updated><title type='text'>கனடா ஏ9 வானொலியில் என் சிறுகதை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;i&gt;அன்பின் நண்பர்களுக்கு,&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;கனடாவைச் சேர்ந்த ஏ9 செய்தி வானொலியில் நான் எழுதிய ' நெடுஞ்சாலைக் காதல்' என்ற தலைப்பிலான ஹாஸ்யக்காதல் கதை, ஒலிப்பதிவு செய்யப்பட்டு சென்ற வாரம் வெள்ளிக்கிழமை (03/06/2011) ஒலிபரப்பப்பட்டது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;வெளியான ஒலிநாடாவின் ஒரு பகுதியை மட்டும் இங்கே இணைத்திருக்கிறேன்.&lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=lIJmNrCLd80"&gt;http://www.youtube.com/watch?v=lIJmNrCLd80&lt;/a&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;வாய்ப்பளித்த ஏ9 வானொலிக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;நட்புடன்,&lt;br /&gt;ராம்ப்ரசாத் &lt;/i&gt;&lt;b&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அந்தக் கதை இங்கே:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;u&gt;&lt;b&gt;நெடுஞ்சாலைக் காதல் - சிறுகதை&lt;/b&gt;&lt;/u&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திண்டிவனம் ‍- பண்ருட்டி நெடுஞ்சாலையில் நிச்சலனமாய் வெறிச்சோடிக்கிடந்த அந்தப் புற நகர் பேருந்து நிலைய ஹோட்டல் அவரது கவனத்தை கல்மிஷமாய்க் கிளர ஒரே ஒரு காரணம் மட்டுமே இருந்தது மாதவன் நம்பிக்கு. அது, சற்று நேரம் முன்பு, குடும்பப்பாங்கான சுடிதார்ப் பெண்ணொருத்தி முதலில் உள்ளே நுழைய,&amp;nbsp; திருட்டுத்தனமாய் அங்குமிங்கும் பார்த்துவிட்டு அவளையே வெறித்துப் பார்த்தபடி பின்னாலேயே ஒரு இளைஞனும் உள்ளே நுழைந்தது தான். பார்க்க நெடுஞ்சாலைத் திருடம் போலிருந்தான். ஹோட்டல் கதவு வெகு இயல்பாய் ஒருக்களித்து சாத்தப்பட்டிருந்தது அவரது சந்தேகத்தை மேலும் கிளர, அவர் அந்தக் கதவருகே மெல்ல பதுங்கினார். உள்ளே பார்க்க முடியவில்லையே தவிர அந்த ஆணும் பெண்ணும் பேசிக்கொள்வது தெளிவாகக் கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'ஹலோ மிஸ்டர், தனியா நிக்கிற பொண்ண அப்படி மொறச்சி மொறச்சி பாக்கிறீங்களே. மேனர்ஸ் தெரியாதா?'.&lt;br /&gt;&lt;br /&gt;'என்னங்க காமெடி பண்றீங்க. உங்களையே பார்த்தா மேனர்ஸ் எப்படிங்க கண்ணுக்கு தெரியும்? நான் என்ன மேனர்ஸயா பாத்தேன்?'&lt;br /&gt;&lt;br /&gt;'என்ன கொழுப்பா?'.&lt;br /&gt;&lt;br /&gt;'ஆமா, 67 கிலோ மொத்தம்'&lt;br /&gt;&lt;br /&gt;'க்ர்ர்ர்ர்ர்....'.&lt;br /&gt;&lt;br /&gt;'கூல். மேனர்ஸ் நல்லாவே தெரியும், ஆனா நான் உங்கள பாக்கலியே, என் கல்யாணத்துக்கு ஒரு அழகான பொண்ணா பாத்துக்கிட்டுருந்தேன்'.&lt;br /&gt;&lt;br /&gt;'ஓ, தெரியுமே, கேள்வி கேட்டுட்டா உடனே நான் பாக்கல, நீ பாக்கலன்னு பதுங்கிடுவீங்களே. வேற யார பாத்தீங்களாம்?'.&lt;br /&gt;&lt;br /&gt;'உங்கள விட அழகா ஒரு பொண்ணு உங்களுக்கு பின்னால போனா. அவளத்தான் பாத்தேன்'.&lt;br /&gt;&lt;br /&gt;'அப்ப அவ பின்னாடியே போக வேண்டியதுதானே?'.&lt;br /&gt;&lt;br /&gt;'யூஸ்லெஸ், அவ ரெண்டு மாசம் முன்னாடிதான் பொறந்திருப்பா போல. ரெண்டு மாசக் குழந்தை. அவ பின்னாடி போனா எனக்கு அறுபதாங்கல்யாணம்தான் நடக்கும்'.&lt;br /&gt;&lt;br /&gt;'ஓ, அப்புறம் இங்க என்ன பண்றீங்களாம்?'.&lt;br /&gt;&lt;br /&gt;'அவள விட‌ நீங்க அழகு இல்லன்னாலும், அவளுக்கு அடுத்தபடி நீங்கதான் அழகு. உங்ககூட கல்யாணம்னா நான் அறுபது வரைக்கு வெயிட் பண்ண வேண்டியது இல்ல'.&lt;br /&gt;&lt;br /&gt;'அதானே பார்த்தேன், என்னடா இன்னும் ஆரம்பிக்கலியேன்னு. உங்களுக்கெல்லாம் இதே வேலையா, எவடா கிடைப்பா, நூல் விடலாம்னு அலைவீங்களோ?'&lt;br /&gt;&lt;br /&gt;'ச்சே சே, நூல் விட்டு எனக்கு பழக்கமே இல்லங்க. அப்படி விட்டிருந்தா இத்தன்னேரம் எனக்கு கல்யாணமாகி ரெண்டு புள்ள பொறந்திருக்கும். ஒண்ணு உங்கள மாதிரி, இன்னொன்னு என்னை மாதிரி'.&lt;br /&gt;&lt;br /&gt;'ம்ம்ம்ம்... சாருக்கு இன்னிக்கு நேரம் சரி இல்லன்னு நினைக்கிறேன்.. அர்த்த ராத்திரில என்னை தொல்லை பண்றான்னு ஈவ் டீசிங் கேஸுல உள்ள போகணுமா?'.&lt;br /&gt;&lt;br /&gt;'தயவு செஞ்சி அத பண்ணிடுங்க. போலீஸ்ல சொன்னா போஸ்டர் அடிச்சி ஒட்டினா மாதிரி. அப்பறம் உங்கள யாரும் கட்டிக்கமாட்டாங்க. அப்புறம் நான் தான் உங்களுக்கு. பரவால்லயா'.&lt;br /&gt;&lt;br /&gt;'ஓ காட்!!'.&lt;br /&gt;&lt;br /&gt;'கரெக்ட், அவர்கிட்டதான் வேண்டிக்கிட்டேன். நீங்க எனக்கே கிடைக்கணும்னு'.&lt;br /&gt;&lt;br /&gt;'ஆனா, அது நடக்கவே நடக்காது'. &lt;br /&gt;&lt;br /&gt;'ஏங்க?'.&lt;br /&gt;&lt;br /&gt;'ஏன்னா, எனக்கு ஏற்கனவே மேரேஜ் ஆயிடிச்சு. இன்னும் கொஞ்ச நேரத்துல ஹஸ்பெண்ட் வந்துடுவார்'.&lt;br /&gt;&lt;br /&gt;'அப்டியா, ஐ..சும்மா கத விடாதீங்க.. கழுத்துல தாலி இல்ல, கால்ல மெட்டி இல்ல'.&lt;br /&gt;&lt;br /&gt;'ஆனா, கை விரல்ல ரிங் இருக்கே'.&lt;br /&gt;&lt;br /&gt;'அப்டின்னா?'.&lt;br /&gt;&lt;br /&gt;'மரமண்டை, நான் க்ரிஸ்டியன்'&lt;br /&gt;&lt;br /&gt;'ஓ..அய்யோ, உங்கள என் ஆளுன்னு என் மனசுல ஃபிக்ஸ் பண்ணிட்டேனே'.&lt;br /&gt;&lt;br /&gt;'அதனால?'.&lt;br /&gt;&lt;br /&gt;'அதனால, நாம ரெண்டு பேரும் ஊர விட்டு ஓடிப்போயிடலாமே'.&lt;br /&gt;&lt;br /&gt;'செருப்பு பிஞ்சிடும்'.&lt;br /&gt;&lt;br /&gt;'பரவால்ல, உங்கள அழகா என் கைல தூக்கிட்டு நானே ஓடுறேங்க. நீங்க வந்தா மட்டும் போதும்'&lt;br /&gt;&lt;br /&gt;'அய்யோ, கடவுளே'&lt;br /&gt;&lt;br /&gt;'அவரு ஏங்க பூஜை வேலைல கரடி மாதிரி'&lt;br /&gt;&lt;br /&gt;'அடப்பாவி'&lt;br /&gt;&lt;br /&gt;அவன் அத்துமீறுகிறான். நிச்சயமாக தனியே இருக்கும் பெண்ணிடம் வம்பு வளர்க்கிறான் தான். பொறுத்தது போதும். ராகவன் நம்பி ஒரு முடிவு செய்தவராய், திடீரென்று உள்ளே பாய்ந்து அவனைப் பிடித்து ரத்தகளரியாக்கிவிடும் நோக்கில் நுழைய...&lt;br /&gt;&lt;br /&gt;"சன் செய்திகள். வழங்குவோர் சூர்யா டி.எம்.டி ராட், ஷிரி குமரன் தங்க மாளிகை...."&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே கல்லாவுக்கு அருகில் பக்கவாட்டில் கலர் டிவியில் சன் டிவி நிகழ்ச்சிகள் ஓடிக்கொண்டிருக்க‌ &lt;br /&gt;சற்றுத் தள்ளி, ஒரு டேபிளில் அவன் அமர்ந்து கையில் இருந்த மொபைலில் எதையோ நோண்டிக்கொண்டிருக்க, அந்தப் பெண் சற்றுத்தள்ளி இன்னொரு டேபிளில் அமர்ந்து ஒரு டீயை உறிஞ்சிச்சுவைத்தபடியே திடுமென உள்ளே நுழைந்த ராகவன் நம்பியைப் பார்க்க, அவளைத்தொடர்ந்து அவனும் அவரை திரும்பிப் பார்த்தான். அவர்களுக்கு அந்தப் பக்கம் ஹோட்டலில் அடுத்த மூலையில் ஒரு பெண், இது எதையும் கவனியாதவளாய் கையில் இரண்டு மாதக் குழந்தையுடன் எதையோ வாயிலடைத்துக்கொண்டிருந்தாள். அவள் எதிரில் அறுபது வயதில் ஒரு கிழவி, வாழை இலையில் பரவிக்கிடந்த சாம்பாரை வலக்கையால் துழாவிக்கொண்டிருந்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;ராகவன் நம்பி, சட்டென வேகங்குறைத்து, இயற்கையாய்ப் பொங்கிய ஆவேசத்தை செயர்க்கையாய் மட்டுப்படுத்தி இரண்டடி எட்டி வைத்து ஒரு டேபிளில் அமர்ந்து, உயர்த்திய முண்டாவை மெல்ல சீராக்கியவாறே அவர்கள் முகத்தை பார்க்காத வகைக்கு தலைகுனிந்து கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அரைக் கால்சட்டையும், நைந்து போன பனியனும் போட்டிருந்த, அரும்பு மீசை முளைத்திருந்த பையனொருவன் ராகவன் நம்பியை நெருங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;'சார், இட்லி, வடை, பூரி, உப்புமா, ஊத்தப்பம், டீ, காபி. உங்களுக்கு என்ன வேணும்?'.&lt;br /&gt;&lt;br /&gt;'கொஞ்சம் மூளை'&lt;br /&gt;&lt;br /&gt;'!?!...'&lt;br /&gt;&lt;br /&gt;முற்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)&lt;/div&gt;&lt;br /&gt;#நன்றி&lt;br /&gt;உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=4046)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-895436054192638155?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/895436054192638155/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/06/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/895436054192638155'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/895436054192638155'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/06/blog-post.html' title='கனடா ஏ9 வானொலியில் என் சிறுகதை'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-4864066837248786379</id><published>2011-05-22T08:57:00.000-07:00</published><updated>2011-05-22T08:57:32.749-07:00</updated><title type='text'>ரீங்கார வரவேற்புகள்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-Ly_DzPSeav0/Tdkx4C7HmlI/AAAAAAAAAqA/l8HWF8Oq3rg/s1600/bee-and-flower.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="351" width="400" src="http://3.bp.blogspot.com/-Ly_DzPSeav0/Tdkx4C7HmlI/AAAAAAAAAqA/l8HWF8Oq3rg/s400/bee-and-flower.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;ரீங்கார வரவேற்புகள் &lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில பூக்கள் வண்டுகளின் &lt;br /&gt;ரீங்கார வரவேற்புகளில் &lt;br /&gt;பழகிவிடுகின்றன... &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரீங்கரிக்க மாட்டாத வண்டுகளுக்கு &lt;br /&gt;தேன் பரிமாற எந்தப் பூவும் &lt;br /&gt;விரும்புவதில்லை... &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரீங்காரங்களின் வசீகரங்களில் &lt;br /&gt;தொலைந்துபோகும் வண்டுகள் &lt;br /&gt;தேயும் தன் முதுகெலும்புகள் மேல் &lt;br /&gt;காலம்தாழ்த்தி கவனம் கொள்கின்றன... &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எதற்கோ பிறந்துவிட்டு &lt;br /&gt;ரீங்கரிக்கவே பிறந்திருப்பதாய் &lt;br /&gt;காட்சிப்பிழை காணும் வண்டுகளுள் &lt;br /&gt;கூடுகளையும், கிளைகளையும் அடையும் &lt;br /&gt;வண்டுகளின் பாடங்கள் &lt;br /&gt;சுவாரஸ்யமானவை... &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)&lt;br /&gt;&lt;br /&gt;#நன்றி&lt;br /&gt;திண்ணை இணைய இதழ்(http://www.thinnai.com/?module=displaystory&amp;story_id=31105221&amp;format=html)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-4864066837248786379?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/4864066837248786379/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/05/blog-post_22.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/4864066837248786379'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/4864066837248786379'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/05/blog-post_22.html' title='ரீங்கார வரவேற்புகள்'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-Ly_DzPSeav0/Tdkx4C7HmlI/AAAAAAAAAqA/l8HWF8Oq3rg/s72-c/bee-and-flower.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-5243453925130214498</id><published>2011-05-22T08:53:00.001-07:00</published><updated>2011-05-22T08:53:42.248-07:00</updated><title type='text'>தண்ணீர் காட்டில் - 6</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-0_ZHscO7m9o/TdkxMER1h8I/AAAAAAAAAp4/4eOQKon2bwk/s1600/ocean-shores.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="320" width="400" src="http://1.bp.blogspot.com/-0_ZHscO7m9o/TdkxMER1h8I/AAAAAAAAAp4/4eOQKon2bwk/s400/ocean-shores.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;தண்ணீர் காட்டில் - 6 &lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சக்தி இல்லையேல் &lt;br /&gt;சிவம் இல்லை...&lt;br /&gt;&lt;br /&gt;நிரூபண‌ம் &lt;br /&gt;பூமியின் முதல் பெண் &lt;br /&gt;தண்ணீர்...&lt;br /&gt;&lt;br /&gt;உயிர்களை ஈன்றது &lt;br /&gt;தண்ணீர்...&lt;br /&gt;&lt;br /&gt;பூமியின் முதல் மனிதன் &lt;br /&gt;பெண்...&lt;br /&gt;&lt;br /&gt;பெண்மையின் ரூபம் தண்ணீர்...&lt;br /&gt;தண்ணீரின் தாய்மை உலகம்...&lt;br /&gt;&lt;br /&gt; - ராம்ப்ரசாத் சென்னை ( ramprasath.ram@googlemail.com )&lt;br /&gt;&lt;br /&gt;#நன்றி&lt;br /&gt;கீற்று இலக்கிய இதழ்(http://www.keetru.com/index.php?option=com_content&amp;view=article&amp;id=14760:-6&amp;catid=2:poems&amp;Itemid=265)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-5243453925130214498?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/5243453925130214498/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/05/6.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/5243453925130214498'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/5243453925130214498'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/05/6.html' title='தண்ணீர் காட்டில் - 6'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-0_ZHscO7m9o/TdkxMER1h8I/AAAAAAAAAp4/4eOQKon2bwk/s72-c/ocean-shores.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-6140449665573955234</id><published>2011-05-20T20:02:00.001-07:00</published><updated>2011-05-20T20:02:43.857-07:00</updated><title type='text'>தண்ணீர் காட்டில் - 5</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-ptw3dxWf7v8/Tdcq_u2-OGI/AAAAAAAAApw/czk_Er44T7M/s1600/baby_in_mother_womb.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="385" width="295" src="http://2.bp.blogspot.com/-ptw3dxWf7v8/Tdcq_u2-OGI/AAAAAAAAApw/czk_Er44T7M/s400/baby_in_mother_womb.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;தண்ணீர் காட்டில் - 5 &lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை விந்தை &lt;br /&gt;தெரியுமா தண்ணீர்?&lt;br /&gt;&lt;br /&gt;பத்துமாதம் கருவறையில்&lt;br /&gt;எவரும் நீந்தியிருக்கலாம்...&lt;br /&gt;ஆனால், கடலில் நீந்தக்&lt;br /&gt;கற்றுக்கொள்ளத்தான் வேண்டும்...&lt;br /&gt;&lt;br /&gt;விந்தைகளின் சந்தை &lt;br /&gt;தண்ணீர்...&lt;br /&gt;&lt;br /&gt;கரை உலர்கையில் &lt;br /&gt;நனைக்கிறது அலை...&lt;br /&gt;&lt;br /&gt;உடல் உலர்கையில்&lt;br /&gt;வியர்க்கிறது உடல்...&lt;br /&gt;&lt;br /&gt;ந‌னைக்காவிடில் &lt;br /&gt;உள்வாங்கியிருக்கும்...&lt;br /&gt;விய‌ர்க்காவிடில் &lt;br /&gt;உயிர் வாங்கியிருக்கும்...&lt;br /&gt;&lt;br /&gt; - ராம்ப்ரசாத் சென்னை ( ramprasath.ram@googlemail.com )&lt;br /&gt;&lt;br /&gt;#நன்றி&lt;br /&gt;கீற்று இலக்கிய இதழ்(http://www.keetru.com/index.php?option=com_content&amp;view=article&amp;id=14739:-5&amp;catid=2:poems&amp;Itemid=265)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-6140449665573955234?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/6140449665573955234/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/05/5.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/6140449665573955234'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/6140449665573955234'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/05/5.html' title='தண்ணீர் காட்டில் - 5'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-ptw3dxWf7v8/Tdcq_u2-OGI/AAAAAAAAApw/czk_Er44T7M/s72-c/baby_in_mother_womb.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-469808829609112086</id><published>2011-05-19T08:11:00.000-07:00</published><updated>2011-05-19T08:11:56.175-07:00</updated><title type='text'>தண்ணீர் காட்டில் ‍- 4</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/--cjLIcCXHI8/TdUyu6rBshI/AAAAAAAAApo/dF3IEq8mgOo/s1600/ocean.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="400" width="300" src="http://4.bp.blogspot.com/--cjLIcCXHI8/TdUyu6rBshI/AAAAAAAAApo/dF3IEq8mgOo/s400/ocean.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;தண்ணீர் காட்டில் ‍- 4&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;த‌ண்ணீர் என்பது &lt;br /&gt;நிலத்தூரிகை கொண்டு&lt;br /&gt;உல‌கை வ‌ரைந்த &lt;br /&gt;அற்புத‌மான‌ ஓவிய‌ச்சி...&lt;br /&gt;&lt;br /&gt;தண்ணீர் சூழ்ந்து, தனியானது&lt;br /&gt;ஆஸ்திரேலிய கண்டம்...&lt;br /&gt;&lt;br /&gt;தண்ணீர் புகுந்து, தேடப்பட்டது&lt;br /&gt;அமேரிக்க கண்டம்...&lt;br /&gt;&lt;br /&gt;த‌ண்ணீர் உதிர்ந்தால் தூர‌ல்...&lt;br /&gt;த‌ண்ணீர் குளித்தால் ம‌ழை...&lt;br /&gt;தண்ணீர் நியூட்ட‌னை எதிர்த்தால் மேக‌ம்...&lt;br /&gt;தண்ணீர் தண்ணீருடன் சினேகித்தால் கடல்...&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் தண்ணீரே உலகம்...&lt;br /&gt;உலகம் முழுமைக்கும் தண்ணீர்...&lt;br /&gt;&lt;br /&gt; - ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)&lt;br /&gt;&lt;br /&gt;#நன்றி&lt;br /&gt;கீற்று இலக்கிய இதழ்(http://www.keetru.com/index.php?option=com_content&amp;view=article&amp;id=14700:-4&amp;catid=2:poems&amp;Itemid=265)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-469808829609112086?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/469808829609112086/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/05/4.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/469808829609112086'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/469808829609112086'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/05/4.html' title='தண்ணீர் காட்டில் ‍- 4'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/--cjLIcCXHI8/TdUyu6rBshI/AAAAAAAAApo/dF3IEq8mgOo/s72-c/ocean.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-2932850899103964516</id><published>2011-05-18T18:54:00.000-07:00</published><updated>2011-05-18T18:54:27.182-07:00</updated><title type='text'>தண்ணீர் காட்டில் ‍- 3</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-uQIdjEeR1nk/TdR22uz9-OI/AAAAAAAAApg/sosASfL-8GM/s1600/sea1.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="400" width="400" src="http://2.bp.blogspot.com/-uQIdjEeR1nk/TdR22uz9-OI/AAAAAAAAApg/sosASfL-8GM/s400/sea1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;தண்ணீர் காட்டில் ‍- 3&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நெருப்பும் நீரும்&lt;br /&gt;தாய் சேய்...&lt;br /&gt;&lt;br /&gt;பூமிக்கருவில் கொதிக்கும்&lt;br /&gt;வெப்பம் தாய்...&lt;br /&gt;வெப்ப‌ம் ஈன்ற‌ சேய்&lt;br /&gt;த‌ண்ணீர்...&lt;br /&gt;&lt;br /&gt;சமயங்களில் &lt;br /&gt;சேய் தாயாகிடுகையில் &lt;br /&gt;சேயாகிவிடுகிறது தாய்...&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்..&lt;br /&gt;நுண்ணுயிர்கள் தண்ணீர்&lt;br /&gt;ஈன்ற சேய்...&lt;br /&gt;பெண்ணின் க‌ருவ‌றையில்&lt;br /&gt;நீர்க்குட‌ம் ஈன்றுவிடுகிற‌து &lt;br /&gt;வெப்ப‌ம்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; - ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;#நன்றி&lt;br /&gt;கீற்று இலக்கிய இதழ்(http://www.keetru.com/index.php?option=com_content&amp;view=article&amp;id=14690:-3&amp;catid=2:poems&amp;Itemid=265)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-2932850899103964516?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/2932850899103964516/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/05/3.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/2932850899103964516'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/2932850899103964516'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/05/3.html' title='தண்ணீர் காட்டில் ‍- 3'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-uQIdjEeR1nk/TdR22uz9-OI/AAAAAAAAApg/sosASfL-8GM/s72-c/sea1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-5051486874585817857</id><published>2011-05-16T08:57:00.000-07:00</published><updated>2011-05-16T08:57:29.580-07:00</updated><title type='text'>ரகசிய பேச்சுக்கள்</title><content type='html'>&lt;b&gt;&lt;i&gt;ரகசிய பேச்சுக்கள் &lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுவாரஸ்யமான நம் ரகசியப் பேச்சுக்களை &lt;br /&gt;காற்றில் அலைபாய்ந்து &lt;br /&gt;விளையாடுவதாய் நடித்து&lt;br /&gt;ஒட்டுக்கேட்கின்றன தேனீர்&lt;br /&gt;கோப்பைக்குள்ளிருந்து வெளிப்படும்&lt;br /&gt;வெண்ணிற மேகங்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;நாம் கவனிப்பதை உணர்ந்து &lt;br /&gt;அவைகள் ஓடி ஒளிந்துவிடுகையில்&lt;br /&gt;ரகசியங்களை மீண்டும் நிரப்பிக்கொள்ள‌&lt;br /&gt;இருக்கைக்கு திரும்பிவிடுகிறோம் நாம்...&lt;br /&gt;&lt;br /&gt;- ராம்ப்ரசாத் சென்னை ( ramprasath.ram@googlemail.com )&lt;br /&gt;&lt;br /&gt;#நன்றி&lt;br /&gt;கீற்று இலக்கிய இதழ்(http://www.keetru.com/index.php?option=com_content&amp;view=article&amp;id=14633:2011-05-16-01-31-03&amp;catid=2:poems&amp;Itemid=265)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-5051486874585817857?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/5051486874585817857/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/05/blog-post_16.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/5051486874585817857'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/5051486874585817857'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/05/blog-post_16.html' title='ரகசிய பேச்சுக்கள்'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-6077414448576366559</id><published>2011-05-08T18:54:00.000-07:00</published><updated>2011-05-08T18:54:26.848-07:00</updated><title type='text'>கொலையாளி யார் - துப்பறியும் சிறுகதை</title><content type='html'>&lt;b&gt;&lt;i&gt;'கொலையாளி யார்?' என்ற தலைப்பில் நான் எழுதிய துப்பறியும் சிறுகதை காற்றுவெளி இலக்கிய இதழில் (மே 2011) வெளியாகியுள்ளது. இதழின் முதல் பக்கம், சிறுகதை வெளியான இதழின் 75 வது பக்கம் மற்றும் சிறுகதையின் கடைசி 93 வது பக்கங்களின் பிரதிகள் இங்கே.&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-zUd6KRfCROs/TcdINTs5w8I/AAAAAAAAApA/9vt7C7yUixI/s1600/kaatruveli_may_2011.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="190" width="400" src="http://4.bp.blogspot.com/-zUd6KRfCROs/TcdINTs5w8I/AAAAAAAAApA/9vt7C7yUixI/s400/kaatruveli_may_2011.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;கொலையாளி யார் - துப்பறியும் சிறுகதை&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மதிய வெயில் சுரீரென்று காற்றை பொசுக்கிக்கொண்டிருக்க, ஈ.சி.ஆர் ரோட்டில் சற்றே தாழ உள்ளடங்கிய லக்ஸர் ரிசார்டின் வாசலில் ரோட்டோரமானதான ரிசார்டின் தென்னை மரங்களின் நிழலில் கிரீச்சிட்டு நின்றது அந்த போலீஸ் ஜீப். உள்ளிருந்து விரைப்பாய் மிடுக்காய் இறங்கினார் இன்ஸ்பெக்டர் நல்லசிவம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'செல்வம், ஜீப்பை உள்ள போடாத. கொஞ்சம் தள்ளி போட்டுட்டு வா' திரும்பி ஜீப்பை ஓட்டிவந்த டிரைவர் செல்வத்திடம் சொல்லிக்கொண்டே அகண்ட ரிசார்ட்டின் வாசலை கவனமாக ஊடுறுவ, செல்வம் அதை முன்பே எதிர்பார்த்தவனாய் ஜீப்பை சற்று தள்ளி நிறுத்தக் கடந்து போனான். செல்வத்துக்குத் தெரியும். நல்லசிவத்தின் வழக்கமான செய்கைகள் தான். கொலையாளி ரிசார்ட்டை விட்டு வெளியேறியிருப்பின் நடந்தோ, ஓடியோ அல்லது ஏதொரு வாகனத்திலோ போயிருந்தால், அந்தத் தடங்களை போலீஸ் ஜீப்பின் டயர்கள் அழித்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுதான் காரணம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நல்லசிவத்துக்கு அந்த வெயிலோ, அந்த மாதிரியான ரிசார்ட்டோ, அல்லது அங்கே அவர் துப்பு துலக்க வந்த அந்த கொலையோ எதுவுமே புதிதில்லை. அவர் சர்வீஸில் இதைப்போல் எண்ண‌ற்ற கேஸ்களைப் பார்த்திருக்கிறார், முதலில் கான்ஸ்டெபிள், அப்புறம் ஏ.எஸ்.ஐ, பிறகு எஸ்.ஐ, இப்போது இன்ஸ்பெக்டர். எந்த கேஸையும் கண்டுபிடிக்காமல் விட்டதில்லை. அதனால்தானோ என்னவோ இந்தக் கொலையும் இவரது கையிலேயே. &lt;br /&gt;&lt;br /&gt;அவரைப் பற்றிய சில மேல்விவரங்கள், அவருக்கு வயது முப்பத்துஒன்பது (கவர்மென்ட் ரிகார்ட்ஸ்ல், உண்மையான வயது நாற்பது). திருமணமாகி இரண்டு பிள்ளைகள். காலேஜில் ஒரு பையனும், ப்ளஸ் ஒன்னில் ஒரு பெண்ணும். விசாலமான அறிவை புத்தகங்களை நாடி அடைந்ததாலோ அல்லது அமைதியான அழகான குடும்பப்பிண்ணனி அமைந்த காரணத்தினாலோ என்னவோ நல்லசிவம் பெயருக்கேற்றார்போல நல்லவர். பழகுவதற்கு மென்மையானவர். இந்த மென்மைத்தன்மை அவரின் தொழிலிலும் தொடர்ந்தது. துப்புதுலக்குவதில் நல்லசிவம் அஹிம்சா பேர்வழி. அமைதியாகவே வேலை செய்வார். மிகத்தெளிவாகக் கேள்வி கேட்பார். ரத்தினச்சுருக்கமாக இருக்கும் அவரின் கேள்விகள். வேலை நேரத்தில் யாரிடமும் அதிகம் பேசவோ, விவாதமோ செய்யமாட்டார். இது ஒரு வகையில் ஒரு நல்ல ஸ்ட்ராடெஜியாகத்தான் இருந்திருக்கிறது. குற்றவாளிகளுக்கோ, குற்றவாளிகளின் கையாள்களுக்கோ அவர் குற்றவாளியை நெருங்கிவிட்டாரா இல்லையா என்பது மர்மமாகவே இருக்கும். அந்த மர்மத்திலேயே அவர் தனது விசாரணையைத் தொடருவார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில நேரங்களில், துப்புத்துலக்குபவரின் தீவிரத்தில், குற்றவாளிகள் மாட்டிக்கொள்ளாமல் இருக்க மேலும் மேலும் தவறு செய்வார்கள், அல்லது சாட்சிகளைக் கலைப்பார்கள். இதனால், துப்புதுலக்குபவருக்கு சிக்கல் அதிகரிக்கும். குற்றவாளி தப்பிவிடும் வாய்ப்புக்கள் அதிகமாகிவிடும். அதனால்தானோ என்னவோ, நல்லசிவத்தின் ஆளுமை அவராலேயே மெளனித்திருக்கும். பதுங்கும் சிறுத்தை போல. பல சமயங்களில், இவரெங்கே பிடிக்கப்போகிறார் என்பதாக நினைக்க வைக்கும். ஒரு துப்புதுலக்குபவரின் பொதுவான குணாதிசயங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும் அவரின் ஒவ்வொரு அசைவும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நல்லசிவம் கவனித்தவரையில், ரிசார்ட்டின் மெயின் கேட்டில் ஏதொரு தடயமும் இருக்கவில்லை. அகலமான மெயின்கேட். ஈ.சி.ஆர் ரோட்டிலிருந்து சற்றே உள்ளடங்கி தாழ்வாக இருந்தது. தென்னை மரங்களின் நிழலில் அத்தனை வெம்மை தெரியவில்லை. கிராமங்களில் ஒரு தென்னந்தோப்பில் நின்று இளநீர் குடிப்பதான உணர்வுதான். ரிசார்ட் மிகக் காஸ்ட்லியானதுதான். தென்னை மரங்களின் நிழலில் இதமாக காற்று வீசுவதை முழுவதும் அனுபவிக்க விடாதபடி பகல் சூரியனும், ஒரு கொலையும் தடுத்துக்கொண்டிருந்தது மனதளவிலும். யாரோ ஒரு அரசியல்வாதியின் பினாமியின் சொத்து. அதனால்தானோ என்னவோ, உயர் அதிகாரிகளிடமிருந்து தகவல் வருவதற்கு முன்னரே அந்த அரசியல்வாதியின் ஆட்களே தொடர்பு கொண்டுவிட்டார்கள். நடுத்தர குடும்பங்கள் சர்வ நிச்சயமாய் இங்கெல்லாம் எட்டிக்கூடப் பார்க்காது. நிச்சயம் பெரிய இடத்து மக்கள் தான் வருவார்கள். அப்படியானால், குற்றங்களுக்கு பஞ்சமே இருக்காது என்று நினைத்துக்கொண்டார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளை பாண்ட், இன் செய்யப்பட்ட வெள்ளை சர்ட், அதைத் தாண்டியும் பிதுங்கித் தொங்கிய தொப்பை, கறுப்பு பெல்ட், கறுப்பு ஷூ என ஐந்தடியில், இரண்டு கைகளையும் குறுக்கே கட்டி, தோல்கள் குறுக்கி மாநிறத்தில் ஒருவர் நல்லசிவத்தை பார்த்ததும் அவரை வரவேற்கும் தோரனையில் ஓடி வந்தார். அந்தத் தோரணை, வரவேற்கும் தோரணையா, பதட்டமா, பயமா, பணிவா, தன்னடக்கமா, அல்லது வேறு ஏதாவதா என்று தோன்றும் வகைக்கும் ஒரு குழப்பமான உணர்வை வெளிக்காட்டுவதாக இருந்தது. ஓடி வருகையிலேயே விழுந்துவிடுவார் போலிருந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'யார் ஃபோன் பண்ணினது?'.&lt;br /&gt;&lt;br /&gt;'சார், நாந்தான் சார். சீக்கிரம் வாங்க சார். அவனைப் புடிச்சி வச்சிருக்கோம் சார்'.&lt;br /&gt;&lt;br /&gt;'யாரை?'.&lt;br /&gt;&lt;br /&gt;'அவந்தான் சார். அந்த பொண்ணைக் கொலை பண்ணினவன'.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பரபரப்பான நேரத்திலும் நல்லசிவத்துக்கு லேசாக சிரிப்பு வந்தது. எல்லோரும் சி.ஐ.டி வேலை பார்க்கத்தொடங்கிவிட்டார்கள் என்று நினைத்துக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஹ்ம்ம் நீங்க யாரு? உங்க பேரு?'.&lt;br /&gt;&lt;br /&gt;'நான் இங்க மானேஜர் சார். பிரதீபன் சார்'.&lt;br /&gt;&lt;br /&gt;'ஹ்ம்ம் பாடி எங்க?'.&lt;br /&gt;&lt;br /&gt;'வாங்க சார். காட்றேன்'. கொஞ்சம் விட்டாலும் நல்லசிவத்தை நிற்க வைத்து சாஷ்டாங்கமாய்க் காலில் விழுந்துவிடுவார் போலிருந்தது. அத்த‌னைக் குழைந்தார் அவ‌ர். அவ‌ர் செய்கைக‌ளைப் பார்க்கையில் ஒரு கொலை செய்ய‌க்கூடிய‌ ஆளாக‌ இருப்ப‌தாக‌த் தெரிய‌வில்லை என்ப‌தை உண‌ர்ந்த‌ப‌டியே ந‌ல்ல‌சிவ‌ம் பின்னால் ந‌ட‌க்க‌, ரிச‌ப்ஷ‌னை ஒட்டிய‌ போர்டிகோவைத் தாண்டி, இட‌துபுற‌ம் அழ‌காக‌ ஃபென்சிங்குட‌ன் கூடிய‌ தோட்ட‌த்தையும், வ‌ல‌து புற‌ம் வ‌ரிசையாய் த‌ங்க‌க்கூடிய‌ அள‌விலான‌ ஓர‌டுக்கு கொண்ட‌ த‌ங்கும் சொகுசு அறைக‌ளையும் கொண்ட பகுதியினூடே சிமென்ட் கற்கள் பதித்த ந‌டைபாதையில் பிர‌தீப‌ன் அழைத்துச்சென்றார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வலதுபுறம் கீழ்த்தளத்தில் சொகுசு அறை வாசலில் ஃப்ராக்கில் ஒரு பெண்பிள்ளை கையில் பந்துடன் இவரையே பார்த்து நின்றது. முதல்மாடியில் இருந்த சொகுசு அறையின் பால்கனியில் ஒருவர் இடது கையில் சீப்பை பிடித்து, தலைவாரிக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தார்.. அவர் பார்வை, நடப்பதை ஏதோவொரு அசூசையுடன் பார்ப்பது போல் பட்டது நல்லசிவத்திற்கு. இது போல் பல சமயங்களை கடந்திருக்கிறார் அவர். சாமான்யர்களுக்கு என்றோ நடக்கும் இது போன்ற விஷயங்கள் காவல்துறையைப் பொருத்தமட்டிலும் அன்றாட நிகழ்வுகள் தானே. போகிற போக்கில் ஏனைய அறைகளையும் ஒரு பார்வை பார்த்தார். அவைகள் காலியாகவே இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்ஸ்பெக்டர் நல்லசிவம் பார்வையாலேயே அந்த இடத்தை மிகக்கவனமாய் குறிப்பெடுத்துக்கொண்டிருந்தார். &lt;br /&gt;செல்லும் வழியெங்கும் சிமென்ட் கற்களில் நடைபாதை, அளவாக சீராக வெட்டப்பட்ட புற்கள், அடர்ந்து வளர்ந்த செடிகள் அனைத்தும் கூட சீராக அளவாக அழகாக வெட்டப்பட்டிருந்தது அந்த ரிசார்டின் பராமரிப்பை வியந்து பார்க்கவைத்தது. ஒரு பெரிய தென்னந்தோப்பை குடைந்து, வேண்டிய இடங்களில் தென்னைமரங்களை அகற்றி சீராக்கி ரிசார்ட் கட்டியது போல் நேர்த்தியாக அழகாக இருந்தது.இருப‌த‌டி தூர‌த்தில் வ‌ல‌துபுற‌ம் ஒரு நீச்ச‌ல்குள‌ம். அடுத்து ந‌டைபாதை. இட‌துபுற‌மாக‌ அந்த‌ செய‌ற்கை நீர்வீழ்ச்சி. அதில் சிறிய‌தாய் பால‌ம் போல‌ அமைத்து, அத‌ன் கீழே சிறிய‌ள‌வில் நீர் தேக்கி, அதில் அழ‌கான‌ த‌ங்க‌ நிற‌ம், க‌றுப்பு நிற‌ங்க‌ளில் மீன்க‌ளை அலைய‌ விட்டிருந்த‌ன‌ர். அந்த மீன்கள் நான்றாய் தின்று கொழுத்து சின்ன சைஸ் திமிங்கிலம் போல காட்சியளித்தன. ஒரு விஷயம் தெளிவாகத் தெரிந்தது. ரிசார்டில் அன்றைய தினம் அதிகம் பேர் தங்கியிருக்கவில்லை. ஏனெனில், இந்நேரம் அப்படியிருந்தால், பெருங்கூட்டம் கூடியிருக்கும். விஷயம் வெகு சீக்கிரம் வெளியில் பரவியிருக்கும். விசாரணையை மேற்கொள்வது சற்று கடினமாயிருக்கும். அங்கே அந்த‌ சின்ன‌ பால‌த்தில் ஒரு பெண்ணின் உட‌ல் கிட‌ந்த‌து. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்த‌ரை அடி உய‌ர‌ம் இருக்க‌லாம். அந்தச் சின்ன பாலத்தில் ஏனோதானோவென்று விழுந்து கிடந்திருந்தாள். தலை பக்கவாட்டில் சரிந்து கிடந்தது. வெள்ளை நிற‌த்தில் ஒரு டாப்ஸும், நீல‌ நிற‌த்தில் பெல் பாட்ட‌ம் பாண்டும், ஒயிலாய் ந‌ட‌க்க‌ ஏதுவாய் ஒரு ஹை ஹீல்ஸ் செருப்பும் அணிந்திருந்த‌போதிலும் கால்கள் சற்றே அகலமாய் விலகிக் கிடந்தது கொஞ்சம் ஆபாசமாய் இருந்தது ஏனோ, அந்த நொடியில், ஆபாசம் பார்ப்பவர் பார்வையை பொருத்த விஷயமென்று தோன்றச்செய்தது. அவ‌ள‌து வ‌ல‌துபுற‌த்து வ‌யிற்றுப்ப‌குதியில் ர‌த்த‌ம் க‌சிந்து அந்த‌ பால‌த்திலும் வ‌ழிந்து காய்ந்து ப‌ர‌விக்கிட‌ந்த‌து. பக்கத்திலேயே அவளின் வெள்ளை நிற தோல் பை கிடந்தது. அதன் எல்லா ஜிப்களும் மூடியிருக்க, பக்கவாட்டில் இருந்த சின்ன ஜிப் மட்டும் திறந்தே இருந்தது. லட்டியால் அதை மெதுவாக நெம்ப, உள்ளிருந்து ஒரு விசிட்டிங் கார்டு எட்டிப்பார்த்தது. அதன் இடது ஓரத்தில் கல்பனா என்று ஆங்கிலத்தில் இருக்க, அதை எடுத்து ஒரு முறை பார்த்துவிட்டு சட்டைப் பையில் போட்டுக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச தூரத்தில் ஒல்லியாய் உயரமாய் (ஆறடி இருக்கலாம்), மாநிறத்துக்கும் சற்றே அதிகமான சிவப்பில், சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் கட்டம் போட்ட சட்டையும், டெனிம் ப்ளூவில் ஜீன்சும், வெள்ளை நிறத்தில் ஒரு ஷூவும் அணிந்திருந்த ஒருவன் ஒரு தென்னை மரத்தடியில் நாற்காலி ஒன்று போடப்பட்டு உட்கார்ந்திருக்க, அவனருகே இருவர் காவலுக்கு நிற்கும் தோரணையில் நின்றிருந்தனர். பிரதீபன் தொடர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'சார், அந்தப் பொண்ணு அதோ கிடக்கு சார். அதோ அங்க அந்த தென்னைமரத்துக்கு பக்கத்துல உக்காந்திருக்கானே, அவனோடதான் சார் வந்தா. அவங்க வந்தப்போவே எனக்கு க்றுக்னு பட்டுச்சு சார். ஏதோ நடக்கபோகுதுன்னு. ஆனா, இவன் கொலைபண்ணுவான்னு நினைக்கவே இல்ல சார். கொலை பண்ணதையும் பண்ணிட்டு இல்லங்கறான் சார் அவன். நீங்களே கேளுங்க சார்' எழுதிவைத்த டயலாக்கை மூச்சுவிடாமல் சொல்வதுபோல் சொல்லிவிட்டு அமைதியானார் பிரதீபன்.  &lt;br /&gt;&lt;br /&gt;'அவந்தான் கொலை பண்ணினான்னு நீங்க எப்படி சொல்றீங்க. பாத்தீங்களா?'.&lt;br /&gt;&lt;br /&gt;'இ.. இல்லசார். அவனாதான் சார் இருக்கும் சார். அவனோடதான் சார் வந்தா. ரெண்டு பேரும் சேர்ந்துதான் சார் சாப்பிட்டாங்க. அடிச்சிக்கிட்டு, கிள்ளிக்கிட்டு ஒரே கும்மாளம் தான் சார். அப்புறம் நான் கவனிக்கல சார். திடீர்னு பாத்தா அவ செத்துக்கிடக்கிறா. ஒரு ஊகம் தான் சார். சாரி சார்' கிட்டதட்ட அவர் பிதற்றுவதாகவே தோன்றியது நல்லசிவத்துக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லசிவம் கையசைத்து பிரதீபனை சற்று தொலைவிலேயே நிற்க வைத்துவிட்டு, மெதுவாக அந்த பெண்ணின் பிரேதம் கிடந்த இடத்தை நெருங்கினார். இரண்டு நிமிடங்கள் அங்கே நின்று அந்தப் பெண்ணை தீர்க்கமாய்ப் பார்த்தார். &lt;br /&gt;அவள் முகம் வலியைத் துய்த்துவிட்டு கிடந்தது போலிருந்தது. மல்லாந்து கிடந்திருந்தாள். அவளது வலதுபக்க வயிற்றுப்பகுதியில் கத்தியால் குத்தப்பட்டது போலிருந்தது. வெள்ளை டாப்ஸில் அவளின் இரத்தக்கறை அடர்த்தியாக இருந்தது. ரத்த சேதம் அதிகமாயிருப்பதைப் பார்க்கையில் கத்தி மிக ஆழமாக பாய்ந்திருக்குமென்று அவரால் யூகிக்க முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்துவிட்டு நல்லசிவம் திரும்பி அவனை நோக்கி நடந்தார். இவர் தன்னை நோக்கி வருவதை கவனித்துவிட்டு தென்னைமரத்தடியில் அமர்ந்திருந்தவன் எழுந்துகொண்டான். நல்லசிவம் அவனருகே சென்று நின்றுவிட்டு தன் இரண்டு கைகளையும் பின்னே கட்டிக்கொண்டு விரைப்பாய் நின்றுகொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;'உன் பேரென்ன?'.&lt;br /&gt;&lt;br /&gt;'ரமேஷ் சார்'. பயந்த தோரணையில் அவன் பதிலளித்தான். கொஞ்சம் விட்டாலும் அழுதுவிடுவான் போலிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;கையிலிருந்த லட்டியை விரல்களால் சுழற்றியபடி பின்னே கட்டிய கைகளை நல்லசிவம் விடுவிக்க லட்டி தவறி அவருக்கும், ராமேஷுக்கும் இடையில் நடுநாயக்கமாய் விழுந்தது. அந்தப் பையன் உடனே குனிந்து தன் வலது கையை நீட்டி எடுத்து பணிவாய் அவரிடம் நீட்டினான். அந்த லட்டியை அவனிடமிருந்து வாங்கிக்கொண்டார் நல்லசிவம். அவன் அப்படிச் செய்தது, பதட்டத்திலும் அவன் சற்று நிதானத்தில் இருப்பதாக அவருக்குத் தோன்றச்செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'இந்தப் பொண்ணு உனக்கு என்ன வேணும்? உன் லவ்வரா?'.&lt;br /&gt;&lt;br /&gt;'அய்யோ இல்ல சார். நாங்க ஃப்ரண்ட்ஸ் சார். ஒரு ட்ரீட்க்காக வந்தோம் சார்'.&lt;br /&gt;&lt;br /&gt;'வேலை பாக்கறியா?'.&lt;br /&gt;&lt;br /&gt;'ஆமா சார், நவாடெல்னு ஒரு சாஃப்ட்வேர் கம்பெனில சார். அவளும் அங்கதான் சார் வேலை பாக்குறா. நாங்க கல்லீக்ஸ் சார். நான் எதுவுமே பண்ணல சார். ரெஸ்ட்ரூம் போய்ட்டு திரும்பி வந்தா இப்படி கிடக்குறா சார். யார் பண்ணாங்கன்னு தெரியல சார். ஹோட்டல்காரங்கலாம் என் மேல பழிபோடுறாங்க சார்' என்றுவிட்டு அழத்தொடங்கினான் அவன். &lt;br /&gt;&lt;br /&gt;'ஹ்ம்ம்...' என்றப‌டி ந‌ல்ல‌சிவ‌ம் திரும்பி ந‌ட‌க்க‌, 'அய்யோ, ச‌த்தியமா சார், நான் ஒண்ணும் ப‌ண்ண‌ல‌ சார்' என்று அவ‌ன் மேலும் விம்முவ‌தை இப்போது அவருக்குப் பின்னால் தெள்ளத்தெளிவாய்க் கேட்க‌ முடிந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;'சார், மாணிக்கம் சார்' என்றபடி நல்லசிவம் அருகில் வந்து விரைப்பாய் சல்யூட் அடித்து நின்றார் கான்ஸ்டெபிள் மாணிக்கம். &lt;br /&gt;&lt;br /&gt;'மாணிக்கம், ஃபோட்டே செஷன் முடிஞ்சிடுச்சில‌? ஃபாரென்ஸிக் எப்படி போகுது? போஸ்ட்மார்ட்டம்க்கு சொல்லியாச்சா?'.&lt;br /&gt;&lt;br /&gt;'சார், ஃபோட்டோலாம் முடிஞ்சது சார். ஜி.ஹெச் லேர்ந்து நம்ம தீந்தயால் தான் சார்'.&lt;br /&gt;&lt;br /&gt;'ஹ்ம்ம் ...' என்றுவிட்டு சட்டைப்பையிலிருந்து பத்திரப்படுத்திய விசிட்டிங்கார்டை உருவி அவரிடம் தந்துவிட்டு, அவரின் காதில் கிசுகிசுப்பாய் ரமேஷ் காதில் கேட்காத வகைக்கு ஏதோ சொல்ல, கேட்டுவிட்டு, 'சரி சார்' என்றுவிட்டு நகர்ந்தார் மாணிக்கம். &lt;br /&gt;&lt;br /&gt;'சார்'. பவ்யமாய்க் கூப்பிட்டபடி நல்லசிவத்தை அனுகினார் பிரதீபன். பிரதீபனின் முகபாவனை ஏதோ ரகசியம் சொல்ல எத்தனிப்பதான தோரணையில் இருப்பதை உணர்ந்து, தான் ரமேஷ் அருகில் நிற்பதை அப்போதைக்கு தவிர்க்க முனைந்தவராய், பிரதீபனுடன் அங்கிருந்து விலகி நடந்தபடியே&lt;br /&gt;&lt;br /&gt;'ஹ்ம்ம் சொல்லுங்க'. என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;'சார், கண்டிப்பா அந்தப் பையன் தான் சார் செஞ்சிருப்பான். வரும்போதே குஷாலா தான் சார் வந்தாங்க. ஒருத்தரை ஒருத்தர் ஒரசிண்டு, பாக்கவே கொஞ்சம் அப்படி இப்படின்னு தான் சார் வந்தாங்க. அவனாதான் சார் இருக்கும். சார், அந்த பையன ஸ்டேஷன்ல வச்சி விசாரிச்சீங்கன்னா....'&lt;br /&gt;&lt;br /&gt;'மிஸ்டர் பிரதீபன்' சற்றே வெடுக்காய் இடைமறித்தார் நல்லசிவம்.&lt;br /&gt;&lt;br /&gt;'நீங்க எப்படி இவ்ளோ ஷ்யூரா சொல்றீங்க. கண்ணால பாத்தீங்களா?'.&lt;br /&gt;&lt;br /&gt;'இ .. இல்ல சார், ஒரு யூகம்தான். அதுவும் இல்லாம, நேரமாச்சின்னா பிரஸ் அதுஇதுன்னு வந்துடும். அப்பறம் ரிசார்ட் பேரு கெட்டுப்போச்சின்னா எங்க பொழைப்பு நாறிடும் சார். அதனாலதான் சா..'.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லசிவம் அவசரமாக இடைமறித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;'கேஸ்னு வந்துட்டா இதையெல்லாம் ஃபேஸ் பண்ணிதான் ஆகணும். கோஆப்ரேட் பண்ணுங்க. முதல்ல போய், போன ரெண்டு நாள்லேர்ந்து இப்போவரை யாரெல்லாம் ரிசார்க்குள்ள வந்தாங்க, யார் மூலமா வந்தாங்க, மெம்பர்ஷிப் இன்ஃபர்மேஷன், கான்டாக்ட் டீடெய்ல்ஸ், எப்போ வகேட் பண்ணி போனாங்கங்கற லிஸ்ட் ப்ரிபார் பண்ணி கொண்டுவாங்க.'.&lt;br /&gt;&lt;br /&gt;'சரி சார். சாரி சார்'. தன்னுடைய வேண்டுகோள் செல்லாது போனதிலும் சற்றே பணிந்து போக வேண்டி வந்ததிலும் அவருடைய ஏமாற்றம் எதிர்பார்த்த ஒன்றுதான் என்பதாக இருந்தது அவர் அவசரமாக அமோதித்து மன்னிப்பு கேட்டதில். அதே வேகத்தில் திரும்பி ரிசப்ஷன் நோக்கி நடந்தார் பிரதீபன்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;நல்லசிவம் கையிலிருந்த லட்டியை ஒரு கையால் (வலது கை) சுழற்றியபடி சிறிது நேரம் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தார். உச்சி வெய்யில் தென்னை மரக்கீற்றுகளினூடே வடிகட்டி இறங்கிக்கொண்டிருந்ததில் அத்தனை உஷ்னமாக இல்லை. ரிசார்ட் கதவுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக‌ மூடப்பட்டிருந்தன. வெளிகேட்டை மறைத்தபடி வரிசையாக காட்சிக்கு வைக்கப்படும் சிறிய ரக தென்னங்கன்றுகளை வைத்து வெளியிலிருந்து பார்த்தால் உள்ளே நடப்பது அத்தனை தெளிவாகத் தெரியாத படிக்கு மறைத்திருந்தனர். இது அந்த பிரதீபனின் வேலையாகத்தான் இருக்குமென்று நினைத்துக்கொண்டார். தொழில் சுத்தத்தையும், வேலை சுத்தத்தையும், சரியான நேரத்தில் காட்டுகிறார்கள். தனியார் அல்லவா. ரிசார்ட் பெயர் கெட்டுப்போகாமல் இருக்க எத்தனை வேலைகள் செய்கிறார்கள்?. இவர்களே அரசு வேலைக்கு என்று வந்துவிட்டால் இந்த வேகத்தில் சிந்திப்பார்களா? நடந்துகொள்வார்களா? என்றும் தோன்றியது அவருக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'என்ன சிவம், கேஸ் எப்படி போகுது?'.&lt;br /&gt;&lt;br /&gt;சத்தம் கேட்டு திரும்பினார் நல்லசிவம். பக்கவாட்டிலிருந்து வெளிப்பட்டார் துரைவேலன். உதவி கமிஷனர். &lt;br /&gt;&lt;br /&gt;'சார், நீங்க என்ன சார் இங்க, ஒரு ஃபோன் பண்ணியிருக்கலாமே. ஸ்டேடஸ் அப்டேட் பண்ணிருப்பேனே சார்'.&lt;br /&gt;&lt;br /&gt;'அட இருக்கட்டும். மினிஸ்டர் ப்ரஷர். அதான் நானே வந்தேன். சொல்லுங்க. கொலையாளிய கண்டுபிடிச்சிட்டீங்களா? அந்தப் பையன் தானா?'. &lt;br /&gt;&lt;br /&gt;அவர் கேட்ட தோரணையில், அவர் தனக்கு முன்பே பிரதீபனை சந்தித்துவிட்டு வந்திருப்பாரோ என்று தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;'தெரியல சார். ஐ ஆம் ஜஸ் கம்போஸிங் சார்'.&lt;br /&gt;&lt;br /&gt;'ஓகே டேக் யுவர் டைம் பட் ஈவ்னிங் வரை தான் டைம் நமக்கு இங்க இன்வெஸ்டிகேஷன் கன்டின்யூ பண்ண. மினிஸ்டர் ப்ரஷர். என்ன வேணா பண்ணுங்க. ஆனா இங்க பண்ணாதீங்கன்னு. சோ, ஒரு விஷயம் தெளிவாகுது. இதுல மினிஸ்டர் சம்பந்தப்படல.அவ்ளோதான்.'.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லிவிட்டு சிரித்தார் துரைவேலன். பதிலுக்கோர் சிரிப்பால் அவரை ஆமோதித்தார் நல்லசிவம்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஆமா, சார். தட்ஸ் ஸ்ட்ரேய்ட் சார்'.&lt;br /&gt;&lt;br /&gt;'ஓகே சிவம். கன்டின்யூ. யார்னு தெரிஞ்சதும் உடனே எனக்கு கால் பண்ணுங்க சரியா?' சொல்லிவிட்டு ந‌ல்ல‌சிவ‌த்தை ஏறிட்டார் துரைவேல‌ன்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஓகே சார்'. அமோதித்துவிட்டு அமைதியாய் சிரித்தார் ந‌ல்ல‌சிவ‌ம். அவ‌ரின் புன்ன‌கையை பார்த்துவிட்டு திரும்பி ந‌ட‌ந்தார் துரைவேல‌ன். கேஸில் ந‌ல்ல‌சிவ‌ம் ஒரு ந‌ல்ல‌ க்ரிப்பில் இருப்ப‌தாக‌த் தோன்றிய‌து அவ‌ருக்கும். அவர் இதைத்தெரிந்து கொள்ளத்தான் இத்தனை தூரம் நேரில் வந்திருந்தார் என்பது நல்லசிவத்துக்குத் தெரியும். இந்தப் புன்னகையைத்தான் துரைவேலன் எதிர்பார்க்கிறார் என்பது நல்லசிவத்துக்கும் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்து போய்க்கொண்டிருந்த துரைவேலனுக்கு மரியாதையாய் கையை முகத்துக்கு நேராய் தூக்கி வணக்கம்சொல்ல, அதை கவனிக்காமல் போன துரைவேலனை சுருங்கிய நெற்றியுடன் பார்த்துக்கொண்டே நல்லசிவத்திடம் வந்தார் பிரதீபன். அவர் கையில் சில காகிதங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'சார்'.&lt;br /&gt;&lt;br /&gt;'சொல்லுங்க பிரதீபன், லிஸ்ட் ரெடியா?'.&lt;br /&gt;&lt;br /&gt;'எஸ் சார், தோ'. என்றபடி நீட்ட பெற்றுக்கொண்டு 'நீங்க போலாம். தேவைப்பட்டா கூப்பிடறேன்' என்றபடியே அவர் தந்த காகிதங்களில் ஆழ்ந்தார் நல்லசிவம்.&lt;br /&gt;&lt;br /&gt;'சரி சார்' என்ற பிரதீபனோ இவரிடமும் இருந்த அலட்சியத்தை துரைவேலனிடமிருந்ததோடு ஒப்பிட்டுவிட்டு என்ன தப்பு செய்தோம், ஏனிப்படி என்று நினைத்தபடியே ஒரு வித ஆயாசத்துடன் திரும்பி நடந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;நல்லசிவம் லிஸ்டைப் பார்க்கத்துவங்கிய கொஞ்ச நேரத்திலேயே, மாணிக்கம் கையில் திறந்திருந்த ஒரு லாப்டாப்புடன் நல்லசிவத்தின் அருகில் வந்து நின்று நல்லசிவத்தின் காதுகளில் சில விவரங்களைப் பனித்தார். அவற்றை லாப்டாப்பில் சரிபார்த்துக்கொண்டே வெகு நேரம் அந்த லிஸ்டையே பார்த்துவிட்டு, ஒரு முடிவுக்கு வந்தவராய் ஒரு நீண்ட பெருமூச்சுடன் திரும்பி சற்று தொலைவில் அந்த சொகுசு அறைகள் இருந்த திசையில் நடந்தார் நல்லசிவம். லாப்டாப்பை மூடி கக்கத்தில் சொருகிக்கொண்டே மாணிக்கம் தொடர‌ போகும்வழியில் இன்னும் சில போலீஸ்காரர்களையும் கையசைத்து வரவழைத்துக்கொண்டார் நல்லசிவம். நேராக, ரிசார்டின் வெளிகேட்ட‌ருகே இருந்த முதல்தள சொகுசு அறை நோக்கி நடந்து, மாடி ஏறி, கதவருகே நின்று கதவைத் தட்டினார். க‌த‌வைத்திற‌க்க‌ ச‌ற்று நேர‌மாவ‌தை அவ‌தானித்த‌ப‌டியே அவ‌ர் அங்கு நிற்கையில் க‌த‌வு மெதுவாக‌த் திற‌ந்த‌து. உள்ளிருந்து மாநிற‌த்தில் ஆற‌டி உய‌ர‌த்தில் தொந்தியுட‌ன் ஒருவ‌ர் வெளிப்ப‌ட்டு&lt;br /&gt;&lt;br /&gt;'எஸ்,.... சொல்லுங்க‌‌‌' என்றுவிட்டு க‌த‌வை முழுக்க‌த்திற‌ந்துவிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;'ஹலோ சார், ஐ ஆம் சிவம், இன்சார்ஜ் ஆஃப் திஸ் மர்டர் கேஸ். சாரி, உங்க‌ ஹாலிடேல‌ தொந்த‌ர‌வு ப‌ண்ற‌துக்கு' உள்ளே செல்லாமல் நின்ற இடத்தில் நின்றபடியே சொல்லிவிட்டு சிரித்தார் ந‌ல்ல‌சிவ‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;'அத‌னால‌ என்ன‌ ப‌ர‌வால்ல‌ சார், சொல்லுங்க‌'. என்ற‌ ச‌ங்க‌ரின் முக‌ம் ச‌ற்று அசூயையுட‌ன் இருப்ப‌தாக‌த் தோன்றிய‌து.&lt;br /&gt;&lt;br /&gt;'சங்கர்ங்கறது நீங்கதானே?'&lt;br /&gt;&lt;br /&gt;'ஆமா சார்'.&lt;br /&gt;&lt;br /&gt;'ச‌ங்க‌ர், நீங்க‌ கொஞ்ச‌ம் ஸ்டேஷ‌னுக்கு வ‌ர‌முடியுமா?'.&lt;br /&gt;&lt;br /&gt;'ஸ்டேஷ‌னுக்கா? நானா? ஏன் சார்'.&lt;br /&gt;&lt;br /&gt;'இங்க‌ ஒரு கொலை ந‌ட‌ந்திருக்கு. என‌க்கு உங்க‌ மேல‌ சந்தேக‌மா இருக்கு. அத‌னால‌'.&lt;br /&gt;&lt;br /&gt;'என்ன!! சார், எது பேசறதா இருந்தாலும் யோசிச்சுப்பேசுங்க'.&lt;br /&gt;&lt;br /&gt;'கரெக்ட், யோசிச்சுப் பார்த்தா நீங்கதான் கொலையாளின்னு தோண்றது'.&lt;br /&gt;&lt;br /&gt;'வாட், என்ன சார், விளையாடுறீங்களா?'.&lt;br /&gt;&lt;br /&gt;'யாரு நானா? இல்ல நீங்களா?'.&lt;br /&gt; &lt;br /&gt;'நீங்கதான். எதை வச்சு சார் என்ன கொலைகாரன்னு சொல்றீங்க?'.&lt;br /&gt;&lt;br /&gt;'உங்க கைய வச்சித்தான்'&lt;br /&gt;&lt;br /&gt;'என்ன!!.. கையா? என்ன சொல்றீங்க?'.&lt;br /&gt;&lt;br /&gt;'ஆமா, உங்க கைதான் உங்கள காட்டிக்கொடுத்துடிச்சி'.&lt;br /&gt;&lt;br /&gt;'என்ன உளருரீங்க நீங்க. எப்படி சார். அந்தப் பொண்ண எனக்கு சுத்தமா தெரியாது. அப்புறம் எப்படி அவ்ளோ ஷ்யூரா சொல்றீங்க நாந்தான் கொலை பண்ணினேன்னு'.&lt;br /&gt;&lt;br /&gt;'ஹ்ம்ம் குட் கொஸ்டின். அந்தப் பொண்ணு வயித்துல கத்தியால குத்தப்பட்டு செத்திருக்கா. அதுவும் வலது பக்கத்துல. ஒரு வலதுகைப்பழக்கத்துக்காரனால குத்தினா, அவளுக்கு இடது பக்கமாதான் குத்த முடியும். அதுவும் இல்லன்னா நடுவுல குத்தலாம். வலது பக்கமா குத்தனும்னா குத்தினவன் இடதுகை பழக்கக்காரனாதான் இருக்கணும். இந்த ரிசார்ட்ல இன்னிக்கு யாருமே அப்படி இல்ல உங்களத்தவிர. யு ஆர் த ஒன்லி லெஃப்ட் ஹான்டர்.'&lt;br /&gt;&lt;br /&gt;'சோ!!.. சோ வாட் இஃப் ஆம் எ லெஃப்ட் ஹான்டர்?.. நாந்தான் கொன்னிருக்கணுமா? அந்தப் பொண்ண  எனக்கு தெரியவே தெரியாது. நான் எதுக்கு கொல்லணும்?'.&lt;br /&gt;&lt;br /&gt;'குட். ரெண்டாவது ரீஸன். அந்தப் பொண்ண உங்களுக்குத் தெரியும். ஆனா, இப்ப தெரியாதது மாதிரி நடிக்கிறீங்க. கொலை நீங்க பண்ணலன்னா ஏன் நடிக்கனும்? பொய் சொல்லனும்?'.&lt;br /&gt;&lt;br /&gt;'வாட் டு யூ மீன்?'.&lt;br /&gt;&lt;br /&gt;'ஐ மீன், உங்களுக்கு அந்தப் பொண்ண ஏற்கனவே தெரியும். ஒரு வருஷம் முன்னாடி பாக்பேன்னு ஒரு கம்பெனில நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா வொர்க் பண்ணிருக்கீங்க. கம்பெனி மூலமா கிடைச்ச கார்போரெட் ஆஃபர்ல தான் இந்த ரிசார்ட்ல கோல்டன் மெம்பர் ஆகியிருக்கீங்கன்னு இந்த ரிசார்ட்ல பதிவாகியிருக்கு. உங்க கம்பனி பேர்ல மெயில் ஐடி யூஸ் பண்ணி அந்தப் பொண்ணு கூகிள் க்ரூப் தொடங்கியிருக்காங்க. அதுல நீங்க மெம்பர் ஆயிருக்கீங்க. போன‌ மாசம் , அந்த கம்பெனிய விட்டு உங்கள வெளியேத்தியிருக்காங்க. அதுக்குக் காரணம் அவுங்க உங்க மேல கொடுத்த செக்ஸுவல் ஹராஸ்மென்ட் கம்ப்ளெய்ன்ட்ன்னு அந்த க்ரூப்ல அப்டேட் பண்ணிருக்காங்க. அது பிற்பாடு டிலிட் பண்ணப்பட்டிருக்கு. ஆனா, கூகிளோட இன்டெக்ஸ்ல அது அப்டேட் ஆகல. சோ இப்பவும் சர்ச் ரிசல்ட்ஸ்ல அது வருது. இது போதாதா? அந்தப் பொண்ண பழிவாங்க நினைச்சிருக்கீங்க.  அவுங்க நீங்க தங்கியிருக்கிற ரிசார்ட்லயே ட்ரீட்க்கு வந்தது உங்களுக்கு தோதா போயிடிச்சி. அந்தப் பையன் ரெஸ்ட்ரூம் போய்ட்டு வர பத்து நிமிஷத்துக்குள்ள ஒருத்தனால கொலைப் பண்ண முடியும்னா அது இந்த ரிசார்ட்டுகுள்ள இருக்குற ஒருத்தனாலதான் முடியும். கொலையாளி ஒரு லெஃப்ட் ஹாண்டர். இந்த ரிசார்ட்ல இன்னிக்கு உங்களைத் தவிர வேற லெஃப்ட் ஹான்டர்ஸ் இல்ல. கொலைப்பழி யார் மேலயாச்சும் விழட்டும்னு நீங்க கொலை பண்ணிருக்கீங்க. ஆனா, நீங்க கொலைப்பண்ணும்போது அந்தப் பையன் ரமேஷ் ஒரு வலது கை பழக்கக்காரன்ங்கறத கவனிக்காம விட்டுட்டீங்க‌.' என்றுவிட்டு மாணிக்கத்திடம் திரும்பினார் நல்லசிவம். அதிர்ச்சியாய் சங்கர் நல்லசிவத்தையே பார்த்தபடி நின்றிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;'மாணிக்கம், இவரை அரெஸ்ட் பண்ணி ஜீப்ல ஏத்துங்க. அப்டியே இந்த ரூமை தரோவா செக் பண்ணுங்க. கொலைக்கு பயன்படுத்தின கத்திய இவரு வேற எங்கேயும் தூக்கி போடலன்னா அது இங்க தான் இருக்கணும். இங்க இல்லன்னா இவரு எங்கயாச்சும் தூக்கிப் போட்டிருக்கலாம். அத லாக்கப்ல வச்சி விசாரிச்சா தெரிஞ்சிடும். கோ அஹெட்' என்றார் நல்லசிவம்.&lt;br /&gt;&lt;br /&gt;'நோ, திஸ் இஸ் அப்சர்டு. யு கான்ட் டூ திஸ். என் வக்கீல கேட்டுத்தான் நான் பேசுவேன். லீவ் மீ....' என்றவாறே திமிறிய சங்கரை சில காக்கிச்சட்டைகள் வலுக்கட்டாயமாக போலீஸ் ஜீப்பை நோக்கி தள்ளிக்கொண்டு போக, பாண்ட் பாக்கேட்டில் கைவிட்டு செல் ஃபோனை எடுத்து துரைவேலனுக்கு லைன் போட்டார் நல்லசிவம்.&lt;br /&gt;&lt;br /&gt;முற்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;- ராம்ப்ரசாத் சென்னை(ramprasath.ram@googlemail.com)&lt;br /&gt;&lt;br /&gt;#ந‌ன்றி&lt;br /&gt;காற்றுவெளி இல‌க்கிய‌ இத‌ழ் (மே 2011)&lt;br /&gt;திண்ணை இணைய‌ இத‌ழ்(http://www.thinnai.com/?module=displaystory&amp;story_id=11105085&amp;format=html)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-6077414448576366559?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/6077414448576366559/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/05/blog-post_5344.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/6077414448576366559'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/6077414448576366559'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/05/blog-post_5344.html' title='கொலையாளி யார் - துப்பறியும் சிறுகதை'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-zUd6KRfCROs/TcdINTs5w8I/AAAAAAAAApA/9vt7C7yUixI/s72-c/kaatruveli_may_2011.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-530955792924292320</id><published>2011-05-08T18:48:00.000-07:00</published><updated>2011-05-08T18:48:51.540-07:00</updated><title type='text'>அறை இருள்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-N6jiv9XXoJY/TcdHl-tMr6I/AAAAAAAAAo4/ZBEwKFcm8v4/s1600/dark-room.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="240" width="320" src="http://1.bp.blogspot.com/-N6jiv9XXoJY/TcdHl-tMr6I/AAAAAAAAAo4/ZBEwKFcm8v4/s400/dark-room.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;i&gt;அறை இருள்&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெளிச்சங்களை விரட்டிவிட்டு &lt;br /&gt;இருள் ஆக்ரோஷமாய் &lt;br /&gt;மூலை முடுக்கெல்லாம் &lt;br /&gt;எதையோ தேடிக்கொண்டிருந்தது... &lt;br /&gt;&lt;br /&gt;அது தேடிக்கொண்டிருந்தது &lt;br /&gt;என் மெளனத்தைத்தானென்று &lt;br /&gt;அறியாமல் இருளையே &lt;br /&gt;வெறித்திருந்தேன் நான்... &lt;br /&gt;&lt;br /&gt;- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)&lt;br /&gt;&lt;br /&gt;#நன்றி&lt;br /&gt;திண்ணை இணைய இதழ்(http://www.thinnai.com/?module=displaystory&amp;story_id=311050816&amp;format=html)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-530955792924292320?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/530955792924292320/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/05/blog-post_08.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/530955792924292320'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/530955792924292320'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/05/blog-post_08.html' title='அறை இருள்'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-N6jiv9XXoJY/TcdHl-tMr6I/AAAAAAAAAo4/ZBEwKFcm8v4/s72-c/dark-room.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-8790193957460603776</id><published>2011-05-07T23:40:00.000-07:00</published><updated>2011-05-07T23:40:46.625-07:00</updated><title type='text'>கோப்பைக்காரன்</title><content type='html'>&lt;b&gt;&lt;i&gt;கோப்பைக்காரன் &lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வயிறு முட்ட தேனீர் அருந்திவிட்டு&lt;br /&gt;நீராவி ஏப்பங்களை பிரசவித்தான்&lt;br /&gt;வட்ட வாய்க் கோப்பைக்காரன்...&lt;br /&gt;&lt;br /&gt;ஏப்பங்கள் தீர்ந்துவிட்டபின்&lt;br /&gt;ஆடையொன்றை போர்வையாக்கி&lt;br /&gt;உண்ட மயக்கத்தில் &lt;br /&gt;மயங்கிக்கிடக்கிறான் அவ‌ன்...&lt;br /&gt;&lt;br /&gt;- ராம்ப்ரசாத் சென்னை ( ramprasath.ram@googlemail.com )&lt;br /&gt;&lt;br /&gt;#நன்றி&lt;br /&gt;கீற்று இலக்கிய இதழ்(http://www.keetru.com/index.php?option=com_content&amp;view=article&amp;id=14460:2011-05-07-07-07-17&amp;catid=2:poems&amp;Itemid=265)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-8790193957460603776?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/8790193957460603776/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/05/blog-post_07.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/8790193957460603776'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/8790193957460603776'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/05/blog-post_07.html' title='கோப்பைக்காரன்'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-1795225656616129448</id><published>2011-05-06T07:16:00.001-07:00</published><updated>2011-05-06T07:16:36.058-07:00</updated><title type='text'>நிலாச்சோறு</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-fl6jOn2iKbo/TcQBl2-zJxI/AAAAAAAAAoo/wbGnqTxA5uk/s1600/wolf_moon.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="250" width="308" src="http://1.bp.blogspot.com/-fl6jOn2iKbo/TcQBl2-zJxI/AAAAAAAAAoo/wbGnqTxA5uk/s400/wolf_moon.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;நிலாச்சோறு &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பால்க‌னியில் பூத்திருந்த‌&lt;br /&gt;பால் நிலா பொட்டு வைத்த‌&lt;br /&gt;இரவுத்தாரகையைக் காட்டிக்காட்டி&lt;br /&gt;குழந்தைக்கு சோறூட்டுகிறாள் தாய்...&lt;br /&gt;&lt;br /&gt;செங்கல் காட்டுப்பாதைகளில்&lt;br /&gt;தவறவிட்ட தாயைத்தேடும்&lt;br /&gt;நாய்க்குட்டிகளின் பசிக்காய்&lt;br /&gt;பாதிக்கவளம் நிலாச்சோற்றை&lt;br /&gt;தவறவிடுகிறாள் மழலைத்தேவதை... &lt;br /&gt;&lt;br /&gt; - ராம்ப்ரசாத் சென்னை ( ramprasath.ram@googlemail.com )&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-1795225656616129448?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/1795225656616129448/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/05/blog-post_06.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/1795225656616129448'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/1795225656616129448'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/05/blog-post_06.html' title='நிலாச்சோறு'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-fl6jOn2iKbo/TcQBl2-zJxI/AAAAAAAAAoo/wbGnqTxA5uk/s72-c/wolf_moon.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-935578206322832215</id><published>2011-05-05T07:37:00.000-07:00</published><updated>2011-05-05T07:37:08.214-07:00</updated><title type='text'>சாபம்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-N3HEbAxZy4s/TcK1pXJCsBI/AAAAAAAAAoY/Mlw-ebc7R00/s1600/fish-tank.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="343" width="371" src="http://4.bp.blogspot.com/-N3HEbAxZy4s/TcK1pXJCsBI/AAAAAAAAAoY/Mlw-ebc7R00/s400/fish-tank.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;i&gt;சாபம் &lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தனக்கான சமூகம்&lt;br /&gt;ஏதுமின்றி தன்னந்தனியாய்&lt;br /&gt;உலாவருகிறது தண்ணீர் தொட்டியில்&lt;br /&gt;அந்தத் தங்க மீன்...&lt;br /&gt;&lt;br /&gt;குட்டிபோட்ட பூனையாய்&lt;br /&gt;குறுக்கும் நெடுக்குமாய் &lt;br /&gt;அவசரமாய் உலவிவிட்டு&lt;br /&gt;தன்னைத் தனிமைப்படுத்தியவனின் மீது&lt;br /&gt;மெளனமாய் முனுமுனுக்கிறது&lt;br /&gt;அதன்போக்கில் ஒரு சாபத்தை...&lt;br /&gt;&lt;br /&gt;- ராம்ப்ரசாத் சென்னை( ramprasath.ram@googlemail.com )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;#நன்றி&lt;br /&gt;கீற்று இலக்கிய இதழ்(http://www.keetru.com/index.php?option=com_content&amp;view=article&amp;id=14433:2011-05-04-04-42-14&amp;catid=2:poems&amp;Itemid=265)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-935578206322832215?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/935578206322832215/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/05/blog-post_05.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/935578206322832215'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/935578206322832215'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/05/blog-post_05.html' title='சாபம்'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-N3HEbAxZy4s/TcK1pXJCsBI/AAAAAAAAAoY/Mlw-ebc7R00/s72-c/fish-tank.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-4735828259067936677</id><published>2011-05-03T07:26:00.000-07:00</published><updated>2011-05-03T07:26:52.824-07:00</updated><title type='text'>வெறுமை இருக்கைக‌ள்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-7m9jcxvB5dY/TcAQNbhCt0I/AAAAAAAAAoI/vmjpfLhsny0/s1600/redcupbeautiful-girl-drinking-it.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="387" width="300" src="http://2.bp.blogspot.com/-7m9jcxvB5dY/TcAQNbhCt0I/AAAAAAAAAoI/vmjpfLhsny0/s400/redcupbeautiful-girl-drinking-it.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;வெறுமை இருக்கைக‌ள்&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன‌க்கும் என‌க்குமான‌&lt;br /&gt;வெட்டிப்பேச்சுக்க‌ள்&lt;br /&gt;திக‌ட்டி விடுகின்ற‌ன‌ போலும்...&lt;br /&gt;&lt;br /&gt;கோப்பைக்குள் தேங்கிக்கிட‌ந்த‌&lt;br /&gt;வெள்ளை தேவ‌தைக‌ள்&lt;br /&gt;வெறுப்ப‌டைந்து க‌ண்காணா தேச‌ம்&lt;br /&gt;போய்விட்டார்க‌ள்...&lt;br /&gt;&lt;br /&gt;தேனீர் இருக்கைக‌ள்&lt;br /&gt;இப்போது வெறுமையாய்...&lt;br /&gt;&lt;br /&gt; - ராம்ப்ரசாத் சென்னை ( ramprasath.ram@googlemail.com )&lt;br /&gt;&lt;br /&gt;#நன்றி&lt;br /&gt;கீற்று இலக்கிய இதழ்(http://www.keetru.com/index.php?option=com_content&amp;view=article&amp;id=14418:2011-05-03-05-38-37&amp;catid=2:poems&amp;Itemid=265)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-4735828259067936677?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/4735828259067936677/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/05/blog-post_03.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/4735828259067936677'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/4735828259067936677'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/05/blog-post_03.html' title='வெறுமை இருக்கைக‌ள்'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-7m9jcxvB5dY/TcAQNbhCt0I/AAAAAAAAAoI/vmjpfLhsny0/s72-c/redcupbeautiful-girl-drinking-it.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-2185259683080422600</id><published>2011-05-02T18:51:00.001-07:00</published><updated>2011-05-02T18:51:55.148-07:00</updated><title type='text'>தேனீர்க்க‌ட‌த்த‌ல்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-dxbZV8l2VV8/Tb9fmv4KAjI/AAAAAAAAAoA/Hk5pYgKBBpk/s1600/spilled-coffee.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="213" width="320" src="http://2.bp.blogspot.com/-dxbZV8l2VV8/Tb9fmv4KAjI/AAAAAAAAAoA/Hk5pYgKBBpk/s400/spilled-coffee.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;i&gt;தேனீர்க்க‌ட‌த்த‌ல்&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வ‌ட்ட‌வாய்க் கோப்பைக்குள்&lt;br /&gt;கூட்டமாய் வசித்த தேனீர்களுள் சில‌&lt;br /&gt;என் கவனமின்மைகளில்&lt;br /&gt;கோப்பைக்கு வெளியே &lt;br /&gt;தொலைந்து விட்டிருந்தன...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொலைந்த‌வைக‌ளை நைச்சிய‌மாய்ப் பேசி&lt;br /&gt;க‌ட‌த்திப்போக‌ கூடின‌ சில‌ ஈக்க‌ள்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; - ராம்ப்ர‌சாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-2185259683080422600?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/2185259683080422600/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/05/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/2185259683080422600'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/2185259683080422600'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/05/blog-post.html' title='தேனீர்க்க‌ட‌த்த‌ல்'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-dxbZV8l2VV8/Tb9fmv4KAjI/AAAAAAAAAoA/Hk5pYgKBBpk/s72-c/spilled-coffee.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-9099574736324228897</id><published>2011-04-26T07:30:00.000-07:00</published><updated>2011-04-26T07:30:41.234-07:00</updated><title type='text'>அரிதாரம் பூசும் காய்கள்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-XUYUxv0SwTI/TbbWm8vkuMI/AAAAAAAAAm4/nkSrde2kFzE/s1600/coloured_fruits.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="249" width="400" src="http://4.bp.blogspot.com/-XUYUxv0SwTI/TbbWm8vkuMI/AAAAAAAAAm4/nkSrde2kFzE/s400/coloured_fruits.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;அரிதாரம் பூசும் காய்கள்&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கனிந்த பழங்களையொத்த‌&lt;br /&gt;வண்ணங்களை அரிதாரித்த காய்கள் &lt;br /&gt;கிளைகளிலிருந்து பறிக்கப்படுகின்றன &lt;br /&gt;முதிர்வதற்கு முன்பே...&lt;br /&gt;&lt;br /&gt;பறிக்கப்பட்ட காய்கள்&lt;br /&gt;கனிவிக்கப்பட்டு பழமாக்கப்படுகின்றன‌&lt;br /&gt;செயற்கையாக...&lt;br /&gt;&lt;br /&gt;கனிந்தபிறகே தேடத்துவங்குகின்றன கனிகள், &lt;br /&gt;க‌னிவிக்க‌ப்ப‌டுகையில் தொலைந்துபோன &lt;br /&gt;சுவைகளையும் வண்ணங்களையும்...&lt;br /&gt;&lt;br /&gt;அரிதாரிக்க‌வேண்டிய‌ &lt;br /&gt;வ‌ண்ண‌ங்க‌ளையும் சுவைக‌ளையும்&lt;br /&gt;காய்க‌ள் ப‌ருவ‌த்தே அறிய‌ட்டும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; - ராம்ப்ர‌சாத், சென்னை ( ramprasath.ram@googlemail.com)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;#நன்றி&lt;br /&gt;கீற்று இலக்கிய இதழ்(http://www.keetru.com/index.php?option=com_content&amp;view=article&amp;id=14296:2011-04-25-14-29-43&amp;catid=2:poems&amp;Itemid=265)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-9099574736324228897?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/9099574736324228897/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/04/blog-post_26.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/9099574736324228897'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/9099574736324228897'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/04/blog-post_26.html' title='அரிதாரம் பூசும் காய்கள்'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-XUYUxv0SwTI/TbbWm8vkuMI/AAAAAAAAAm4/nkSrde2kFzE/s72-c/coloured_fruits.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-2014924195100917791</id><published>2011-04-25T07:38:00.000-07:00</published><updated>2011-04-25T07:38:09.180-07:00</updated><title type='text'>கான‌லின் நீர்த் தூண்டில்க‌ள்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-6zNZO5MHxFM/TbWG_cIv24I/AAAAAAAAAmo/_O7t8rurIH4/s1600/kaanalinniirththuundilkal.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="303" width="400" src="http://4.bp.blogspot.com/-6zNZO5MHxFM/TbWG_cIv24I/AAAAAAAAAmo/_O7t8rurIH4/s400/kaanalinniirththuundilkal.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;கான‌லின் நீர்த் தூண்டில்க‌ள்&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வண்ணங்களின் வசீகரங்களில்&lt;br /&gt;ம‌னம் தொலைக்கின்றன காய்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;நிறங்கள் அழகின் அரிதாரங்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;வண்ணங்களைப் புனைந்த‌தும்&lt;br /&gt;நாடகம் துவங்குகிறது&lt;br /&gt;நாளொருமேனியும்...&lt;br /&gt;&lt;br /&gt;வ‌ண்ண‌ங்க‌ள் பிர‌தான‌மாகும் காட்சிக‌ள்&lt;br /&gt;க‌னிக‌ளை உருவ‌கித்தேவிடுகின்ற‌ன‌...&lt;br /&gt;&lt;br /&gt;காட்சிக‌ள் கான‌ல் நீராகிவிடுகையில் &lt;br /&gt;நீரில் அலையும் மீன்க‌ளைப் &lt;br /&gt;பிடிக்க‌ தூண்டில்க‌ளுட‌ன் வ‌ருப‌வ‌ர்க‌ளை &lt;br /&gt;என்ன‌வென்று சொல்ல‌?...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; - ராம்ப்ர‌சாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;#நன்றி&lt;br /&gt;உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=4242)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-2014924195100917791?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/2014924195100917791/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/04/blog-post_25.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/2014924195100917791'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/2014924195100917791'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/04/blog-post_25.html' title='கான‌லின் நீர்த் தூண்டில்க‌ள்'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-6zNZO5MHxFM/TbWG_cIv24I/AAAAAAAAAmo/_O7t8rurIH4/s72-c/kaanalinniirththuundilkal.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-2807142701037485035</id><published>2011-04-18T19:29:00.000-07:00</published><updated>2011-04-18T19:29:47.742-07:00</updated><title type='text'>வம்சம்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-cj6xVVkFv5U/TazzQbVyo-I/AAAAAAAAAlo/yrroOlsqQ7Y/s1600/servantgirl.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="313" width="400" src="http://2.bp.blogspot.com/-cj6xVVkFv5U/TazzQbVyo-I/AAAAAAAAAlo/yrroOlsqQ7Y/s400/servantgirl.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;வம்சம் &lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அழுக்குத் தாயின் விரல் பிடித்து&lt;br /&gt;வெள்ளந்தியாய் நடந்து வருவாள்&lt;br /&gt;வேலைக்காரி பெற்றெடுத்த‌&lt;br /&gt;அழுக்குப் பாவாடைக்காரி...&lt;br /&gt;&lt;br /&gt;வாசலில் கிடக்கும்&lt;br /&gt;காற்றடைத்த குட்டி விமானம்&lt;br /&gt;சட்டென இளைத்து &lt;br /&gt;அலமாரிக்குள் சுருண்டுகொள்ளும்...&lt;br /&gt;&lt;br /&gt;பால்வெள்ளை இளவம்பஞ்சு மெத்தையில்&lt;br /&gt;இல்லாத கிறுக்கல்கள் அவள் பெயரில்&lt;br /&gt;மொய்யெழுதப்பட்டு தரையமர்த்தப்படுவாள்&lt;br /&gt;அல்லது வாசலுக்கு விரட்டப்படுவாள்...&lt;br /&gt;&lt;br /&gt;பெரியவர்களுக்கு தாயும்,&lt;br /&gt;சிறியவர்களுக்கு மகளுமென‌&lt;br /&gt;அவர்கள் வேலைக்காரிகளின்&lt;br /&gt;வம்சத்தவர்களாவார்கள்...‌&lt;br /&gt;&lt;br /&gt;- ராம்ப்ரசாத் சென்னை ( ramprasath.ram@googlemail.com)&lt;br /&gt;&lt;br /&gt;#நன்றி&lt;br /&gt;கீற்று இலக்கிய இதழ்(http://www.keetru.com/index.php?option=com_content&amp;view=article&amp;id=14165:2011-04-17-02-25-58&amp;catid=2:poems&amp;Itemid=265)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-2807142701037485035?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/2807142701037485035/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/04/blog-post_6206.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/2807142701037485035'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/2807142701037485035'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/04/blog-post_6206.html' title='வம்சம்'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-cj6xVVkFv5U/TazzQbVyo-I/AAAAAAAAAlo/yrroOlsqQ7Y/s72-c/servantgirl.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-8926094464363075617</id><published>2011-04-18T19:22:00.000-07:00</published><updated>2011-04-18T19:23:58.255-07:00</updated><title type='text'>வீடு</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-9j1nwvmAanY/TazxjiMNSdI/AAAAAAAAAlg/-xtjKxEASPg/s1600/beehome.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="296" width="400" src="http://2.bp.blogspot.com/-9j1nwvmAanY/TazxjiMNSdI/AAAAAAAAAlg/-xtjKxEASPg/s400/beehome.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;வீடு&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பசியில் இளைத்த பெருமரத்தின் செவிகளைச் &lt;br /&gt;சுற்றிசுற்றி ரீங்க‌ரித்துக்கொண்டிருக்கிற‌து &lt;br /&gt;தொலைந்து போன‌ த‌ன் வீட்டை &lt;br /&gt;தேட‌த்துவ‌ங்கிய‌ வ‌ண்டொன்று... &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாஸ்து இங்கும் ச‌ரியில்லையோ என்ன‌வோ &lt;br /&gt;ப‌ரிமாற‌ வேண்டிய‌ ஒரு ல‌யிப்பை &lt;br /&gt;அச‌ட்டையாய் வீணாக்கிவிட்டு &lt;br /&gt;அடுத்த‌ ம‌ர‌த்துக்கு தாவ‌ &lt;br /&gt;எத்த‌னிக்கிற‌து தன்னியல்பில்... &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- ராம்ப்ரசாத் சென்னை(ramprasath.ram@googlemail.com)&lt;br /&gt;&lt;br /&gt;#நன்றி&lt;br /&gt;திண்ணை இணைய இதழ்(http://www.thinnai.com/?module=displaystory&amp;story_id=31104174&amp;format=html)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-8926094464363075617?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/8926094464363075617/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/04/blog-post_18.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/8926094464363075617'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/8926094464363075617'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/04/blog-post_18.html' title='வீடு'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-9j1nwvmAanY/TazxjiMNSdI/AAAAAAAAAlg/-xtjKxEASPg/s72-c/beehome.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-1710206002025712500</id><published>2011-04-16T19:40:00.000-07:00</published><updated>2011-04-16T19:40:06.248-07:00</updated><title type='text'>காதல் கள்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-ITu_lU3rN8U/TapS5-ajIII/AAAAAAAAAlQ/0Imo7nbLvMo/s1600/lovers1.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="267" width="400" src="http://3.bp.blogspot.com/-ITu_lU3rN8U/TapS5-ajIII/AAAAAAAAAlQ/0Imo7nbLvMo/s400/lovers1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;காதல் கள்&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உச்சிமுதல் பாதம்வரை பூவைப்போலவே இருப்பதற்கு&lt;br /&gt;பேசாமல் நீ பூவாகவே பிறந்திருக்கலாம்...&lt;br /&gt;&lt;br /&gt;உன்னால் மட்டும் ஏன் புரிந்துகொள்ளமுடிவதில்லை&lt;br /&gt;தேவைகளற்று உன்னுடன் நான் கடத்தும் நொடிகளை...&lt;br /&gt;&lt;br /&gt;நீ ஒதுக்கி விடுகையில் கற்றை முடி கூட‌&lt;br /&gt;பூஞ்சோலை ஆகிவிடுகிறது...&lt;br /&gt;&lt;br /&gt;ஆப்பிள்கள் சுவைதான் என்றாலும்&lt;br /&gt;நீ கடித்த ஆப்பிள்கள் திகட்டுவதே இல்லை... &lt;br /&gt;&lt;br /&gt;நீ நில்லாத‌ பேருந்து நிழ‌ற்குடைக‌ள்&lt;br /&gt;த‌லைகுனிந்து நிற்கின்ற‌ன‌...&lt;br /&gt;நீ நிற்ப‌வைக‌ளோ உன்னைப்பார்த்த‌ வெட்க‌த்தில்&lt;br /&gt;த‌லை சாய்த்துக்கொள்கின்ற‌ன‌...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; - ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-1710206002025712500?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/1710206002025712500/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/04/blog-post_1591.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/1710206002025712500'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/1710206002025712500'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/04/blog-post_1591.html' title='காதல் கள்'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-ITu_lU3rN8U/TapS5-ajIII/AAAAAAAAAlQ/0Imo7nbLvMo/s72-c/lovers1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-8445127412119297697</id><published>2011-04-16T19:30:00.000-07:00</published><updated>2011-04-16T19:30:04.339-07:00</updated><title type='text'>பலூன்</title><content type='html'>&lt;b&gt;&lt;i&gt;பலூன்&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பசிக்கு வயிறுமுட்ட‌&lt;br /&gt;காற்றை விழுங்கிவிட்டு&lt;br /&gt;வயிற்றுவலியில் மேலும் கீழுமாய்&lt;br /&gt;துள்ளுகிறது பலூன்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோமாளியாய் அது துள்ளுவதை&lt;br /&gt;வாயில் சூப்பும் விரலுடன்&lt;br /&gt;குதித்து குதித்து ரசிக்கிறாள்&lt;br /&gt;இரண்டு வயது சிறுமி...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; - ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-8445127412119297697?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/8445127412119297697/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/04/blog-post_16.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/8445127412119297697'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/8445127412119297697'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/04/blog-post_16.html' title='பலூன்'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-8387667136439335772</id><published>2011-04-16T19:23:00.000-07:00</published><updated>2011-04-16T19:23:35.591-07:00</updated><title type='text'>இருத்தல் தொலைத்த தமிழ் - சிறுகதை</title><content type='html'>&lt;b&gt;இச்சிறுகதை, இலங்கையில் ஜனவரி 2011 ல் நடந்த உலகின் முதலாவது தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில் வெளியிடப்பட்ட 'முகங்கள்' என்ற தலைப்பிலான சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது என்பதை எனது வலைப்பூவில் முன்பே தெரிவித்திருந்தேன். அந்தச் சிறுகதை இங்கே:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;இருத்தல் தொலைத்த தமிழ்&lt;/i&gt;&lt;/b&gt;...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரிட்டிஷ் நாடான ஸ்காட்லாண்டில் ஒரு தொலைக்காட்சி சேவை நிறுவனம் அது. மழை என நினைத்து தவ‌றுதலாய்ப் பனியை அள்ளி அள்ளிப் பொழியும் வானத்தை கூரையாய் கொண்ட தேசத்தில், திக்கெட்டும் பரவிக்கிடந்த பனியினூடே நனைந்து கிடந்த சாலையையும், பனியை இழுத்துப்போர்த்திக்கொண்டு தூங்கும் வீடுகளையும் கொண்டது. &lt;br /&gt;&lt;br /&gt;கேன்டீனை ஒட்டிய இடத்தில் அந்த தானே தேனீர் தயாரிக்கும் இயந்திரத்திடம் ஒரு கோப்பையை தந்துவிட்டு அது தேனீர் தயாரிக்கையில் வெறுமனே வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தேன் நான். எனக்கு சர்வ நிச்சயமாய் அது தேனீர் தந்துவிடும் என்று எனக்குத் தெரியும். ஆனால் அந்த தேனீர் நான் இழந்த புத்துணர்ச்சியை மீட்டுத் தருமா என்பதுதான் தெரியவில்லை. என் புத்துணர்வு கடல் கடந்து, இந்தியாவில் சிங்கார சென்னை மாநகரின் ஒரு ஓரத்தில், சுற்றிலும் ரோஜா, மல்லி, முல்லை மற்றும் இன்ன பிற அழகான பூத்துக்குலுங்கும் மலர்ச்செடிகளுடன், காய்கறி செடிகள், வாழை மரங்கள், இளந்தென்னை மரங்கள் வளர்ந்து சாய்ந்து கிடக்கும்  தோட்டத்தின் நடுவில் அமைந்த எங்கள் சொந்த வீட்டில் என் அம்மாவின் மடியிலோ, என் தங்கையின் புண்சிரிப்பிலோ, என் தந்தையின் நட்பான பேச்சிலோ என்னைத் தேடிக்கொண்டிருக்கும். நான் இங்கே தனியனாய் நிற்கிறேன் விட்டு வந்ததை தேடியபடி. &lt;br /&gt;&lt;br /&gt;பார்க்கப்போனால் புலம் பெயர்ந்து வாழும் பெருவாரியான தமிழர்களின் நிலை இது தான். எல்லோருக்கும் ஏதோ ஒரு தேவை. ஏதோ ஒரு தேடல். இது ஒரு ஓட்டம். வாழ்க்கை நாடகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாத்திரம். ஏன் இந்த பாத்திரம் எனக்கு என்று ஒருவரும் கேட்கலாகாது. அவரவர்க்கு ஒன்று நிச்சயம் உண்டு. அவரவர்க்கு ஒரு பாதை. சுவாரஸ்யம் என்னவெனில், அந்த பாதை தீர்மானிக்கப்படுவதும் அவரவராலேயேதான். ஆங்கிலத்தில் ரிகர்ஷன் என்பார்கள். தன்னைத்தானே கூப்பிட்டுக்கொள்ளும். எப்போது, எப்படிக் கூப்பிட வேண்டும், கூப்பிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதனையும் அதுவே தீர்மானிக்கும். கிட்டத்தட்ட அதுபோலத்தான். விளக்கம் சிறியதாய் தோன்றினாலும் இதுதான் வாழ்க்கை என்பதின் அடிப்படை நாதம். பெரியதாய் தோன்றும் அனைத்துமே சிறிதாய்த் தானே தொடங்கும். பிரபஞ்சமே அப்படித்தான் எனும்போது வாழ்க்கை மட்டும் விதிவிலக்கா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிந்தனையில் ஆழ்ந்திருந்த நான் தேனீர் கோப்பை நிரம்பியதை கவனிக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;'என்ன‌, இன்னிக்கு ஈவ்னிங் கெட்டுகெத‌ர்ல 'அது' எப்ப‌டி ந‌ட‌க்க‌ப்போகுதுனு யோச‌னையா?' தோளில் த‌ட்டிய‌ப‌டி என் சுய‌நினைவை எழுப்பினான் ர‌மேஷ். ர‌மேஷ் என்னுட‌ன் வேலை செய்ப‌வ‌ன். நானும் அவ‌னும் ஒரே ப்ராஜெக்ட். இல்லை என்ப‌தாய் த‌லைய‌சைத்தப‌டி என் தேனீர் கோப்பையை கையிலெடுத்துக் கொண்டு ந‌டக்கையில் பேச்சை தொட‌ர்ந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;'கேக்க‌னும்னு இருந்தேன் ரமேஷ். ஈவ்னிங் என்ன‌ நட‌க்க‌ப்போகுது?'&lt;br /&gt;&lt;br /&gt;'தெரியாத‌ மாதிரி கேக்குற‌ ப‌த்தியா. ச‌த்தியமா தெரியாதா? சும்மா காதுல‌ பூ சுத்தாத‌ பா' &lt;br /&gt;&lt;br /&gt;'ச்சீ, இதுல‌ என்ன‌ இருக்கு. ச‌த்திய‌மா தெரிய‌ல‌. என்ன‌னு சொல்லேன்'.&lt;br /&gt;&lt;br /&gt;'அய் அய் அய்... சும்மா உடான்ஸ் உட்றியே'.&lt;br /&gt;&lt;br /&gt;'அடப்பாவி, உண்மையாவே தெரியாதுடா. சொல்லேன்'.&lt;br /&gt;&lt;br /&gt;இத‌ற்க்குள் எங்க‌ள் இருக்கைக்கே வ‌ந்துவிட்டிருந்தோம். நாங்க‌ள் வ‌ரவே காத்திருந்த‌வ‌ர் போல், அந்த‌ வெள்ளைக்கார‌ க்ளைய‌ன்ட் தொட‌ர்ச்சியாய் ப்ராஜெக்ட் தொட‌ர்பாய் கேள்விக‌ள் கேட்க‌, ர‌மேஷ் வேலை செய்யும் மென்பொருள் ப‌குதி என்ப‌தால் அவ‌ன் ப‌தில் சொல்ல‌ நான் கேட்டுக்கொண்டிருந்தேன். என‌க்கு துளியும் ச‌ம்ப‌ந்த‌மில்லாத‌ ப‌குதி, இருந்தாலும் என்னிட‌ம் கேட்க‌ அவ‌ருக்கு எப்போதுமே கேள்விக‌ள் இருக்கும் என்ப‌தால் நானும் அருகேயே நிற்க‌ வேண்டிய‌தாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற‌ வார‌த்திலேயே கூட‌ அன்று மாலை ஏதோ ந‌ட‌க்க‌விருப்ப‌தாய் கிசுகிசுப்பாய் பேசிக்கொண்டார்க‌ள் என்ப‌து நினைவுக்கு வ‌ந்த‌து. நான் வேறு ஒரு வேலையில் மூழ்கி இருந்திருந்த‌தால் ச‌ரியாக‌ க‌வ‌னிக்க‌வில்லை. என்ன‌வாக‌ இருக்குமென்று யோச‌னையாக‌ இருந்த‌து. இந்த‌ நாட்டில் முனுக்கென்றால் த‌ண்ணி, பார்ட்டி, ந‌ட‌ன‌ம் என்று இருப்பார்க‌ள். அத‌னாலேயே, இங்கு சின்ன‌தாய் ஏதேனும் பார்ட்டி என்றால் கூட‌ எல்லோருக்குள்ளும் ஒரு கிசுகிசுப்பு வ‌ந்துவிடும். இப்ப‌டித்தான், 3 மாத‌ங்க‌ள் முன்பு ஒரு முறை பார்ட்டி என்று ப‌ஸ் வைத்து கூட்டிப்போனார்க‌ள். அங்கே, கோழி, ஆடு, பன்றி மற்றும் லாப்ஸ்டர் வகை மீனும், தொண்டை வ‌ரை குடிக்க‌ பல நாட்டு ம‌துபான‌ங்க‌ளுமாய் ஒரே கும்மாள‌ம் தான். அதே போல‌ இன்றும் ஏதோ இருக்க‌ப்போகிற‌து, அத‌ற்குத்தான் இத்த‌னை கிசுகிசுப்பு என்று ப‌ட்ட‌து என‌க்கு. என‌க்கு த‌ண்ணீ, த‌ம் போன்ற‌ எந்த‌ 'ந‌‌ல்ல‌(?!)' ப‌ழ‌க்க‌ங்க‌ளும் இல்லாத‌தால் என்னைப் பொதுவாக‌ இத‌ற்க்கெல்லாம் சேர்ப்ப‌தில்லை. அத‌னாலேயே இதெல்லாம் என‌க்கு நேர‌த்துக்கு தெரிய‌ வ‌ருவ‌தும் இல்லை. ந‌ல்ல‌தாயிற்று என்று நானும் என் பாட்டுக்கு இருந்துவிடுவேன். அன்றும் அப்ப‌டியே இருந்துவிட‌லாம் என்றிருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;அத்திப்பூ பூத்தாற்போல் என்றைக்காவது அந்த வெள்ளைக்கார க்ளையன்ட் என்னிடம் திரும்புவதற்க்குள்ளாக வேறு வேலை வந்துவிடும் அவருக்கு. அதன் காரணமாய் நான் தப்பித்துக்கொள்வேன். அன்று அப்படியே நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மாலை ஆறு ம‌ணி தாண்டிய‌து. &lt;br /&gt;&lt;br /&gt;கூட‌ வேலை செய்யும் வெள்ளைக்கார‌ ஆண்க‌ள், முட்டியோடு நின்றுபோன‌ பாவாடை போன்ற‌ ஒன்றை அணிந்து கொண்டார்க‌ள். மேலுக்கு ஒரு கறுப்பு கோட். அதில் சீராய் இடது, வலது என இருபக்கமும் தங்க நிறத்தில் பெரிய பட்டன்கள் தைத்திருந்தது. தலையில் நம் ஊர் பஞ்சாபிக்கள் கட்டும் டர்பன் போல், அதை விட பெரியதாய் ஆனால், வளைந்த வாயுள்ள வட நாட்டு மன்னர்கள் காலத்து கூஜாவை கவிழ்த்துப் போட்டாற் போன்ற ஒரு தொப்பி, முட்டி வரை நீண்ட இறுக்கமான, கறுப்பு சிவப்பு சாக்ஸ், கறுப்பு நிறத்தில் பூட்ஸ் அணிந்திருந்தார்கள். அவ‌ர்க‌ளின் பார‌ம்ப‌ரிய‌ உடையாம். அவ‌ர்க‌ளின் பார‌ம்ப‌ரிய‌ம் ப‌ற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வ‌ம் மேலோங்கிய‌தால் நானும் சுவார‌ஸ்ய‌மானேன். &lt;br /&gt;&lt;br /&gt;ப்ரேவ்ஹார்ட் என்னும் ஆங்கில‌ திரைப்ப‌ட‌த்தில் ந‌டிக‌ர் மெல் கிப்ச‌னை நேரில் பார்த்த‌ தோர‌ணை தெரிந்த‌து. அதில் அந்த‌ ந‌டிக‌ர் இப்ப‌டித்தான் உடை அணிந்திருப்பார். நாங்க‌ள் எல்லோரும் ஒரு பெரிய‌ ஹாலில் அரை வ‌ட்ட‌மாய் அணிவ‌குத்து வைக்க‌ப்ப‌ட்ட‌ இருக்கைக‌ளில் அம‌ர‌வைக்க‌ப்ப‌ட்டோம். முத‌லில், ஒரு இளைஞ‌ன், கையில் க‌றுப்புத் தோல் பையில் காற்று நிர‌ப்பி, அதில் மூன்று குழ‌ல்க‌ளை இணைத்து செய்த‌ வாத்திய‌த்தை இசைக்க‌த் தொட‌ங்கினான். இது ந‌ம்மூரில் நாத‌ஸ்வ‌ர‌ம் போல் ஸ்காட்லாண்டிற்கு போலும். காற்று தொட‌ர்ச்சியாய் அந்த‌ குழ‌ல்க‌ளில் சென்று ஓசையெழுப்ப‌, அந்த‌ பையில் காற்றை சேமிக்கிற‌ வ‌கையில் இருந்த‌தைப் பார்த்து நம்மூர் நாத‌ஸ்வ‌ர‌ இசைக்க‌லைஞ‌ர்க‌ள் எப்ப‌டித்தான் இந்த‌  பை ச‌மாச்சார‌ம் இல்லாம‌ல் வாசிக்கிறார்க‌ளோ என்று யோச‌னை வ‌ந்த‌து என‌க்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதைக் க‌வ‌னி என்ப‌து போல் நான் ர‌மேஷைப் பார்க்க‌ அவ‌ன், நான் ம‌திய‌ம் கேட்ட 'அதை' பற்றித்தான் கேட்கிறேன் என்று நினைத்துக்கொண்டு எனக்கு சஸ்பென்ஸ் கூட்டுவது போல் 'பொறுத்துருந்து பார்' என்பதாக சைகை செய்தான். நான் என்ன சொல்கிறேன், இவன் என்ன சொல்கிறான் என்பது போல் தோன்றியது எனக்கு. மனத்தில் தோன்றுவதை பிறருக்குச் சொல்வதற்குத்தான் மொழி. ஆனால் அந்த நொடியில் அந்த இசைச் சத்தத்தில் அது பலனளிக்கவில்லை. மெளனமே சிறந்தது என்று அந்த இசையை ரசிக்கத்தொடங்கி இருந்தேன் நான். இப்போது வரை அந்த 'அது' என்னவென்று தான் இன்னமும் எனக்கு தெரியவில்லை. என்னவாக இருக்கும் என்கிற கேள்வி எனக்குள்ளும் எழுந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;சற்று நேரத்தில், இசைக் கச்சேரி முடிந்தது,மதுபானத்துடன் உணவு பரிமாரப்பட்டது. ‌'இத‌ற்குத்தானே காத்திருந்தாய் ர‌மேஷா' என்ப‌துபோல் நான் ர‌மேஷைப் பார்க்க‌, அவ‌ன் 'பொறு பொறு இது இல்லை' என்ப‌தாக‌ சிர‌ம‌ப்ப‌ட்டு அவ‌ச‌ர‌மாய் சைகை செய்துவிட்டு, காலியாக‌ இருந்த‌ வாய்க்குள் ம‌துக்கோப்பையை அவ‌ச‌ர‌மாக‌க் க‌விழ்த்துக்கொண்டான். இதுவும் இல்லையா, வேறு என்ன‌வாக‌ இருக்கும் என்று யோசித்த‌ப‌டியே ப்ர‌ட்டில் ந‌னைத்த‌ சிக்க‌னை ருசிக்க‌ ஆர‌ம்பித்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;உண‌வு முடிந்த‌தும் ஐஸ்க்ரீம் பறிமாறினார்க‌ள். அப்போது ஒரு இளைஞன் வ‌ந்து எங்க‌ளுக்காக‌ அருகிலிருக்கும் ப‌ள்ளிக்கூட‌த்திலிருக்கும் குழ‌ந்தைக‌ள் சில‌ க‌லை நிக‌ழ்ச்சிக‌ள் ந‌ட‌த்துவார்க‌ள் என்றான். தொட‌ர்ச்சியாக‌, உள்ளே வ‌ந்த‌ ப‌தினெட்டு குழ‌ந்தைக‌ள், 6 முத‌ல் 8 வ‌ய‌திருக்கும் அவ‌ர்க‌ளுக்கு. 1760 க‌ளில் வாழ்ந்த‌ ராப‌ர்ட் ப‌ர்ன் என்னும் ஸ்காட் க‌விஞ‌ரின் க‌விதைக‌ளை , ஒருவர் ஒரு பாரா என்கிற முறையில் பாடினார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பாடல் வரிகளைக் காது கொடுத்துக்கேட்டதில் அனேக கவிதைகள், நம்மூர் கானா பாடல்களை ஒத்து இருந்தன. பல இடங்களில் எதுகை மோனைக்காக சில வார்த்தைகளை வேண்டுமென்றே இழுத்துக்கோர்த்திருந்தாலும், நான் கவனித்த ஒரே ஒரு தந்திரம், பாமரனுக்கும் புரியும் வகையில், மிக எளிதான, ஆனால் நகைப்புக்குரிய அர்த்தங்களையே பெரும்பாலும் உள்ளடக்கி இருந்தன அந்தக் கவிதைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த இசங்களின் வாடையும் இல்லை. பெரிதாக அர்த்தங்கள் ஏதும் இல்லை. ஆனால், கேட்கையில் சிரிப்பை வரவழைக்கக்கூடியதாய் இருந்தன பெரும்பாலும். சில நேரங்களில் லேசாக உணர்ச்சிவயப்படுத்தக்கூடியதாகவும் இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;' நாம் சேர்ந்ததும் இல்லை, பிரிந்ததும் இல்லை.&lt;br /&gt;அதனால் தானோ நம இதயங்கள் உடைந்ததில்லை.'&lt;br /&gt;&lt;br /&gt;என்பனவாக இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இதை விடவும் மிக நுண்ணிய, கருத்தாழமிக்க, சிந்தனைகளே காடுகளாய் மண்டிக்கிடக்கும் கவிதைகளை நம் தமிழில் படித்திருந்ததாகையில், இந்தக் கவிதைகள் அவ்வளவாக என் கவனத்தைக் களவாடவில்லை. ஆனால், என் சிந்தனைகளை வேறொன்று ஆக்கிரமித்திருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;நிக‌ழ்ச்சியை தொகுத்து வ‌ழ‌ங்கிய‌வ‌னும் ச‌ரி, க‌விதைக‌ளைப் பாடிய‌ குழ‌ந்தைக‌ளும் ச‌ரி, கூடியிருந்த‌ ச‌க‌ வெள்ளையின‌ ம‌க்க‌ளும் ச‌ரி, எல்லோரும் ஆங்கில‌த்திலேயே பேசினார்க‌ள், பாடினார்க‌ள். ஆங்கில‌ம் அவ‌ர்க‌ள‌து தாய்மொழி. அவர்கள் தாய்மொழியில் அவர்கள் நினைக்கிறார்கள், பேசுகிறார்கள், சிந்திக்கிறார்கள். இதே போன்றதொரு நிக‌ழ்வு இந்தியாவில் எந்த‌ மாநில‌த்திலும், ஏன் நம் தமிழகத்திலேயே ந‌ட‌ந்திருந்தாலும், கம்பனின் கவிதைகளையும், கண்ணதாசனின் பாடல்களையும் மட்டும் நிச்சயம் கேட்க முடியாது. த‌மிழையே கேட்டிருக்க‌ முடியுமா என்ப‌தும் ச‌ந்தேக‌மே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதிருந்து தமிழ் இலக்கியங்கள் புறக்கணிக்கப்பட்டன. தொழில் நுட்பம் வளரத்தொடங்கிய பின்னாகத்தான் இருக்க வேண்டும். கண்டுபிடிப்புக்களை பெரும்பாலும் வெள்ளையர்கள் மேற்கொள்ள, அதை அவர்கள் அவர்களின் மொழியிலேயே எழுத்தாக்கினார்கள். அதைப் படித்துத் தெரிந்துகொள்ள ஆங்கிலம் படிக்க வேண்டியதாயிற்று. உலகமயமாக்கப்பட்ட கொள்கைகள், சர்வதேச வர்த்தகத்தை ஊக்குவிக்க, நாடுகளின் கதவுகள் திறக்கப்பட, வெளி நாடுகளில் சென்று தொழில் செய்ய அவர்கள் மொழி கற்பது அவசியமாகிவிட இப்படித்தான் ஆங்கிலம் காலூன்றி இருக்க வேண்டும். பிற்பாடு, கல்வியைக் கொண்டே முன்னேருவதை பிரதானமாகக் கொண்ட நம்மவர்கள், போட்டியை சமாளிக்க, ஆங்கில உச்சரிப்பு மற்றும் சரளமாய் பேசுதல் முதலான கோணங்களிலும் போட்டி போட எத்தனிக்க, அதுவே அதிக அளவில் ஊக்குவிக்கப்பட, தமிழ் மெதுவாக பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால், நம்மவர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லையா? கண்டுபிடித்திருக்கிறார்கள். பண்படுத்தப்பட்ட வாழ்க்கைமுறை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அமைதியான வாழ்க்கை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எல்லா துறைகளின் மூலமும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சகல சக்திகளோடு உறுவான பூமியுடன் இணைந்து வாழ்வதெப்படி என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சிங்கம், புலி, கரடி, ஆடுகள் , மாடுகள் முதலான விலங்குகளும், மரம், செடி, கொடி, புல், பூண்டு என எல்லாவற்றையும் உள்ளடக்கிய இயற்கையோடு கைக்கோர்த்து வாழ்வதெப்படி என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இயற்கையோடு பேசுவதெப்படி என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இயற்கையை நம் தேவைக்கேற்ப இயற்கையின் ஒப்புதலோடு வளைப்பதெப்படியென்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;எதிரியைக் கொல்ல வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்தார்கள் அவர்கள். எதிரியுடன் இணக்கமாய்ப் பழகி அவனையும் நண்பனாக்கிடும் வித்தை கண்டுபிடித்தோம் நாம் . இரவெல்லாம் கன்விழித்து ஆராய்ச்சியென்ற பெயரில் எத்தனையோ அழித்து, ரசாயன விதைகளைக் கண்டுபிடித்தார்கள் அவர்கள் . சாணத்தையும், ஆடு மாடுகளின் சிறு நீரையும் கொண்டு, இயற்கையை வளர்த்து பருவ காலத்தில் மழை வரவழைத்து முப்போகம் விளைவிப்பதெப்படி என்று கண்டுபிடித்தோம் நாம் . லாபங்களை மும்மடங்கு ஆக்குவது எப்படியென்று சொல்லி பணத்தைக் கட்டிக்கொண்டு நிம்மதியில்லா இரவுகளைக் கண்டுபிடித்தார்கள் அவர்கள் . இருப்பதைக் கொண்டு எல்லோருக்கும் பங்கிட்டுக் கொடுத்து நிறைவாய் நிம்மதியாய், வெளிக்கதவுகளைக் கூட பூட்டாமல் படுத்துறங்குவது எப்படி எனக் கண்டுபிடித்தோம் நாம் . செயற்கைக்கோள் செய்து விண்ணில் உலவவிட்டு, உலகம் வெப்பமயமானதில் உறுகிய பனியில் சுனாமியும், மழையும், புயலும் எப்போது வரும் என்று முன்னரே சொல்லக் கண்டுபிடித்தார்கள் அவர்கள் . இயற்கையோடு இணைந்து, காடுகள் வளர்த்து, மழை கூட்டி, விவசாயம் செய்து புயலைத் தடுக்க ஓங்கி உயர்ந்த மரங்கள் செய்து, இயற்கையைக் கொண்டே இயற்கை சீற்றங்களை எப்படிக் கையாளளாம் என்று கண்டுபிடித்தோம் நாம் . &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடல் கடந்து, கண்டங்கள் கடந்து வாணிபம் செய்ய விமானங்கள் கண்டுபிடித்தார்கள் அவர்கள் . இருக்கும் இடத்திலேயே வாணிபம் செய்து பொருள் ஈட்டி, தனக்கு மிஞ்சியது போக தான தர்மங்கள் கூட செரிவாய்ச் செய்வதெப்படி என்று கண்டுபிடித்தோம் நாம் . இன்னும் சொல்லவேண்டுமானால் சொல்லிக்கொண்டே போகாலாம். அத்தனை கண்டுபிடித்திருக்கிறோம் நாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நம் கண்டுபிடிப்புக்கள் அவர்களின் கண்டுபிடிப்புக்களை விடவும் உயர்வானது, உன்னதமானது, மேன்மையான‌து, நிரந்தரமானது. அவர்கள் கண்டுபிடிப்புக்கள் தற்காலிக வெற்றியைத் தந்துவிடலாம். ஆனால் நிரந்தர வெற்றியை, வெற்றியோடு கூடிய நிம்மதியை, நம் கண்டுபிடிப்புக்கள் மட்டுமே தர இயலும். ஆனால் நாம் அப்ப‌டியான‌ க‌ண்டுபிடிப்புக்க‌ளை உள்ள‌ட‌க்கிய‌ நம் இலக்கியங்களை எங்கே திரும்பிப் பார்க்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;சிந்த‌னையில் மூழ்கியவாறே, மேலோட்டமாய் நான் ய‌தேச்ச‌யாக‌ திரும்புகையில், ஏதோ ஒரு இசையின் தாளத்திற்கு ர‌மேஷ் ஒரு வெள்ளைக்கார‌ பெண்ம‌ணியின் இடையில் கைவைத்த‌ப‌டி மெதுவாக‌, த‌ப்பும் த‌வ‌றுமாக‌, அவ‌ர்க‌ள் ந‌ட‌னத்தை ஆடியவாறே, என்னைப் பார்த்துக் கண்ணடித்தான். நான் வெறுமையாய் சிரித்துவிட்டு, அந்த இடத்தைவிட்டு திரும்பி நடக்கத் தொடங்கினேன். அந்த இசை மெல்ல மெல்ல என் காதுகளை விட்டு அகலத்தொடங்கியிருந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-  ‍ ராம்ப்ரசாத், சென்னை (ramprasath.ram@googlemail.com)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-8387667136439335772?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/8387667136439335772/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/04/blog-post.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/8387667136439335772'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/8387667136439335772'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/04/blog-post.html' title='இருத்தல் தொலைத்த தமிழ் - சிறுகதை'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-8920599029951664370</id><published>2011-03-22T04:39:00.000-07:00</published><updated>2011-03-22T04:39:05.474-07:00</updated><title type='text'>விதை - சிறுகதை</title><content type='html'>&lt;b&gt;&lt;i&gt;இச்சிறுகதை, மதுரையைச் சேர்ந்த அதிதி தொண்டு நிறுவனம் 2011 குடியரசு தினத்தையொட்டி நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான 'இறைவன் கொடுப்பது ஒரு வாழ்வு , மனிதன் கொடுப்பது மறுவாழ்வு' என்ற கருத்தை வலியுறுத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசை வென்றுள்ளதை என் வலைப்பூவில் முன்பே தெரிவித்திருந்தேன். அந்தச் சிறுகதை இதோ:&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-wAU-g1wQ3rA/TYiJwmUaIrI/AAAAAAAAAlI/MlyPhvJHyhI/s1600/seed.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="400" width="326" src="http://3.bp.blogspot.com/-wAU-g1wQ3rA/TYiJwmUaIrI/AAAAAAAAAlI/MlyPhvJHyhI/s400/seed.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;விதை - சிறுகதை&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வானம் பிரகாசமாக இருந்தது. அத்தனை வெயில். வெம்மை அதிகமாயிருந்ததாலோ என்னவோ ஒட்டுமொத்த சனமும் கிடைத்த நிழல்களில் பதுங்கிக் கொள்ள, அதையும் தாண்டி சிலர் வேகமாக பைக்குகளிலும், கார்களிலும் இடமும் வலமுமாக கடந்து போய்க்கொண்டிருந்தனர். கார்களில் சொல்வோர் பாடு பரவாயில்லை. ஏசி இருக்கும். பாவம், நடைராஜாக்கள் பாடி திண்டாட்டம்தான் என்று நினைத்துக்கொண்டே அன்னை பொறியியல் கல்லூரிக்கெதிரே இருந்த நிழற்குடையில் நின்றிருந்தார் வேதம். &lt;br /&gt;&lt;br /&gt;அவரைப் பற்றிய மேல்விவரங்கள் கொஞ்சம். அவர் ஒரு போலீஸ் அதிகாரி. வயது 42. உயரம் ஐந்தரை அடிக்கும் மேல். வாட்டசாட்டமான உடல்வாகு. கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில்  சப் ‍இன்ஸ்பெக்டர். அவர் அப்போது நின்றிருந்த இடத்துக்கு பக்கத்தில் தான் அவருக்கு வீடு. மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டுத்தான் ஆபீஸ் செல்வார். சாப்பிடும் நேரம் வரை, டிரைவர் ஜீப்பை பெட்ரோல் போல எடுத்துசெல்வார். சாப்பிட்டவுடன், வேதம் மெயின் ரோட்டிலுள்ள அந்த பேருந்து நிலைய நிழற்குடையில் காத்திருக்க, ஜீப் வந்ததும் ஏறிக்கொள்வார். இது தினமும் நடக்கும் ஒரு நிகழ்வு. அப்படி அவர் அன்று காத்திருக்கையில் தான் அதை கவனித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் அழகாக இருந்தாள். உயரம் ஐந்தரை அடி. சுண்டினால் ரத்தம் வரும் நிறம். அவள் அந்தப் பொறியியல் கல்லூரி வாசலைத்தாண்டி வெளியே வருவதைப் பார்க்கையில் அவளுக்கு ஒரு பதினெட்டு வயதிருக்கலாமென்று தோன்றியது. அதற்கு காரணங்கள் இல்லாமலில்லை. அவள் கையில் இருந்தது ஒரு டிராஃப்டர். இது பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள் இன்ஜினியரிங் டிராயிங் பாடத்துக்குப் பயன்படுத்துவது. பொதுவாக முலாமாண்டு மாணவர்கள் பதினெட்டு வயதானவர்களாகத்தான் இருப்பார்கள். கிட்டத்தட்ட அவரின் மகள் வயதுதான். ஆனால், இறுக்கமாய் கறுப்பு நிறத்தில் ஒரு டி &amp; ஜி டிசர்ட், டெனிம் ப்ளூ நிறத்தில் அதைவிட இறுக்கமாய் ஒரு ஜீன்ஸ் பாண்ட் அவளின் அவயங்களை மிக மிக சத்தமாகக் கூவிக் காட்சிப்பொருளாக்கிக்கொண்டிருந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;அந்த பஸ்ஸ்டாண்டில் அவரைப் போல் வெகு பலர் ஓரக்கண்களால் அவளையே நோட்டம் விடுவது தெரிந்தது. அதில் சிலர் அவளை விழுங்கிவிடுவது போல் பார்ப்பதையும் அவரால் கவனிக்கமுடிந்தது. இவர் கவனித்துக்கொண்டிருக்கையிலேயே சிலர் ரோட்டைக் கடந்து அவள் நின்ற பேருந்து நிறுத்தத்திற்கு சென்று நின்றுகொண்டனர். அவள் இது எதையும் கவனியாது தன்னுடைய மொபைலை நோண்டுவதும், அவ்வப்போது அதில் எதையோ படித்துவிட்டு  சிரிப்பதுவுமாக இருந்தாள். வேதத்துக்கு நடப்பது எதுவும் சரியெனப் பட்டிருக்கவில்லை. அவர் ஆயாசம் கொண்டவராய் பக்கவாட்டில் திரும்ப அவர் கண்ணில் பட்டது அந்தக் காட்சி. &lt;br /&gt;&lt;br /&gt;அந்த பஸ் ஸ்டாப்பின் அடுத்த முனையில் கால்களில் சப்பணிக்கால் போட்டு அமர்ந்திருந்த ஒருவன் அந்தப் பெண்ணையே வெறித்துக்கொண்டிருந்தான். வயது இருபத்தியிரண்டு இருக்கும். வெளுத்துப்போன‌ சட்டை,அதில் ஆங்காங்கே நூல் வெளியே வந்திருந்தது, சில இடங்களில் பொத்தான்களே இல்லாமல் சேஃப்டி பின் போடப்பட்டிருந்ததை இங்கிருந்தே கவனிக்க முடிந்தது. புழுதிபட்ட‌ தலைமுடி, சவரம் செய்யப்படாத முகம், ஒல்லியான உருவம், அடர் காப்பி நிறத்தில் ஒரு பாண்ட், அதுவும் கசங்கி சுருங்கி படுமோசமான நிலையில், காலில் செருப்பு கூட இருக்கவில்லை. அவன் கண்களைப் பார்க்கும் திசையை அவதானிக்கையில் அது அந்தப் பெண்ணின் கழுத்துக்குக் கீழே நிலைகுத்தியிருப்பதை அவரால் உணர முடிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;சற்று தொலைவில் ட்ராஃபிக் போல. கார்களும், சரக்கு லாரிகளும் விடாமல் ஹாரன் சத்தத்தை வைத்தே கூக்குரலிட்டுக்கொன்டிருந்தன. சிலர், கார் கண்ணாடி ஜன்னலைத் திறந்து எட்டிப்பார்த்து கத்தவும் செய்தனர். தவறாக எதையும் அனுமானித்துக்கொள்ளும் முன் ஒருமுறைக்கு இருமுறை சரி பார்த்துக்கொள்ளத்தோன்றியது. சற்றே அவர் பக்கவாட்டில் நடந்து அவனைக் கடந்து சிறிது தள்ளி நின்றுகொண்டு எதிரே பார்த்தார். அவள் இப்போதும் அவளின் மோபைலையே பார்த்தபடி நின்றிருந்தாள். அவர் திரும்பி அவனைப் பார்த்தார். அவன் பார்வை இப்போதும் அவள் மீதே. அதுவும் அவளின் கழுத்துக்கு கீழேயே. கொஞ்சம் விட்டாலும் ஓடிப்போய் அவள் கை பிடித்து இழுத்துவிடுவான் போலிருந்தது. அவருக்கு கோபம் வந்துவிட்டது. அவனை நோக்கி திரும்பி நடந்து அவன் முன்னே நின்றார். அவன் பார்வை இப்போது அவளிடமிருந்து திரும்பி அவரின் போலிஸ் பூட் ஷூவில் நிலைகுத்தி நின்றது. அவனை மிரட்டும் தோணியில் அவர் லேசான அடித்தொண்டையால் உரும, அவன் திரும்பி மேலே தலை திருப்பி அவரைப் பார்த்தான். அவன் முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல் இருந்தது அவர் கோபத்தை மேலும் கிளறி விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;'டேய், யார்ரா நீ?' அவனை அவர் அதட்ட, சில நொடிகள் அமைதி. பின், &lt;br /&gt;&lt;br /&gt;'ஸ்ஸ்.. ஸார், யாருங்க? என்னையா?' அவன் முகத்தில் இப்போதுதான் ஏதோ ஒன்றை புதியதாக கேள்விப்பட்டதான உணர்வு தெரிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;'என்னையே திருப்பி கேக்கறியா? நீ யார்ரா? இங்க என்ன பண்ற' இந்த முறை சற்று  முரடாகவே கேட்டார் அவர். &lt;br /&gt;&lt;br /&gt;அவன் கேள்விகள் தெரிந்த காரத்தில் சற்று பயந்திருக்கவேண்டும் அல்லது வினோதமாக உணர்ந்திருக்கவேண்டும். எழுந்துகொண்டான். எழுகையில் அவன் பலவீனமாக இருப்பதாகத் தோன்றியது. அவன் உயரம் அப்போதுதான் தெளிவாகத் தெரிந்தது. ஆறு அடி இருக்கலாம். ஒல்லியாக இருந்தான். அவன் கைகள் நிதானமின்றி காற்றில் பலவீனமாக அலைவதாகத் தோன்றியது. &lt;br /&gt;&lt;br /&gt;'ஸ்ஸ்..ஸார், நா.. நான் .. இங்க.. சும்ம்ம்மா...' என்றபடியே அவன் இழுக்க, அவர் கோபம் எல்லையை மீறியிருக்கவேண்டும். நாக்கைத் துறுத்தி பற்களுக்கிடையில் கடித்தவாறே சற்று சுளித்தபடி அவர் வலதுகையை தூக்கி அவனை அறைய ஓங்க, அவன் அப்போதும் ஏதொரு உணர்ச்சியும் அற்று நின்றிருந்தான். அவர் கையைத் தடுக்கவோ, அல்லது அடி மேலே படாமல் தவிர்க்கும் தன்னிச்சை முறுவலிப்போ கூட இல்லாமல் இருந்தது அவருக்கு வினோதமாய்ப் பட்டது.  &lt;br /&gt;&lt;br /&gt;ஓங்கிய கை அந்தரத்திலேயே நிற்க, அவர் புருவங்களைச் சுறுக்கி அவனை சந்தேகமாய் பார்க்க, அவன் குருடோ என்று முதன் முறையாகத் தோன்றியது. மெதுவாக உயர்த்திய கையை கீழிறக்கிக் கொண்டு அவனையே பார்த்தார் அவர். அவன் பார்வைக் கோணத்துக்கு நேர் எதிரே அவர் நின்றிருந்தபோதும், அவரின் கண்ணையோ, முகத்தையோ பார்க்கும் தோரணையில் இல்லாமல், எதையோ பார்த்த வகைக்கு அவன் நின்றிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஒனக்கு கண்ணு தெரியாதா?'.&lt;br /&gt;&lt;br /&gt;'காது தெரியும் சார்'.&lt;br /&gt;&lt;br /&gt;'என்ன?'.&lt;br /&gt;&lt;br /&gt;'எல்லாருக்கும் கண்ணுல குடுக்குற பார்வைய ஆண்டவன் எனக்கு காதுல குடுத்துட்டாரு சார். பெறவி குருடன் சார் நானு. சார், உங்க சூவுல லேஸு இல்லதானே சார். காலு வழுக்கும் சார் வெய்யில்ல. அதனால சீக்கிரம் லேஸூ போட்டுடுங்க சார்'. அவன் தன்னைப் பற்றி தானே அப்படிச் சொன்னது வித்தியாசமாயும், அவரால் ஜீரணித்துக்கொள்ள முடியாததாயும் இருந்தது. அத்தனை நேரம் அவன் தன் கண்களுக்கு பொறுக்கியாய் தெரிந்ததும், இப்போது சட்டென ஒரே நொடியில் அவன் அப்பாவியாய்த் தெரிவதும் அவரின் மேலோட்டப் பார்வைகளின் குறிப்புக்களை அவருக்கு எழுதித் தந்திருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், அவ‌ர் காலில் இருந்த ஷூவில் லேஸூ இல்லை தான். இரண்டு நாட்களாகவே இல்லை. எங்காவது பாட்டா ஷூகடை இருந்தால் வாங்க வேண்டும் என்று நினைப்பார். ஆனால் வேலை பலுவில் மறந்து போவார். லேஸூ இல்லாமல் நடந்து இந்த இரண்டு நாட்கள் பழகியும் விட்டது தான். லேஸூ இல்லாதது தெரியக்கூடாது என்றுதான் பாண்டால் மூடி கவர் செய்திருந்தார். பிறவிக்குருடன். ஷூ என்ன நிறம், எப்படி இருக்குமென்று கூடத்தெரியாது. அப்படியிருக்கையில் எப்படிக் கண்டுபிடித்தான். அந்த பேரிரைச்சலிலும் லேஸூ இல்லாத ஷூவை அதன் சப்தங்களை வைத்தே கண்டுகொண்டது ஆச்சர்யத்தை அளித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'நீ பிறவியிலேயே குருடு தானே. என் கால் ஷூ லேஸ் இல்லன்னு எப்படி கண்டுபுடிச்ச?'.&lt;br /&gt;&lt;br /&gt;'சார், உங்களுக்கு கண்ணு இருக்கு. அதனால காதுக்கு கேக்குற சத்தங்கள நீங்கலாம் அதிகம் கவனிக்க மாட்டீங்க. என் பாட்டி விறகு வெட்றப்போ பாத்துக்கிட்டு நிக்கிற எனக்கு கால்ல சிலாம்பு குத்தக்கூடாதுன்னு பக்கத்து வீட்டு மிலிட்டரி மாமா குடுத்த ஷூ ரெண்ட என் காலுல மாட்டிவிட்டுச்சு. அதுல லேஸூ இருக்காதுசார். அத போட்டுக்கிட்டு இழுத்து இழுத்து நடப்பேன் நான். அந்த ஷூவையோ, இல்ல இப்போ நான் போட்டுக்கிட்டு இருக்குற டிரஸ்ஸையோ நான் என் காதால்தான் பாத்திருக்கேன். எனக்கு தெரியும் சார் அந்த சத்தம்' என்றான் அவன். அவன் பார்வை அவரின் கண்களை முட்டாமல், அவரின் பேச்சில் சத்தங்கள் பிறக்கும் திசையை குத்துமதிப்பாகத் தேடி நொடிக்கு நொடி அலைந்துகொண்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;'ஹ்ம்ம் சரி.. உன் பேரன்ன?'&lt;br /&gt;&lt;br /&gt;'பாண்டி சார்'.&lt;br /&gt;&lt;br /&gt;'இங்க என்ன பண்றபா?'.&lt;br /&gt;&lt;br /&gt;'தெரியல சார். எங்க போறதுன்னு தெரியல'. அவன் தலைகுனிந்துகொண்டான். வாழ்க்கையில் ஒரு மனிதன் செல்ல வேண்டிய திசை தெரியாமல் அல்லாடுகையில் அவன் இயலாமை அந்தத் தலைகுனிவில் அப்பட்டமாய்த் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'ஏன், உனக்கு வீடு இல்லை?. அப்பா அம்மா?'.&lt;br /&gt;&lt;br /&gt;'இல்ல சார், நான் பொறக்குறதுக்கு முன்னாடியே அப்பா செத்துட்டார். அம்மா என்னை பெத்துபோட்டுட்டு போய் சேர்ந்துட்டா சார்'. &lt;br /&gt;&lt;br /&gt;'ஓஹ்... அப்ப சொந்த ஊரு? இவ்ளோ நாள் யாரோட இருந்த? உனக்கு வீடு எங்க?'.&lt;br /&gt;&lt;br /&gt;'சொந்த ஊரு மாயாரம் பக்கம் பேரளம் சார். பாட்டி தான் வளத்துச்சு. வெறகு வெட்டும் சார். நான் தூக்கிட்டு வருவேன். வித்தா சில நேரம் சோறு பொங்குற அளவுக்கு காசு கிடைக்கும், சில நேரம் க‌டலமுட்டாய்க்குதான் மிஞ்சும். விக்கிலனா பட்டினிதான் சார். பட்டினி கெடந்தாலும் ஒறவுன்னு சொல்லிக்க அது இருந்துச்சி. போன வாரம் அதும் செத்துபோச்சி சார். ஒத்த ஆளால வாடகை குடுக்க முடியல. வீடுன்னு ஒண்ணும் இல்ல. குருட்டுப்பயன்னு யாரும் வேலையும் குடுக்கல சார். அக்கம்பக்கம் என்னை பிச்சக்காரனாக்க பாத்தானுவ‌. அங்க இருக்க புடிக்கல. இருக்குற பணத்தை வச்சு மெட்ராஸ் போய் பொழைக்கலாம்னு வந்தேன் சார். நான் குருடுன்னு யாரும் வேலை தரல சார். பிச்சையடுத்து பொழைக்கிறதுக்கு போய் சேர்ந்துடலாம்னு இங்கயே உக்காந்துட்டேன் சார்.'&lt;br /&gt;&lt;br /&gt;கேட்டுக்கொண்டிருந்த‌ வேத‌த்துக்கு அதிர்ச்சியாக‌ இருந்த‌து. குருட‌ன். அதுவும் பிற‌வியிலிருந்தே. இறைவ‌னாய்ப் பார்த்து த‌ரும் வாழ்க்கை. அதை அப்ப‌டியே ஏற்க‌த்தான் வேண்டும். அத‌ற்கு ம‌றுப்பு சொல்ல‌ யாராலும் முடியாது. ஆனால், அந்த‌ வாழ்க்கையை எப்ப‌டி வாழ‌வேண்டுமென்று அவ‌ன் தான் முடிவுசெய்ய‌வேண்டும். சொல்வ‌து எளிது. செய்வ‌து க‌டின‌ம். அவ‌ர் த‌ன் க‌ண் பார்க்க‌ ப‌ல‌ பேர் ப‌ல‌வ‌ற்றை சொல்லியிருக்கிறார்க‌ள். ஆனால் செய்த‌தில்லை. இவ‌ன் சொல்ல‌வேயில்லை. ஆனால் சாக‌வும் துணிந்துவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த வேளை உணவுக்குக் கூட வக்கில்லாமல் , ஆனால் நெஞ்சு நிறைய வைராக்கியத்துடன், வாழ்க்கையை முடித்துக்கொள்ளவும் துணியும் ஒரு உலகம். அவர் அதுவரை பார்த்ததேயில்லை. சிக்னல்களிலும், கோயில்களிலும் குருட்டு மனிதர்கள் எத்தனையோ பேருக்கு ஐம்பது காசு, ஒரு ரூபாய் நாணயங்களை பிச்சை போடும்போது வராத கழிவிரக்கம், சிந்தனை, அனுசரனை, மரியாதை இப்போது இவனிடம் வந்தது அவருக்கு. அவன் ஒரு பரிசுத்தத்தை விடாப்பிடியாகப் பற்றிக்கொண்டு நிற்பது போன்ற‌தான‌ உண‌ர்வு அவ‌னைப் பார்க்கையில்.  &lt;br /&gt;&lt;br /&gt;'எப்போ கடைசியா சாப்பிட்ட?'.&lt;br /&gt;&lt;br /&gt;'நாலஞ்சு நாளாவுது சார். அதும் கூட பாதி பச்சத்தண்ணி தான் சார்'.&lt;br /&gt;&lt;br /&gt;'ஹ்ம்ம்... ' என்றுவிட்டு பாக்கேட்டில் கைவிட்டு ஒரு சின்ன ஃபைவ் ஸ்டார் சாக்லேட்டை எடுத்து நீட்டினார் 'இந்தா இத சாப்பிடு'.&lt;br /&gt;&lt;br /&gt;'சும்மா ஏதும் வேணாம்'. அவ‌ன் த‌லையை இட‌மும் வ‌ல‌முமாக‌ ஆட்டிய‌ப‌டி ஆணித்த‌ர‌மாய்ச் சொன்னான். அவ‌ன் ம‌றுப்பில், செய‌ற்கை தெரிய‌வில்லை. அத‌ற்கான‌ தேவையும் அவ‌னிட‌ம் இருக்க‌வில்லை என்ப‌தாக‌த் தோன்றிய‌து.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்திரமாக அவன் வேண்டாம் என்றது பாதையில் போக எத்தனித்து, கண்ணாடிக் கதவில் முட்டியது போன்றதான உணர்வைத்தந்தது. அவன் அத்தனை ஸ்திரமாக இருந்தது, அவனைப் பற்றிய அவரின் கணிப்பைத் தவறாக்கியிருந்தது. ஒன்றுமேயில்லாத இவனிடமும் இத்தனை வைராக்கியமா என்று நினைத்துக்கொண்டார். ஏன் கூடாது என‌வும் தோன்றிய‌து. &lt;br /&gt;&lt;br /&gt;'சரிப்பா, இந்தா இத புடி..' என்றுவிட்டு கையிலிருந்த ஃபைலை அவனிடம் தந்துவிட்டு 'இத தூக்கிக்கிட்டு என் கூட வா. இந்த வேலைக்கு சம்பளமா இத வச்சிக்க' என்றார். ஆமோதிப்பாய் சரி என்றுவிட்டு இரண்டு கைகளையும் நீட்டினான் அவன். இடது கையில் ஃபைலையும் வலது கையில் அந்தச் சாக்லேட்டையும் வைத்தார் வேதம். ஃபைலை கக்கத்தில் வைத்து இடுக்கிக்கொண்டு, வலதுகையிலிருந்த சாக்லேட்டை வேகமாக உரித்து உண்ணத்துவங்கினான் அவன். அவன் உணடு முடிக்கக் காத்திருந்தார் வேதம்.&lt;br /&gt;&lt;br /&gt;'என்னோட வரியா, வேலை தரேன், மாசம் ஆயிரம் ரூபாய் சம்பளம் தரேன், பண்றியா?'. அவன் சாக்லேட் கவரைக் கசக்கி உள்ளங்கையில் வைத்து அழுத்திக்கொண்டு கக்கத்தில் வைத்திருந்த ஃபைலை கைகளில் இறக்கிக் கொள்கையில் கேட்டார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஐயா....' என்று இழுத்தபடியே கண்ணீர் மல்க அவன் கீழே அவர் காலடியில் குனிந்து வலது கையால் துழாவ, அவசரமாய் தூக்கி நிறுத்தினார் வேதம். &lt;br /&gt;&lt;br /&gt;அவருக்குப் பின்னால், ஒரு போலீஸ் ஜீப் கிறீச்சிட்டு வந்து நின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;'வா என்னோட' என்றுவிட்டு அவன் கையைப் பிடித்து ஜீப்புக்கு அழைத்துச்சென்று பின்னால் கான்ஸ்டபுள் கனகு என்கிற கனகராஜ் அருகில் அமரவைத்துவிட்டு, முன்னால் ஏறிக்கொண்டார். &lt;br /&gt;&lt;br /&gt;'செல்வம், ஜீப்ப வேளச்சேரி ஆபிஸுக்கு விடு'. டிரைவர் ஜீப்பை விரட்டத்துவங்க ஜீப் அவரின் ஆபிஸை நோக்கி விரையத் துவங்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;வழியெங்கும் அவருக்கு சிந்தனையாகவே இருந்தது. கடவுள் கொடுத்த வாழ்க்கை. குருட்டு வாழ்க்கை. அது பாதி தூரத்திலேயே அஸ்தமனத்தில். ஆனால், நெஞ்சில் அவனுக்கு இருக்கும் வைராக்கியம் இருக்கிறதே. கொலைப் பசிக்குக் கூட விட்டுக்கொடுக்க முடியாத வைராக்கியம். தன் கண்ணில் இவன் இன்றைக்குப் பட்டிருக்கவில்லையெனில் ரோட்டோரமாய் அனாதைப் பிணம் என்று தனக்கு வாக்கிடாக்கியில் மெசேஜாகியிருப்பான் இவன். ஆனால் அதைப் பற்றி இவன் துளியும் கவலைப்படவில்லை. சாப்பிடும் ஒவ்வொரு பருக்கையும் உழைப்பின் ஊதியமாக இருக்கவேண்டும் என்று நினைப்பவன். இரண்டு கை, இரண்டு கால், கண், காது, மூக்கு என இருந்தும் ஊனமில்லாத உடல்கள், ரயில் நிலையங்களிலும், பேருந்துகளிலும் பிக்பாக்கேட் என ஊரை அடித்து உலையில் போடுவது இருக்க, இப்படியும் சில ஆத்மாக்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஊனமுற்ற யாருக்கும் மனம் ஊனமாயிருப்பதில்லை. ஆனால், உடலில் ஊனமில்லாத அனேகம் பேருக்கு மனம் ஊனமுற்றுத்தானிருக்கிறது. விந்தை உலகம். &lt;br /&gt;&lt;br /&gt;ஜீப் கிறீச்சிட்டு ஒரு வீட்டின் வாசலில் நின்றது. அது ஒரு இரண்டடுக்கு வீடு. வாசலில் பெரிய போர்டு. வேதம் சிஸ்டம்ஸ். வேதம் இறங்கிக்கொண்டு பின்னால் சென்று கான்ஸ்டபிளை விட்டு அவனை இறங்கச் சொல்லி இருவரையும் வீட்டிலுள்ளே அழைத்துப்போனார். &lt;br /&gt;&lt;br /&gt;ஒற்றை அறைதான் இருந்தது. வெளியே பார்த்த வீட்டின் ஒரு பகுதியை நிரந்தரமாகத் தடுத்து ஒரு கடைக்கு வாடகைக்கு விடும் நோக்கத்தில் கட்டப்பட்டிருந்தது. அது இப்போது வேதத்தின் ஆதாரங்களை அலசிஆராயும் இடமாக இருக்கிறது. அறையில் ஒரு ஓரத்தில் ஒரு பெரிய மேஜையில், கேஸட் போட்டு கேட்கும் ஆடியோ செட் ஆடையில்லாமல் எலும்புக்கூடாய் கிடந்தது. அதனருகே ஒரு கம்ப்யூட்டரும் பக்கத்தில் அனேகம் பத்திரிக்கைகளும் சில தஸ்தாவேஜ்களும் கிடக்க, அவைகளைத்தாண்டி ஒரு பெரிய ஸ்டீல் பெட்டி இழுத்தால் வெளிவரக்கூடிய பல்வேறு பெட்டிகளைக் கொண்டிருந்தது. சில பெட்டிகள் திறந்திருக்க, உள்ளே வரிசையாய் அடுக்கப்பட்ட கேஸட்களும் அவற்றின் மேல் சில பெயர்களும் எழுதப்பட்டிருந்தன. Local, Vizuppuram, Thindivanam இன்னும் என்னென்னவோ. அந்த மேஜைக்கும் முன்னே நீளவாக்கில் ஒரு சோபாவும், பக்கவாட்டில் இரண்டும் சேர்களும் கிடக்க, மேஜையை ஒட்டினாற்போல் ஒரு கதவு மூடப்பட்டிருந்தது. பாத்ரூமாக‌ இருந்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;'உக்காரு கனகு. உக்காருப்பா பாண்டி' என்று சொல்லிவிட்டு அந்த நீண்ட சோபாவில் அமர்ந்துகொண்டார். பாண்டியை ஒரு சேரில் உட்கார வைத்துவிட்டு தானும் பக்கத்திலேயே அமர்ந்து கொண்டார் கனகு என்கிற கனகராஜ்.&lt;br /&gt;&lt;br /&gt;'பாரு பாண்டி, என்கிட்ட வர கேஸ்கள்ல சில ஆதாரங்கள் கிடைக்கும். அதுல பலது டேப். அத ஓடவிட்டு அதுல என்னென்ன குரல் பதிவாகியிருக்கோ அதையெல்லாம் நீதான் பிரிச்சி சொல்லனும். சில நேரங்கள்ல சில குத்தவாளிங்களோட குரல் அந்த டேப்புல இருக்கான்னு நீ கண்டுபுடிச்சி சொல்லனும். அதான் உன் வேலை. அதுக்கு தான் உனக்கு இங்கே சம்பளம். ரொம்ப கவனமா செய்யனும். நீ சொல்றத வச்சித்தான் ஒரு நிரபராதி குற்றவாளி ஆகுறதும், ஒரு குற்றவாளி நிரபராதி ஆகுறதும். மாசம் சம்பளம் ஆயிரம் ரூபாய். வீட்டு மொட்டை மாடில கொட்டா போட்டுத்தாரேன். நீ அங்க தங்கிக்கோ'  &lt;br /&gt;&lt;br /&gt;'சரி சார்' என்றபடியே ஆமோதிப்பாய் தலையை ஆட்டியபடி கேட்டுக்கொண்டான் பாண்டி.&lt;br /&gt;&lt;br /&gt;கூடவே அமர்ந்திருந்த கனகு என்கிற கனகராஜ் ஏதோ சொல்ல எத்தனித்தவராய்த் தொடங்கி, பாண்டியை நினைத்து சற்று தயங்கியவராய் வேதத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தார். அவர் தன்னிடம் ஏதோ சொல்ல நினைப்பதை அவரின் பார்வையிலேயெ புரிந்துகொண்டார் அவர். &lt;br /&gt;&lt;br /&gt;'சரி, கனகு ..அந்த தாம்பரம் கொடவுன் திருட்டு கேஸ் என்னாச்சு?' என்றபடியே அந்த அறையை விட்டு வெளியே வந்தார். அதையே எதிர்பார்த்தவர்போல் உடனே கனகு எழுந்துகொண்டு வேதத்தை தொடர்ந்து அவரும் வெளியே வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;'சார், என்ன சார், அவன் ப்ளைன்ட் சார், அவனப்போயி இங்க...' என்றுவிட்டு இழுத்தார் கனகு.&lt;br /&gt;&lt;br /&gt;'கனகு, ரெண்டு நாளா என் ஷூல லேஸூ இல்ல. உங்களுக்குத் தெரியுமா?' கேட்டார் வேதம்.&lt;br /&gt;&lt;br /&gt;'அப்படியா, தெரியாதே சார்'.&lt;br /&gt;&lt;br /&gt;'ஆனா, இவன் கண்டுபுடிச்சிட்டான். அதுவும் ஜி.எஸ்.டி ரோட்ல இருந்த ட்ராஃபிக் சத்தத்துல‌. பொதுவா மாற்றுத்திறன் இருக்கறவங்க எல்லாருக்கும் அந்த ஊனத்த பாலன்ஸ் பண்ண வேற ஏதாவது திறமை இருக்கும் கனகு. இவனுக்கு அசாத்தியமா கேக்குற சக்தி இருக்கு. சத்தங்கள மொழிபெயர்க்கத்தெரிஞ்சிருக்கு. நமக்கெல்லாம் கண்ணு இருக்குறதுனாலயே காது சொல்றத நாம நம்ப மாட்டேங்குறோம். அதுல சில நேரம் தவறுகள் நடக்கலாம்தான். இந்த ரெண்டு நாளா நீங்க என் கால் ஷூ லேஸ கண்டுபிடிக்காம விட்டா மாதிரி. பாண்டி மாதிரி ஒரு புலன் இல்லாதவன் இன்னும் அதிகமா உண்ணிப்பா கவனிப்பான். அதனால அவன் நமக்கு நிறைய பயன்படுவான்னு தோணுது. அத ஏன் நமக்கு சாதகமா நம்ம இன்வெஸ்டிகேஷன்ஸ்க்கு யூஸ் பண்ணக் கூடாது? அவனுக்கும் அவனோட கவுரவத்தை விட்டுக்கொடுக்காம வாழ ஒரு வாழ்க்கை கிடைக்கும். நான் இன்னிக்கு இவன பாக்கலன்னா இவன் செத்தே போயிருக்கலாம். இந்த வேலை அவனுக்கு ஒரு மறுவாழ்வ நிச்சயமா தரும் கனகு'. சொல்லிக்கொண்டே இருந்தவரை வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்தார் கனகு. அங்கே ஒரு மறுவாழ்வுக்கான விதை ஆழமாக விதைக்கப்பட்டுக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முற்றும்.&lt;br /&gt;&lt;br /&gt; - ராம்ப்ரசாத் சென்னை(ramprasath.ram@googlemail.com)&lt;br /&gt;&lt;br /&gt;#நன்றி&lt;br /&gt;திண்ணை இணைய இதழ்&lt;br /&gt;கீற்று இலக்கிய இதழ்&lt;br /&gt;தமிழ் ஆசிரியர்கள் இணைய இதழ்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2597506826716291599-8920599029951664370?l=ramprasathkavithaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ramprasathkavithaigal.blogspot.com/feeds/8920599029951664370/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/03/blog-post_22.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/8920599029951664370'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2597506826716291599/posts/default/8920599029951664370'/><link rel='alternate' type='text/html' href='http://ramprasathkavithaigal.blogspot.com/2011/03/blog-post_22.html' title='விதை - சிறுகதை'/><author><name>ராம்ப்ர‌சாத் க‌விதைக‌ள்</name><uri>http://www.blogger.com/profile/16730598555327201750</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-wAU-g1wQ3rA/TYiJwmUaIrI/AAAAAAAAAlI/MlyPhvJHyhI/s72-c/seed.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2597506826716291599.post-4314849204695326454</id><published>2011-03-19T20:26:00.000-07:00</published><updated>2011-03-19T20:28:21.257-07:00</updated><title type='text'>ஒரே ஒரு துளி ‍- துப்பறியும் சிறுகதை</title><content type='html'>&lt;b&gt;&lt;i&gt;'ஒரே ஒரு துளி ‍- துப்பறியும் சிறுகதை' என்ற தலைப்பில் நான் எழுதிய துப்பறியும் சிறுகதை காற்றுவெளி இலக்கிய இதழில் (மார்ச் 2011) வெளியாகியுள்ளது. இதழின் முதல் பக்கம், சிறுகதை வெளியான இதழின் 47வது பக்கம் மற்றும் சிறுகதையின் கடைசி 61வது பக்கங்களின் பிரதிகள் இங்கே.&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-POzyaKpkrmk/TYVzQUlZndI/AAAAAAAAAlA/9L6t_QRlPNE/s1600/katruveli_march_2011.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="191" width="400" src="http://2.bp.blogspot.com/-POzyaKpkrmk/TYVzQUlZndI/AAAAAAAAAlA/9L6t_QRlPNE/s400/katruveli_march_2011.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;ஒரே ஒரு துளி - துப்பறியும் சிறுகதை&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'சார், வேதம் பேசறேன் சார். ஆமா சார். ஸ்பாட்க்கு இப்பதான் சார் வந்தேன். அந்த லேடியோட &lt;br /&gt;ஹஸ்பெண்ட் தான் கால் பண்ணினாரு. அவர்ட்ட நான் இன்னும் நேர்ல பேசல‌ சார். அவரு ரொம்ப நேரமா கால் பண்ணினாராம். அந்தம்மா எடுக்கலன்னு வந்திருக்காரு. ஒரு மூணு மணி நேரமா வீடு உள்பக்கமா பூட்டியே இருக்காம் சார். நான் ஃபர்ஸ்ட் அவர்கிட்ட டீடெய்ல்ட் ஃபர்ஸ்ட் இன்ஃபர்மேஷன் ரிப்போர்ட் வாங்கிடறேன் சார். ஐ வில் அப்டேட் யூ சார். ஓகே சார்' &lt;br /&gt;&lt;br /&gt;காதிலிருந்து ஃபோனை எடுத்து பாண்ட் பாக்கேட்டில் நுழைத்தார் இன்ஸ்பெக்டர் வேதம். இடது கை மணிக்கட்டைத் திருப்பி மணி பார்த்துக்கொண்டார். இரவு பத்து மணி. நேரமாகிவிட்டது. ஞாயிற்றுக்கிழமை வேறு. அடாப்ஸிக்கு விடிந்ததும் தான் தகவல் சொல்ல முடியுமென்று தோன்றியது. &lt;br /&gt;வேதம் ஆறடி உயரம். வயது நாற்பது இருக்கும். நல்ல கருப்பு நிறம். ஆனாலும் உடல் முழுவதும் பரவிய சீரான கறுப்பு. ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நிறம். அவருக்கு எந்த கேஸையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பார்க்க வராது. சரியான கோணத்தை முதலில் அடையாளம் கண்டுவிடுவார். நூல் பிடித்தார்ப் போல் விசாரணை செய்வார். சில கேஸ்கள் உடனடியாக முடிந்துவிடும். சில கேஸ்கள் இழுத்தடிக்கும். ஆனால், வேதம் கைவைத்தால் நிச்சயம் முடிந்துவிடும். முடித்துவிடுவார். அதுவும் கனகச்சிதமாக. அந்த இரவிலும் காக்கிச்சட்டையில் விரைப்பாகத்தான் இருந்தார். அவரின் இடுப்பில் ஒரு லட்டி தடிமனான கயிற்றால் கட்டப்பட்டு தொங்கிக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'பாரு, எப்போ போனான்டி அவன்? இல்ல இல்ல. நான் இங்க ஒரு கேஸ்க்கு வந்திருக்கேன். சரி சரி. நான் பிஸியா இருக்கேன். அப்புறம் கால் பண்றேன். ஓ அதுவா.... ' சப்‍இன்ஸ்பெக்டர் கந்தசாமி அவர் மனைவி பார்வதியுடன் பேசிக்கொண்டிருந்தது வேதத்தின் காதில் விழுந்தது. அதைக் கவனிக்க தன் ஆர்வத்தை செலவிட விரும்பாதவராய் வேதம் திரும்பி அந்த ஏரியாவை கவனமாக அவதானிக்கத்துவங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;நுங்கம்பாக்கத்தில் எப்போதும் அமைதியாக இருக்கும் அந்தத் தெரு அன்று, அந்த இரவில் தன் அமைதியை தொலைத்துவிட்டு அழுதுகொண்டிருந்த‌து. தெரு முழுவதும் ஆடம்பரமாய் வீடுகள். ஒன்று அபார்ட்மென்டுகளாக இருந்தன அல்லது ஆடம்பர வீடுகளாக இருந்தன. பல வீடுகளில் ஒன்றிரண்டு பேர்தான் இருப்பார்கள் போலத் தோன்றியது. ஆங்காங்கே மாடிகளிலும், பால்கனிகளிலும் யாரெனும் நின்று எட்டியெட்டிப் பார்த்தபடி நின்றிருந்தனர். விஷயம் தெரிந்துவிட்டது போலும் என்று நினைத்துக்கொண்டார். வேடிக்கை பார்ப்பதில் தான் எத்தனை ஆர்வம். கிட்டே போய், சாட்சி சொல்லக்கூப்பிட்டால் வீட்டுக்குள் அடைந்து கதவு சாத்திக்கொள்ளும் சாமான்யத்தனம் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வேதம் வந்த ஜீப் சற்றுத் தள்ளி நிறுத்தியிருக்க, வேதத்தின் அஸிஸ்டென்ட்  கந்தசாமி தன்னை நோக்கி வருவதை கவனித்துவிட்டு அபார்ட்மென்ட் வாசலை நெருங்க, வேதத்தை வாசலில் பார்த்துவிட்டு ஒருவர் நடையில் வேகங்கூட்டியவராய் நெருங்கினார். அவருக்கு வயது அறுபதைக் கடந்திருக்கலாமென்று தோன்றியது. அந்த இரவு நேரத்திலும் அவர் பாண்டும், சட்டையும் அணிந்திருந்தது அவர் தன்னை எதிர்பார்த்திருப்பாரோ என்று நினைக்கத்தோன்றியது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'சார், நான் சம்பந்தம் சார். சம்பந்தமூர்த்தி. அபார்ட்மென்ட் செக்ரட்டெரி சார்' அவர் தன்னைத் தானே அறிமுகப்படுத்திக்கொண்டதை அவதானித்துக்கொண்டிருந்தார் வேதம். அவர் அறிமுகப்படுத்திக்கொண்ட தோரணையை பார
